Friday 25 October 2013

நினைவெல்லாம் அருண்..

episode 7
----------

"ஏய் நந்து!!!நீ இன்னும் இறங்கலியா ?" என்றபடி அவளை நோக்கி இரண்டடி எடுத்து வைத்து ஒரு வழியாக இறக்கி விட்டாள் ராதா ..

ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டிருந்த அருண்..," நந்து!" என்றபடி அவள் அருகில் சென்றான்..

அவளோ " நான் அருண் கிட்ட போகணும்..நான் என் அருண் கிட்ட போகணும்  " என்று அதே வரியை தான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாள்..
 அவன் அவள் தோளை பிடித்து உலுக்கினான்..

"நந்து!!அருண் தான் வந்திருக்கேன்!!பார் என்னை!!" என்றான்..

அவளோ ," அருண்..அருண்.." என்றபடி ,அதற்கு மேல் பேச சற்றும் திராணி இல்லாதவளாய் , அவன் நெஞ்சோடு  சாய்ந்தாள்.

மருத்துவமனையில் ,

நடந்ததையெல்லாம் அருணிடம் விவரித்தாள் ராதா ..

நந்திநிக்கோ இன்னும் நினைவு திரும்பவில்லை ..அருண் ராதாவை நோக்கி,

" உன்னை நம்பி தானே அனுப்பி வச்சேன் .." என்றான்..ராதாவுக்கோ கோபம் வந்தது..

" உங்க பயந்தாங்கொள்ளி பொண்டாட்டிய என் தலைல கட்டி அனுப்பி வச்சிட்டு இப்போ பழிய தூக்கி என் மேலே போடுறீங்களா??நேற்று ராத்திரி முதல் இங்க வந்து சேர்வது வரை எப்போவும் ," நான் அருண் கிட்ட போகணும்..நான் அருண் கிட்ட போகணும் னு  புலம்பிகிட்டே இருந்தா ..நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா??அவ்வளவு ஏன்..நேற்று ராத்திரி பத்து மணிக்கெல்லாம் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துட்டோம்..எத்தன முறை அவ கிட்ட சாப்பிடு சாப்பிடுன்னு சொன்னேன் தெரியுமா??காலையில வாங்கின பிரெட் கூட இருந்துச்சு..நான் தோசை வாங்கி சாப்ட்டேன் ..ஆனா அவ...நான் வாங்கி குடுத்த தோசைய தொட்டு கூட பார்க்கல...,சும்மா " நான் அருண் கிட்ட போகணும்னு புலம்பிகிட்டே  இருந்தா..!!!ஒரு நாள் முழுக்க சாப்டாமலே இருந்தா மயக்கம் வராம வேறென்ன பண்ணுமாம்..!!" என்று பேசி முடித்த போது அவள் கண்கள் லேசாக பனித்தது...

அவள் நிலையை புரிந்து கொண்டவன் , சற்று நிதானித்து ." ம்ம்..முதலில் உட்கார்" என்று அருகில் இருந்த நாற்காலியை இழுத்துபோட்டு ,அவளை அமர செய்தான்..

"நந்து பக்கத்துலையே இரு..இதோ வந்துடுறேன்.." என்று அந்த அறையை விட்டு வெளியே சென்றான்..

சில நிமிடங்களில் கையில் ஒரு சிறிய பொட்டலத்தோடு திரும்ப வந்தான்..

" என்ன இது?" என்றாள் ராதா..

"இட்லி வாங்கிட்டு வந்திருக்கேன்..முதல்ல சாப்பிடு " என்று அவள் கையில் அந்த பொட்டலத்தை  கொடுத்தான் ..

அதை வாங்கி கொண்ட ராதா,கையில் தன் கைபேசியை எடுத்துக் கொண்டு..

" இதோ வந்துடுறேன்.."என்றபடி வெளியே சென்றாள்..

அவனோ  படுக்கையில் கண்கள் மூடிய படி கிடந்த தன மனைவியின் அருகில் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு , அதில் உட்கார்ந்து கொண்டான்..


அவள் முகத்தையே  பார்த்த படி அமர்ந்திருந்தான்..

என்றோ நடந்த அந்த சம்பவம் அவன் நினைவிற்கு வந்தது..


அன்று இருவருமாய் ஒரு பெரிய ஷாப்பிங் மாலிற்குள் நுழைந்தனர்..

ஏதேதோ சாமான்களை வாங்கிவிட்டு அங்கிருந்த பெண்ணிடம்,

" கண் மை இருக்கா?" என்றாள் நந்தினி..

"ம்ம்..இருக்கு மேடம்...வெறும் 200 ரூபாய் மட்டும் தான் " என்றாள் அந்த பெண்..

"இருநூறு ரூபாயா ?" என்று அதிர்ச்சியோடு கேட்ட அருணிடம்,

" ஆமா சார் ...இந்த கண் மை smudge  ஆகாது ..( கலைந்து போகாது..)அப்டியே கண்ணுக்குள்ளேயே இருக்கும்.." என்றாள் அந்த பெண்..

" இதோ இது எத்தனை ரூபாய் ?" என்று தன கையில் ஒரு சிறிய கண் மை டப்பாவை எடுத்தபடி அந்த பெண்ணிடம் வினவினாள் நந்தினி..

"அது கலைந்து போகும் மேடம் ...அஞ்சு ரூபா தான் " என்றாள் அந்த பெண்..

