Monday, 3 November 2014

"என் காதல் சொல்ல தேவையில்லை.."

ஹலோ...எப்டி இருக்கீங்க??எவ்ளோ நாளாச்சு கதை சொல்லி...திரும்பவும் ஒரு தொடர்கதை..உங்களுக்காக...படியுங்க..மறக்காம கமெண்ட் குடுங்க..அதுக்கு முன்னாடி ..இந்த கதை எதை பத்தின்னு நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா??அதுக்காக ஒரு குட்டி முன்னுரை...

ஒரு பொண்ணு ஒரு பையன் .ரெண்டு பேரும் லவ் பண்றாங்க..பொண்ணு நல்லவ பையனும் நல்லவன்...ரெண்டு பேருக்கும் நடுவுல நல்ல understanding . ஆனாலும் அந்த காதல் ஜெயிக்கல அப்டின்னா அதுக்கு முக்கியமான காரணம் பெண்மையாக தான் இருக்க முடியும்...ஷ்..ஷ்..தாய்க்குலமே..சண்டைக்கு வராதீங்க... முழுசா படியுங்க..

"நீ மட்டும் என்னை அவனுக்கு கட்டி வைக்கலன்னா கத்தி எடுத்து சதக் சதக் னு என்னை நானே குத்திக்குவேன்.." என்றெல்லாம் போராடும் குணம் கொண்ட பெண்கள் இங்கே குறைவு..அடி உதை வாங்கி காதலுக்காக போராடும் அளவுக்கு சாதாரண பெண்மைக்கு சக்தி கிடையாது...ஒரு நல்ல காதல் ஜெயிக்கணும்னா ஆணை விட பெண்ணுக்கு அதிக மனோ தைரியம் தேவை..வைராக்கியம் தேவை..அப்படி அதிக மனோ தைரியம் உள்ள ஒரு பெண்ணின் காதல் கதை..அப்றோம் ..ஒரு முக்கியமான விஷயம்..இந்த கதையில் வரும் சம்பவங்கள் பாத்திரங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையே..கதைய படியுங்க கமெண்ட குடுங்க...

."என் காதல் சொல்ல தேவையில்லை...". 

Episode-1
------------


"டாக்டர்..எனக்கு பைத்தியமாம் ..பேய் புடிச்சுருக்காம்..விடியிறதுக்கு முன்னாடியே எழுப்பி என் தலையில எலுமிச்சம் பழத்தை தேய்க்கிறாங்க..நான் பைத்தியம் இல்ல டாக்டர்..நான் பைத்தியம் இல்ல.."பதற்றத்தோடு பேசினாள் ராதிகா..

"முதல்ல உட்காரும்மா...தண்ணி வேணுமா??"என்று டாக்டர் சொன்னதும் சற்று அமைதியானவள் , முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்..

"இல்ல Dr .பரவாயில்லை.." என்றபடி

ஒரு முறை சுற்றுமுற்றும் பார்த்தாள் ..அது ஒரு சிறிய அறை ..சுவரின் ஒரு ஓரத்தில்  கருப்பு வெள்ளை  கோடுகளுடன் கூடிய ஒரு போர்டு இருந்தது..எதிரில் இருந்த மேஜையில்  மஞ்சள் பூக்கள் நிறைந்த flower  vase  ஒரு புறமும் , மத்தியில் "டாக்டர் சுபா சத்தியநாதன்,சைக்காத்ரிஸ்ட் ",என்ற பெயர் பலகையும் இருந்தன..


Dr .சுபா சத்தியநாதன்...நீல நிற காட்டன் புடவை, தலையில் எட்டி பார்க்கும் வெள்ளிக் கம்பிகள், தங்க நிறத்தில் ஒரு நடுத்தர வயது பெண்மணி..மிகச் சிறந்த மனோதத்துவ நிபுணர்..

"உன் பேரு என்ன மா?"

"ராதிகா"

"வயசு"

"25"

டாக்டர் தன் நோட் பேடில் குறித்துக்கொண்டார்..

"ம்ம்..இப்போ சொல்லு மா..என்ன பிரச்சன??"