அதற்கு நந்தினி பதில் சொல்வதற்குள் ,

"யா...அந்த மாதிரி smudge ஆகுற மை தான் வேணும்..." என்றான் அருண்..

பதில் சொல்ல அவன் ஏன் முந்திக்கொண்டான்..???காரணம் இல்லாமல் இல்லை..

அவள் கண்ணில் மை இடுவாள் ..கொஞ்சம் நேரத்தில் அது கலைந்து கண்ணிற்கு வெளியே வந்து விடும்.."ஏ நந்து!!மை கலஞ்சிருக்கு பாரு " என்பான் அவன்..உடனே அவள் தன் வலது கை ஆள்காட்டி விரலால் , தன் கண்ணிற்கு கீழே வழிந்திருக்கும் மையை அழகாக துடைப்பாள்..ஆனாலும் முழுமையாய் துடைத்திருக்க மாட்டாள் ..உடனே அவன் அவள் அருகில் போய் அவள் விழிக்கு வெளியே வழிந்திருக்கும் மையை தன் கையால் துடைப்பான்..இப்படி வெறும் அஞ்சு ரூபாயில் அடிக்கடி நடக்கும் காதல் காட்சியை இருநூறு ரூபாய் கொடுத்து எந்த மடையனாவது தொலைப்பானா???

விற்பனைக்கு நின்ற பெண் வைத்த கண் வாங்காமல் அருணையே பார்த்துக் கொண்டு நின்றாள். 


அதை கவனித்த நந்தினியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன..

"ஹலோ " என்று அவள் சொல்வது கூட தெரியாமல் அந்த பெண் அருணையே பார்த்து கொண்டிருந்தாள் ..

நந்தினி மீண்டும் தன் கையை சொடுக்கி , 

" ஹலோ , உங்கள தான்.." ம்ம்..???" என்று தன் புருவத்தை உயர்த்தியபடி கேட்டாள்..

அதற்கு அந்த பெண்.." மேடம்..யுவர் ஹஸ்பன்ட் இஸ் ரியலி ஹாண்ட்சம்.." என்றாள் ..

அருண் தனக்கு மட்டும் உரிமையானவன் என்பதை அழுத்தமாக சொல்வதற்காகவோ என்னவோ ,நந்தினிஅருனின் கை இடுக்கில் தன் கையை நுழைத்து இறுக பற்றிய படி ,

"ஐ நோ " என்றாள்..

அதற்கு மேல் அவள் அங்கே நிற்கவில்லை ..

"மையும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் !வாங்க போகலாம் !!" என்றபடி  அவனை அப்படியே இழுத்து செல்ல முயன்றாள்..

அவனோ.." ஏன் நந்து..இப்டி பண்ற??உனக்கு வேணும்னா இருநூறு ரூபா மையே வாங்கி தர்றேன்..!!" என்றான்..

அவளோ.."ஒன்னும் தேவையில்ல..வேற கடையில வாங்கிக்கலாம்.." 
என்று பிடிவாதமாய் அவனை இழுத்துச் சென்றாள்..அப்படி போகும் போது,ஒரு முறை திரும்பி விற்பனைக்காக நின்ற அந்த பெண்ணை சுட்டெரித்து விடுவது போல் ஒரு பார்வை பார்த்தாள்..

அந்த கனல் கக்கும் விழிகள் இன்றோ மூடிய நிலையில் ..அருணால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..நெஞ்சொரமாய் வலிப்பது போல் இருந்தது..எப்போது விழிப்பாள் எப்போது பேசுவாள் என்ற ஏக்கத்தோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

சற்று நேரத்தில் விழி மலர் விரிந்தது..அவள் தன் இமை கைகளை தட்டியபடி அவனை ஒரு முறை பார்த்தாள் ..தன் கைகளை மெல்ல நகர்த்தி படுக்கையின் மீதிருந்த அவனது கைகள் மீது வைத்தாள்..

"அருண்.." என்றவளின் மெல்லிய குரல் கேட்டு  அவளை பார்த்தான் அவன்...

அவளோ விம்மி விம்மி,

"என்னை ஏன் தனியா அனுப்பி வச்ச??நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா?? " என்றாள் அவனை நோக்கி..

"நானா போன்னு சொன்னேன்.." என்றான் அவன்..

"நான் என்ன பண்ண??நான் சரின்னு நெனச்சு பண்றது எல்லாமே தப்பாயிடுது..இப்போ பாரு..நீ கூட என்ன திட்டுற..ஏன் அருண்..நான் திரும்பவும் இந்த மாதிரி எதாச்சு தப்பு பண்ணினா நீ என்னை வெறுத்துடுவியா??"

"ம்ம்...அப்போ நீ திரும்பவும் தப்பு பண்ணுவ..அப்டி தானே.." என்றான் அவன்..

ஏற்கனவே கண்ணீரோடு இருந்தவளின் முக வாட்டத்தை பொறுக்க மாட்டாமல்..

அவள் தலையில் லேசாக தட்டி..

"குழந்தை தப்பு பண்ணினா அம்மா கோவப்படுவா ...ஆனா வெறுக்க மாட்டா..என்னால உன்னை வெறுக்க முடியாது டி.." என்றான்..

அவளுக்கோ மேலும் அழுகை வந்தது..அவனை நோக்கி..

"ஐ ஆம் சாரி அருண்..இனிமே உன் பேச்சை மீறி நான் எங்கயும் போக மாட்டேன்.."என்றாள்..

" சரி மா " என்று அவளை சமாதான படுத்த முயன்ற்றவனிடம் ,

"நேத்து full ஆ நான் சாப்டவே இல்ல தெரியுமா??இதோ பாரு என் காலில்.." என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் அவள் காலை பார்த்தான் அவன்..

"அடிபட்டது ரொம்ப வலிக்குதா?" என்றான் அவன்..

அதற்கு அவள்,

"ஐயோ ..வலிய விடு அருண்..எவ்ளோ வலி என்றாலும் தாங்கிக்குவேன்..ஆனா..ஆனா.." என்று சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் விம்ம தொடங்கினாள்..

கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட,

"நீ எனக்கு வாங்கி கொடுத்த கொலுசு தொலஞ்சு போச்சு அருண்.." என்றாள்..

"அத்துடன் நிறுத்தாமல்,

"எல்லாத்துக்கும் காரணம் நான் தான்..இனிமே நான் அடம் பிடிச்சாலும் ,என்னை தனியா எங்கயும் அனுப்பிடாத..!!" என்ற படி விம்மி விம்மி அழுதாள்..

"சரிம்மா...நீ இப்படியே அழுதுகிட்டு இருந்தா நம்ம குழந்தையும் அழுமூஞ்சியா தான் பிறக்கும் .." என்று அவன் சொன்னதன் அர்த்தம் புரியாமல் , கண்ணீர் வழியும் கண்களோடு அவனை ஒரு முறை பார்த்தாள் நந்தினி..

அவன் நாற்காலியை விட்டு எழுந்தான்...அவளது படுக்கையில் அமர்ந்து கொண்டான்..தன் இடது கரத்தால் அவளை அணைத்தபடி , வலது கரத்தால் அவளது கண்ணீரை துடைத்தான்..அவள் நெற்றியில் முத்தமிட்டான்..அவளுக்கு புரியவில்லை என்பதை உணர்ந்ததால் , தன் தலையை அசைத்தபடி,

"ம்ம்..டாக்டர் confirm  பண்ணிட்டார்.." என்றான்..

அழுவதா சிரிப்பதா என்று புரியாமல் திணறிக் கொண்டிருந்தவளை மேலும் திணற விடாமல் , தன் மார்போடு சேர்த்து அணைத்துக்
கொண்டான்..

இரண்டு ஆண்டுகள் கழித்து..

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாசலில்..

"அருண்..உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்.." என்று
எதையோ சொல்ல தொடங்கினாள் நந்தினி..

"என்ன "என்று கேட்கும் பாவனையில் தலை அசைத்தான் அருண்..

"என் கூட வேலை பார்க்குறா இல்ல ..வனிதா ..அவ தன்னோட ஊருக்கு என்னை ரொம்ப நாளா கூப்பிட்டு கிட்டே இருக்கா...அவ ஊரு பேரு என்ன தெரியுமா..காட்டுபுதூர்.."என்றாள் நந்தினி ..

"ஸோ....."  என்றான் அருண்,அவள் முகத்தை பார்த்தபடி..

(அட...திரும்பவும் தொடங்கி விட்டாளே..எதாச்சு சொல்லி என்னை சம்மதம்னு சொல்ல வைப்பாளே ...லஞ்சமா முத்தம் வேற கொடுப்பாளே.. என்று ஏகப்பட்ட எண்ணங்கள் அருண் சொன்ன "ஸோ" என்ற ஒற்றை ஆங்கில வார்த்தைக்குள் புதைந்து கிடந்தன..)

" ஸோ... !!காட்டுபுதூர் அப்டின்னு பேரு இருக்குற ஊருக்கெல்லாம் என் வீட்டுக்காரர் என்னை அனுப்பி வைக்க மாட்டார் அப்டின்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன்.." என்றபடி அவனை பார்த்து கண் சிமிட்டினாள்..

"ஐயோ..இம்ச ..!!!என்று அவன் பாணியில் அவள் தலையில் லேசாக ஒரு தட்டு தட்டி தன் வலது கையால் அவளது தோளை பற்றிக்கொண்டான்..

இடது கையில் தூக்கி வைத்திருந்த அவனது மகளோ , தன் பிஞ்சு கைகளால் அவன் கழுத்தை சுற்றி பிடித்த படி, "ப்பா .." என்று மழலை மொழியில் பேச எத்தனித்தாள்..

முகத்தில் புன்னகை தவழ..மனமெல்லாம் சந்தோஷத்துடன்..

மூவருமாய் கோயிலுக்குள் நுழைந்தனர்..


AND THEY LIVED HAPPILY FOREVER.....

(முற்றும்..)




Sunday 29 September 2013

Love makes Life Beautiful...



காதல்... !!!ஹே !!!ஹே!!!அத பத்தி எழுதாத நித்யா!!...அது ஒரு கெட்ட
வார்த்தை ..சமூக ஒழுக்கத்தை சீர்குலைக்கும் கேவலமான விஷயம் காதல் என்று சொல்லும் உன்னத மனிதர்களுக்காக இந்த கட்டுரையை எழுதுகிறேன்...

அம்மா முதல் முதலில் வேலையில் சேர்ந்த போது அப்பா அம்மாவுக்கு ஒரு டிபன் பாக்ஸ் வாங்கி கொடுத்தார்..அதே டிபன் பாக்ஸில் தான் கிட்ட தட்ட 15 வருடங்கள் அலுவலகத்திற்கு உணவு கொண்டு போனாள் அம்மா..அந்த டிபன் பாக்ஸ் ஒரு நாள் தொலைந்து போன போது ,நான்கைந்து நாட்கள் சோகம் கப்பிய முகத்தோடு காணப்பட்டாள் அம்மா..சாதாரண பாக்ஸ் தானே ..இதுக்கு போயி ஏம்மா இவ்ளோ பீல் பண்றீங்க என்ற போது , "போடி" அதெல்லாம் உனக்கு புரியாது என்றாள்..