"பிரச்சினை....ம்ம்ம்..எல்லாமே பிரச்சினை தான் டாக்டர்..எல்லா பிரச்சினைக்கும் மூல காரணம் கண்ணன் தான் டாக்டர்.." என்று தலைகுனிந்தவள் சற்று தயக்கத்தோடு,,

"நான் கண்ணனை லவ் பண்றேன் ...அவன் கிட்ட எத்தனை முறை என் லவ்வ சொன்னேன் தெரியுமா???ஆனா அவன் அக்செப்ட் பண்ணவே இல்ல.."

"ம்ம்..காதல் தோல்வி..." என்ற Dr  சுபாவிற்கு அது ஒன்றும் பெரிய விஷயமாகவே தோன்றவில்லை..கடந்த பதினைந்து ஆண்டுகளில் இது மாதிரி எத்தனையோ கேஸ்களை பார்த்திருக்கிறார்..

ராதிகாவோ,

"சாதாரண தோல்வி இல்லை டாக்டர்..வெற்றிகரமான தோல்வி.." என்றாள்

"அப்டின்னா??"

"அப்டின்னா..ஒரு முறை காதலை சொல்லி அது மறுக்கப் பட்டால் ..அதை தோல்வின்னு சொல்லலாம்...ஒரு பெண் தன் காதலை ஒரு முறை சொல்வதே அநாகரிகம் என்பார்கள்..நானோ அந்த அநாகரிகத்தை 16 முறை செய்திருக்கிறேன்..பதினாறு முறை காதலை சொல்லி ஒவ்வொரு முறையும் பல்பு வாங்கினேன் டாக்டர்.."

வலி நிறைந்த ஒரு விஷயத்தை சிரித்தபடியே ராதிகா சொன்ன போது,டாக்டருக்கு அவளை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் போல் தோன்றியது...

"ம்ம்..நார்மலா ஒரு முறை reject பண்ணினாலே depress  ஆயிடுவாங்க..நீங்க  எப்டி..???"

"விழாமல் சைக்கிள் ஓட்டி கத்துக்க முடியுமா டாக்டர்..இந்த காதல் தோல்விய நான் அப்டி தான் எடுத்துகிட்டேன்.அவன் ஒவ்வொரு முறை மறுத்த போதும் அவன இம்ப்ரெஸ் பண்ண புதுசா என்ன பண்ணலாம்னு யோசிக்க ஆரம்பிச்சுடுவேன்.."

""வெரி குட்..உங்க attitude  எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு...கண்ணன் எப்போ முதல்ல மீட் பண்ணீங்க??எத்தன நாளா லவ் பண்றீங்க??

"ஐயோ நாள் இல்ல டாக்டர்..வருஷம்...

அப்போ எனக்கு ஏழு வயசு தான் இருக்கும்..

என் வீட்டு ஜன்னல் வழியே வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்....அங்கே கண்ணன் ராக்கியோடு விளையாடிக் கொண்டிருந்தான்...ராக்கின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் .." என்று அவள் முடிப்பதற்குள்..

"ஓ..கண்ணனுக்கு முன்னாடி உங்களுக்கு ராக்கிய ரொம்ப புடிச்சிருந்தது..அப்டி தானே.." என்றார் டாக்டர்..

"ஐயோ ராக்கி அவனோட நாய்க் குட்டி டாக்டர்.."

"ஒ..சாரி மா..நீங்க சொல்லுங்க" என்று புன்னகையோடு டாக்டர் சொன்னதும் மீண்டும் தொடர்ந்தாள்..

"ராக்கிய பார்த்ததும் எனக்கும் அவன் கூட விளையாடனும் போல இருந்துச்சு..அதனால் கண்ணன் கிட்ட போனேன்..கண்ணனுக்கு என்னை  
விட ஒரு வயசு தான் அதிகம் இருக்கும்..

அவனிடம் "ராக்கிய என் கிட்டே குடேன்.." என்றேன்..

"ம்ஹூம்..என்னால முடியாது..."என்றான் அவன்..

"ப்ளீஸ் .."என்று நான் கெஞ்சுவதை பார்த்து..

"சரி..கலர் விளையாட்டு விளையாடுவோம்...நீ ஜெயிச்சுட்டா ராக்கிய தர்றேன்.." என்று அவன் சொன்னதால் நானும் ஒப்புக் கொண்டேன்..

"சரி...ஆனா எனக்கு விளையாட தெரியாதே.."