"ஏம்மா ..அப்பாவ லவ் பண்றீங்க இல்ல ??" என்ற போது "இப்ப உள்ள பிள்ளைகளுக்கு அம்மா கிட்ட எப்டி பேசணும்னு கூட வெவஸ்த இல்ல..அதிக பிரசங்கி தனமா பேசாதே " என்று கடிந்து கொண்டாள்..பாவம்..அவளுக்குள் இருக்கும் அந்த மெல்லிய கவித்துவமான உணர்வு தான் காதல் என்று அவளுக்கே தெரியவில்லை ..

அன்றொரு நாள் பெரியப்பாவிடம், " ஏன் பெரியப்பா??நீங்க உங்க தொப்பைக்கு மேல வேட்டி கட்டுறதால தானே அடிக்கடி அவிழ்ந்து போகுது..வேட்டி கீழ விழாம இருக்க ஒரு பெல்ட் கட்டினா என்ன ?" என்றேன்..அதற்கு பெரியப்பா ," நானும் அப்டி தான் நெனச்சேன் பிள்ளே !!!ஆனா அது என் பொஞ்சாதிக்கு பிடிக்காது!!!"   என்று சொல்லி சிரித்தார்..அவருக்கு வயது 70 க்கு மேல் இருக்கும் ..அவரிடம் போயி "காதல் " என்ற வார்த்தையை  சொல்லி விட்டால் ஏதோ சமூக விரோத செயலில் ஈடுபட்டவரை பார்ப்பது போல் தான் பார்ப்பார் ..பாவம் !!அவருக்கு தெரியவில்லை..அவருக்குள் இருக்கும் அந்த அழகான உணர்வுக்கு சுத்தமான தமிழ் பெயர் தான் 'காதல் 'என்று ..

திருமணமான ஒரு அக்காவிடம் கேட்டேன்.." ஏன் கா !!காதலர் தினம் கொண்டாடலியா??அண்ணன் கிட்ட " ஐ லவ் யு " சொல்லலியா?" என்று..அதற்கு அந்த அக்கா சொன்னாள்..

" அட போ மா !!நாங்க கணவன் மனைவி..காதலர்கள் இல்லையே" என்று..

"அங்கீகரிக்கப்பட்ட காதலர்கள் அப்டின்னு வச்சுக்கலாமே.." என்றேன்.

" சீ சீ ! அதெல்லாம் இல்ல..ஜஸ்ட் husband  wife  அவ்ளோ தான்.." என்றாள் 

"அப்டின்னா ...உங்களுக்கு அவர பிடிக்காது ..அப்டி தானே..!"

" ஏய் !!அவர ரொம்ப பிடிக்கும்!!உலகத்துல எல்லாத்தையும் விட அவர தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும்..." என்றவள் முகத்தில் வெட்கம் படர்ந்தது..பாவம்!! அவளுக்கும் தெரியவில்லை ..அவள் முகத்தில் படரும் வெட்கத்திற்கு காரணம் காதல் என்று..

இங்கே உண்மையாக காதலிக்கும் பலருக்கு தெரிவதில்லை தாங்கள் காதலர்கள் என்று..ஆனால் சாட்டிங்கும் டேட்டிங்கும் செய்து காதலை வெறும் பாலின கவர்ச்சியாய் மட்டும் பாவிக்கும் பலர் சொல்லி கொள்கிறார்கள் ..தாங்கள்  காதலர்கள் என்று..

காதலை மதிப்போம் !!!தெய்வீகமாய் பாவிப்போம்!!!
ஆதலால் காதல் செய்வீர்...

Monday 9 September 2013

Social Responsibility..



How old are you?

"25 yrs old" he said

"wow!!25 yrs...what have you done useful in these 25 yrs?"

"me!!I got campus placed at the age of 19.I work in a big software firm.My first salary was 18000 rS and now I earn 45000 Rs .per month.

"well!!that's great!!so..what have u done useful in these many years?"

"I..I earn..I bought a car..I have my own house..I go for foreign trips with my family once a yr..I...I will be settling in abroad soon.."

"Wow!!that 's very nice to hear..but what have u done useful in these many years??

"hmm...what do u mean?"

"I mean what I say..what have u done useful to your country so far..what have you done useful to mother earth??"

"I..I pay my income tax regularly.I dont disturb or hurt anyone and what else should I do??There are people to take care of our mother earth..and what am I to do??

Dear friends..

Most of us in this world are like the above said person..We are always bothered about I..I..and I ....selfish..very selfish...I dont mean to say that u should not have your own house ,car or you should not go to abroad etc..Ofcourse its ur money and u have the right to do anything with it..But my question is "why are we running away from social responsibilities.??Most of us have only one question in mind.."why should I do??"

The answer for this question is "because you are supposed to do.." Yes!!we are supposed to do..On the judgement day,The money we earned and the properties we had will not be taken into count...

If you all can do me a favour ..do one thing tonight..

1.lie down on your bed
2.look at the ceiling
3.Is the fan rotating??

Well!!Now look at it and ask the following questions to urself.."Have I done anything useful to mother earth?"
If NO is the answer so far..
Its time for you to decide on "what am I going to do?"

We all have our own families .we have children..Bringing them up, educating them and giving them whatever they ask for etc..etc....These are family responsibilities..Nobody can escape from it..So its our duty to earn for them..Providing them everything that they want for a decent living..Well!!If u are a complete family man...Its highly appreciable..

But at the same time there are few other responsibilities in this world...social responsibility..this responsibility will not be given ..It should be taken.It is we who should decide if we need to take this social responsibility or not..If yu ask me.."what sort of social responsibility are you talking about??There are many examples..

Last month two infants were found in a dustbin and there are many such orphans throughout the world..When we talk about our country the condition is even poorer..These children dont have proper food to eat, they dont have enough sponsors for education..they dont have aproper place to live..We can help them with money for food, education etc..Its not just about money..we can impart our knowledge to those kids.A socially responsible person feels very happy in spending time with such children..

Not just this..you can be socially responsible in various other ways too..find your own way..We have so much to do in this world ..we have a very very long way to go..

I have found my way..But I am not even a drop in an ocean..So, I need like minded, good hearted people to join me..We all together can definitely make a better society..a better India..If you are willing to join me in this..do contact me ...stressing again..Ready made heaven will not be given to us..We need to work to make it a heaven..Life is beautiful!!!!!If not lets together make it beautiful..

(Dear friend..If u are someone who says.." I am least bothered about all these things..I have nothing to do in it.."..Nithya feels extremely sorry for wasting your precious time...Please scroll on..)

God is Love


"I know a lady..She was working in a software company..she earned almost 25000 Rs. per month..but unfortunately she had to quit her job due to few personal issues..It was her birthday that year..She had a habit of celebratibng her birthday in an orpahanage by sponsoring one day meal for those destitutes..But this time she had zero balance in her account..she was completely upset.she wanted to sponsor even this time..But how was the question??God had the answer for her..Do you all know what happened??Just one week before her birthday she got a sms from HDFC bank .It said "An amount of RS 6000 is credited in ur account."..God credited it inher account for her to donate..she knew it.she did not use even a single rupee for herself..You know what??If you sit and think about the money that was credited in her account,logically it was the excess tax amount that was deducted from her salary when she was working in the software company, a year ago. hence it was her money that was returned back to her..there is no magic in it...But emotionaly, sentimentally in her view, it was the amount that was credited by God in the right time for the right reason..It was a magic for her..


I also know another lady..she is working in a leading software company..she earns almost 40000 Rs per month..Her husband, also a software engineer earns almost 70,000 Rs per monthS.So her family income per month is almost 1,10,000 RS..If you ask me "why are u so bothered about other people's family income?" here comes the reason..She once told me.."Its really tough to run our family with this small income.."..I was shocked to hear it..I know people who have a family income of only 20,000Rs per month..they run their family smoothly and they have a satisfied life..when this lady told this I asked her "what do you do in your weekends?...she said ,"we go to parties in star hotels almost every weekend..we also go to pubs and enjoy life...life is to enjoy and what else????everybody in this world is happy and we are also happy.."

I smiled..I was immediately reminded of Rianne..my dearest friend from Netherlands,,She once told me ...,"Nithya ..I met a foreign lady in kovalam beach..she was taking sun bath there..she was lying there on the beach and she told me ," who said India is poor??India is rich India is really rich..." and I asked her,"what did u see in India?" She said.."Oh me!!I am here in this same beach for the past two weeks...' I took my right hand and beat myself on my forehead..."

# If u ask me..ok nithya!!!finally what are you trying to say...here it is..

People and their characters differ..Every single character I meet here teach me something..I wonder at the contradictions in God's creation...God gives very little money to People who have the mind to give to others .. and He gives ample wealth to those people who want everything for themselves and waste everything..Many of us here are like the lady who Rianne met in the beach..We only see things next to us and take our decisions..But world is big ..we need to widen our views..

I am reminded of the poet Kannadasan's words..

"God created oceans..he filled it with water..then he added too much of salt in it..so that no body can drink it.."

but one thing is true...You know what.."when u have the mind to donate,the amount required will be credited by God..

Lucky Girl...




"what is her date of birth?" he asked..

"July 28" she said..

"28..oh no!!it is not a good date..People born on 28 th of any month cannot shine in life.." he said..

She believed it completely..she told me.." why did u take birth on an unlucky date??You could have become a star someday if u were born on 29 th .."

Her words irritated me..I wanted to tell her.."No..dear..I am not that unlucky.." bUt as a 12 yr old girl even I was little confused.."Is that man saying the truth??" I wondered..I wanted to prove him wrong..when I was a 15 yr old girl I read an article about BIll Gates..It said Bill Gates was born on October 28th..I was so happy..The richest man in the world was born on 28th of a month..So I immediately ran to her and said "Do u know ..the world's richest man Bill Gates was born on 28th of a month and is he unlucky??I asked...

"which month was he born?" she asked ..

"October" I said..and I believed that she would accept me as a lucky person.
But she said,

"Oh!!may be the problem is with the month u were born..why did u take birth on a unlucky month??" she asked..I was really worried..

I wanted to prove her wrong again..Recently I saw a poster..It said, " Happy birthday"..U know whose birthday it was..The luckiest man of tamil film industry...son in law of our own super star ...A multitalented star ..."why this kolaveri?" hero..Dhanush was born on July 28...I was happy ..very very happy to see it..I immediately ran to her and said..

"Do u know..ur favourite hero danush..was born on July 28..Is he unlucky?"