"நான் தான் கேச்சர்..நான் என்ன கலர் சொல்றேனோ அந்த கலரை நீ தொட்டிருந்தா உன்னை நான் பிடிக்க முடியாது ..ஓகே வா  "

சரி" என்று நான் சொல்ல , 
விளையாட்டு தொடங்கியது..

"டிக் டிக் "

"யாரது?"

"திருடன்"

"என்ன வேணும் ?"

"நகை வேணும்.."

"என்ன நகை"

"கலர் நகை"

"என்ன கலர்"

"பச்சை " என்று கண்ணன் சொல்ல..

சுற்றி நிற்கும் இலை தழை எல்லாம் என் கண்ணில் படவில்லை..கண்ணன் மட்டுமே தெரிந்தான்..அவன் பச்சை கலர் சட்டை போட்டிருந்தான்..அவன் என்னை பிடிப்பதற்காக என்னை நோக்கி ஓடி வந்தான்...நானோ அவன் சட்டையை தொடுவதற்காக அவனை நோக்கி ஓடினேன்.அவன் என்னை தொட வந்தான் ..நான் அவனை இறுக பற்றிக் கொண்டேன்..

"நான் புடிச்சுட்டேன்.." என்றான் அவன்

நான் புடிச்சுட்டேன்...என்றேன் நான்..

"நீ அவுட்டு.."

"இல்ல..நான் தான் பச்ச கலர் புடிச்சுட்டேனே "

"லூசு ..நான் தான் catcher .."

"நீ தானே பச்ச கலர பிடிக்கணும்னு சொன்ன.."என்ற படி அவனை இறுக பிடித்து ..நான் அவுட் இல்ல " என்றேன்..

"ஐயோ உனக்கு விளையாட்டே தெரியல..என்ன விடு டி.."என்ற படி என்னை பிடித்து தள்ளினான்...கீழே விழுந்ததில் என் கால் முட்டியில் சிறிய உராய்வு ஏற்பட்டு ரத்தம் கசிந்தது..நடந்ததை பார்த்துக் கொண்டிருந்த அம்மா ஓடி வந்து..தர தரவென்று என்னை இழுத்துக்கொண்டு போக..நானோ,

"அம்மா..ராக்கி வேணும்மா..என்று அழுத படியே  கண்ணனை பார்த்தேன்...அவனோ பரிதாபமாக என்னை பார்த்தான்..

அடுத்த நாள் காலையில், 

யாரோ வீட்டு வாசலில் என்னை அழைப்பது போல் இருந்தது...

வெளியே பார்த்த போது கையில் ராக்கியோடு கண்ணன் நின்று கொண்டிருந்தான்...

"இந்தா வச்சுக்கோ...இனிமே அழாத.." என்று ராக்கியை என் கையில் கொடுத்தான்..

நானோ ராக்கியை மறந்து கண்ணனை பார்த்துக் கொண்டிருந்தேன்..

"ம்ம்..சின்ன வயசுல இருந்தே விரும்புறீங்க...ஆனா நீங்க சொல்றத வச்சு பார்க்கும் போது ,அந்த பையனுக்கும் உங்கள பிடிக்கும்னு தான் தோணுது.."

"அவனுக்கு என்ன பிடிக்கும் டாக்டர்..பிடிக்கல பிடிக்கலன்னு பொய் சொல்றான்.."

"ம்ம்..பிடிக்கும்..பிடிக்கல..புரியலையே மா"

பல வருடங்கள் காதல் எனும் கருவை மனதில் சுமந்து, மேலும்  சுமக்கும் வலிமை தீர்ந்து,வலி தாளாமல் ஒரு நாள் பிரசவித்து , தன் காதல் எனும் குழந்தை இறந்தே பிறந்தது என்று தெரிந்தும், அந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் ,இறந்த அக்குழந்தைக்கு பால் கொடுக்க மார்பு தடவும் பேதை தாயின் தாய்மை  உள்ளத்தோடு காதலிக்கும் தனக்கே தன் காதல் தோல்விக்கு காரணம் புரியாத போது ,இந்த டாக்டருக்கு எப்படி புரிய போகிறது என்று உள்ளூர எண்ணியவள்,

இப்போ அது கூட பிரச்சன இல்ல டாக்டர் ...வீட்ல..." என்று எதையோ பேச தொடங்கினாள்..

(தொடரும்....)

No comments:

Post a Comment