"Oh!!!May be the problem is with the time u were born..Why did u take birth in an unlucky time..."

I was highly irritated..She will never accept me as a lucky person..she will never never accept me as a star
!!!!!!!!!!!!:-(

"what is this story all about??Nithya" If u ask me..I felt like saying a message and here is the message..

1.The time ,the date or the month will not decide ur future..It is ur talent that decides your future..

Sharpen ur talents...Be good do good..and Life will always be beautiful...

Sunday 8 September 2013

நினைவெல்லாம் அருண் ..

episode -6
-----------

அங்கே சடை பிடித்த தலையுடன் காத்தாயி நின்று கொண்டிருந்தாள்.

தன் தலையை கையால் சொறிந்தபடி,

"ஹி!ஹி !ஹி!!" என்று சிரிக்க தொடங்கினாள் காத்தாயி..

நந்தினியின் அலறல் சத்தம் சற்று தொலைவில் சென்று கொண்டிருந்த சசி  மற்றும் ராதாவின் காதுகளை எட்டியது..

"நந்து !!" என்ற படி இருவரும் திரும்பி பார்த்த போது அங்கே நந்தினி இல்லை ...அவளோ சற்று தொலைவில் காத்தாயியை பார்த்து பயந்து ,முகம் எல்லாம் வியர்வை சொட்ட பேயறைந்தது போல் நின்று கொண்டிருந்தாள்..
அவள் இருந்த பக்கமாய் டார்ச் அடித்து பார்த்தாள் சசி..

பார்த்தவள்,

" ஹே !!காத்தாயியா ??பயப்படாத நந்து !!அவ ஒன்னும் செய்ய மாட்டா !!ஆனா ஓடாத ..அங்கேயே நில்லு.." என்றாள் சத்தமாக..

" ஏன் ஓடினால் என்ன?" என்ற ராதாவிடம்,

" ஐயோ!!ஓட தொடங்கினால்  அந்த பைத்தியம் விடாம துரத்தும் ...கடைசியா எங்காச்சு தள்ளி விட்டுடும்.." என்றாள்..

மீண்டும் காத்தாயியை பார்த்து,

" காத்தாயி பாட்டி!!உன்ன ராமையா தேடிட்டு இருந்தாரு..நீ இங்க என்ன பண்ற??" என்றாள்..

" என்னது?? என் சாமி என்ன தேடுச்சா?" என்று கேட்டு அடுத்த நொடியே ,சிட்டாய் மறைந்தாள் காத்தாயி ..

அதிர்ச்சியில் உறைந்தவளாய் அந்த இடத்தை விட்டு அசையாமல் நின்றாள் நந்தினி..

" ஏய் நந்து! அந்த காத்தாயி போயிடுச்சு..நீ வா!!" என்றதும் அதிர்ச்சி களைந்து வேக வேகமாய் தன் தோழிகளை நோக்கி நடந்தாள் நந்தினி..

ஒரு வழியாக ஒற்றை அடி பாதையை மூவரும் கடந்தனர்..

" நான் இதுக்கு மேல வர முடியாதும்மா !! நீங்க பத்திரமா பார்த்து போங்க !! இந்தா  இந்த டார்ச் லைட்ட பிடி!! எனக்கிது பழக்கப்பட்ட பாதை தான்.கைபேசி வெளிச்சத்தை வச்சு வேகமா ஓடிடுவேன்.." என்று விடை பெற்றுக்கொண்டாள் சசி..
சசியிடமிருந்து டார்ச் லைட்டை வாங்கி கொண்டாள் ராதா .நந்தினியோ ஒரு வித அச்சத்துடனேயே காணப்பட்டாள்..

"வா நந்து!! வேகமா நடந்துடலாம் " என்று காலையில் வந்த வழி பார்த்து இருவரும் நடக்க தொடங்கினர்..

வழியில் மூன்று இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர்..அதில் ஒருவன் ராதாவின் முகத்தில் டார்ச் லைட்டை அடித்த படி, " என்னம்மா !!தனியாவா?? நான் வேணும்னா துணைக்கு வரட்டுமா??"
என்றான்..

அவனுக்கு பதில் ஏதும் சொல்லாமல் , எதையும் யோசிக்க சக்தியற்றவளாய் , மெல்ல மெல்ல நடந்து கொண்டிருந்த நந்தினியின் கையை பற்றி இழுத்தபடி தனது நடையின் வேகத்தை கூட்டினாள் ராதா.

அந்த மனிதர்களும் விடுவதாயில்லை ..அவர்களும் தங்கள் நடையின் வேகத்தை கூட்டி இருவரையும் பின் தொடர்ந்தனர்..

ஓட்டமும் நடையுமாய் ஒரு வழியாக காலையில் அமர்ந்திருந்த கல்லறையை தாண்டி , மாட்டு வண்டிக்காரர் இறக்கி விட்ட இடத்தை அடைந்தனர்..

கட்டை விரலுக்கு மட்டும் ஒரு பிரத்யேக குணம் உண்டு..ஒரு முறை அடி பட்ட இடத்தில் மீண்டும் அடி பட்டே தீரும்..அப்படித்தான் மீண்டும் நந்தினிக்கு வலது கால் கட்டை விரலில் அடிபட்டது..வழியில் கிடந்த கல்லை கவனிக்காமல் ஓடியதில், கால் இடறி  கீழே விழுந்தாள்..

அவளை எழுப்ப முயற்சிப்பதற்குள், அவர்கள் நம்மை நெருங்கி விடுவார்களோ என்றோர் அச்சம் ராதாவிற்கு..இதற்கு மேல் சத்தம் இல்லாமல் ஓடுவதில் அர்த்தம் இல்லை என்று நினைத்த தாலோ என்னவோ ,

" யாராவது இருக்கீங்களா??காப்பாத்துங்க காப்பாத்துங்க ...!!"என்று கத்த தொடங்கி விட்டாள்..


இவள் இப்படி சத்தம் போடுவாள் என்று எதிர்பார்க்காத அந்த இளைஞர்கள்,

" இல்ல வேண்டாம் டா..போயிடலாம் " என்று தங்களுக்குள் சொல்லியபடி வந்த வழியே திரும்பினர்...
அதில் ஒருவன் மட்டும் திரும்பி திரும்பி பார்த்த படியே சென்று கொண்டிருந்தான்..

ராதாவின் கூக்குரல் கேட்டு, அருகில் இருந்த ஒரு குடிசையில் இருந்து கிழவி ஒருத்தி பதற்றத்தோடு வெளியே வந்தாள்..கீழே விழுந்திருந்த நந்தினியை எழுப்ப முயற்சித்துக்கொண்டிருந்த ராதாவின் முகத்தில் பெட்ரோ மாக்ஸ் லைட்டின் வெளிச்சம் அடித்தது..சற்று பயந்து திரும்பிய ராதாவிடம்..
" யாரும்மா நீங்க?? இந்த நேரத்துல இப்டி தனியா வர்றீங்களே !!" என்றாள் அந்த கிழவி..

ஏற்கனவே அரண்டு போயிருந்த நந்தினி, மேலும் பயன்திருந்ததால் பேச  நா எழவில்லை.ராதாவே எல்லா விபரங்களையும் அந்த பாட்டியிடம் சொன்னாள்..

அதை கேட்ட பாட்டி.." ம்ம்..என்ன மனுஷங்களோ??இப்டி ராத்திரி வேளையில பொட்ட புள்ளைகள தனியா அனுப்பியிருக்காங்களே..!!கொஞ்சம் பொறுங்க மா...என் புள்ள ராசையா உங்கள ஆட்டோல கொண்டு போயி வடக்கம்பட்டுல விட்டுடுவான்.." என்றபடி..

"அய்யா ராசு!!" என்று அழைத்தாள் பாட்டி..

குடிசையின் உள்ளே சாப்பிட்டு கொண்டிருந்த நடுத்தர வயது மனிதர் ஒருவர் தன் கைகளை கழுவி விட்டு வெளியே வந்தார்..இருட்டில் அவர் முகம் சரியாக தெரியவில்லை..

அந்த பாட்டி பெட்ரோமாக்ஸ் லைட்டை தன் மகனின் புறமாய் தூக்கி காட்டினாள்..வெளிச்சத்தில் அந்த மனிதரின் முகத்தை பார்த்த போது மேலும் அதிர்ச்சியை இருந்தது..

காலையில் அரக்கோணத்தில் பார்த்த அதே விகாரமான முகம்..அந்த கிழவி தன் மகனிடம் அவர்களின் நிலையை விளக்கி அவர்களை வடக்கம்பட்டு வரை கொண்டு விடும்படி சொன்னாள்..

வேறு வழியில்லாமல் இருவரும் ஒப்புக்கொண்டனர்..

ஆட்டோ கிளம்பியது..


நந்தினி ஆட்டோவின் பின் இருக்கையில் நன்கு சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள்...அவளது வலது கால் வலித்தது..அதனால் தனது வலது காலை மெல்ல தூக்கி தன் இடது தொடை மேல் வைத்துக் கொண்டாள்..பின்னர் தனது கைகளால் தன் காலை லேசாக அழுத்திக்கொண்டாள்..சட்டென்று அதிர்ந்தாள்..அவளது வலது கால் கொலுசை காணவில்லை..எங்கோ விழுந்து விட்டது போலும்..

பதற்றத்துடன் ராதாவிடம்,

" ராதா ..என் கொலுசு..என் கொலுசை காணோம்.." என்றாள்..ராதவோ,

"இப்போ என்ன பண்ண சொல்ற?ஆட்டோவ வேணும்னா திருப்ப சொல்லட்டுமா???வாய மூடிட்டு சும்மா இரு.." என்று சற்று கோபத்துடன் கூறினாள்..

(இந்த காட்டை விட்டு உசிரோட திரும்புவோம??மானத்தோட திரும்புவோமா??என்று ஒவ்வொரு நிமிஷமும் பயந்துகிட்டு இருக்கேன்..இவளுக்கு கொலுசு வேணுமாம் கொலுசு .." என்று முனு முனுத்தாள் ராதா..

அவள் கோபத்தை புரிந்து கொண்ட நந்தினியோ ஆட்டோவில் நன்கு சாய்ந்து அமர்ந்தபடி.."என் கொலுசு..என் கொலுசு.." என்று லேசாக முனுமுனுத்தாள் ..

முன்பு ஒரு நாள் நடந்த சம்பவம் ஓன்று அவள் நினைவிற்கு வந்தது..

அன்று காலையில் அவள் தன் படுக்கையை விட்டு எழுந்த போது தான் கவனித்தாள்..அவளது வலது கால் கொலுசை காணவில்லை..

தன் படுக்கை முழுவதும் தட்டி கொலுசு இருக்கிறதா என்று தேடி பார்த்து கொண்டிருந்தாள்..அப்போது தான் அருண் கையில் செய்தி தாளுடன் அறைக்குள் வந்தான்..வந்தவன்,

" வேணும்னா பாரு நந்து, இந்த தேர்தலில் நிச்சயமா ஊழல் இல்லாத நல்லாட்சி தான் அமையும்..மக்கள் விழித்துக் கொண்டார்கள்..நல்ல மனிதர்கள் ஆட்சிக்கு வருவார்கள் " என்று சொல்லிக் கொண்டே போனான்..
அதற்கு அவளோ,

" யாரு வேணும்னாலும் வரட்டும்..வர்றவங்க என் கொலுச கண்டுபிடிச்சு கொடுப்பாங்களா?" என்றாள்..

" ம்ம்..உனக்கு உன் பிரச்சன.."

" ஆமா எனக்கு என் கொலுசு தான் முக்கியம்"

"அப்போ !!அதை வாங்கி தந்த நான் முக்கியம் இல்ல அப்டி தானே.."

"வாங்கி தந்தது நீ என்பதால் தான் அது எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.."மறந்துட்டியா ??கல்யாணம் முடிஞ்ச பிறகு முதல் முதலா நீ எனக்கு கொடுத்த பரிசு அது.."

" சரி விடு!!சாதா கொலுசு தானே..அதுக்கு போயி ஏன் இவ்ளோ பீல் பண்ற??"

" சாதா கொலுசு???.ம்ம் ...அதெல்லாம் உனக்கு புரியாது அருண்.."

"சொன்னா தானே புரியும் ..சொல்லு புரிஞ்சுக்குறேன்.."என்று அவன் எகத்தாளமாய் சொன்னதும் அவனை ஒரு முறை முறைத்து பார்த்து,

" போ டா!!"
 என்றபடி தன் தேடுதலை மீண்டும் தொடர்ந்தாள்..

அவனோ,

" ம்ம்..உயிரில்லாத பொருட்களுக்கு கொடுக்கும் மரியாதையை கூட உயிருள்ள புருஷனுக்கு கொடுக்க மாட்டீங்க..கேட்டா ..அதெல்லாம் உனக்கு புரியாதுன்னு சொல்ல வேண்டியது.." என்று சொல்லியபடி பேப்பரில் மூழ்கினான்..

கொஞ்சம் நேரம்  கழித்து அவள் அருகே சென்று,
அவள் கண்களை தன் கண்களால் ஊடுருவி..

" தேடி முடிச்சுட்டியா??இத தானே இவ்ளோ நேரமா தேடின?? "
என்று தன் சட்டை பைக்குள் கைவிட்டு கொலுசை எடுத்து அவள் கண் முன்னாள் ஆட்டினான்..

சில நிமிட ஊடலுக்கும் அதை தொடர்ந்து வந்த காதலுக்கும் பின்னணியை இருந்த அதே கொலுசு தான் இன்று நிஜமாகவே தொலைந்து போயி விட்டது..
முதலில் "கொலுசு..என் கொலுசு.." என்று முனுமுனுக்க தொடங்கிய நந்தினி இப்போது.." அருண்..என் அருண்.." என்று முனுமுனுக்க தொடங்கி விட்டாள்..

அந்த நேரத்தில் வீசிய காற்று கூட பயமுறுத்த வந்த பேய் போல் தோன்றியது.." இந்த ஆளு நம்மை பத்திரமா கொண்டு போய் விடுவானா இல்லையா ? என்ற சந்தேகத்தோடு ராதாவும், " நான் என் அருண் கிட்ட போகணும்..நான் என் அருணை பார்க்கணும் " என்ற மன புலம்பலோடு நந்தினியும் அமர்ந்திருந்தனர்..

ஒரு வழியாக வடக்கம்பட்டி அடைந்த போது காலையில் பார்த்த டீ கடைக்காரர் தன் கடையை அடைத்துக் கொண்டிருந்தார்..அவரை நோக்கி, 

" ராமண்ணே !!அரக்கோணம்  பஸ் போயிருச்சா என்றார் ஆட்டோக்காரர்..

"அது போயி பத்து நிமிஷம் ஆச்சு ராசு " என்றார் கடைக்காரர்..

ராதாவை நோக்கி," இந்தாமா ..கடைசி பஸ் போயிருச்சாம் ..நீங்க சம்மதிச்சா நானே உங்கள அரக்கொனத்துல விட்டுடுறேன்.." என்றார் ஆட்டோக்காரர்..

ராதா நந்தினியை ஒரு முறை பார்த்துக் கொண்டாள் ..நந்தினியோ பிரமை பிடித்தவள் போல் "அருண்..அருண்.." என்று முனு முணுத்தபடி அமர்ந்திருந்தாள்..

இப்போது எதை கேட்டாலும் பதில் சொல்லும் நிலையில் நந்தினி இல்லை என்பது ராதாவிற்கு  நன்றாகவே புரிந்தது..

அதனால் ஆட்டோக்காரரை நோக்கி

"அரக்கோனத்துலையே விட்டுடுங்கண்ணே.." என்றாள்..

அரக்கோணத்தை அடைந்த போது மணி பத்து ஆகி இருந்தது ..தங்களை பத்திரமாக ரயில் நிலையத்தில் கொண்டு சேர்த்த ஆட்டோக்காரரிடம்,

" அண்ணே!!மன்னிச்சுக்கோங்க " என்றாள் ராதா..ஒரு நல்ல மனிதனை சந்தேகப்பட்டு விட்டோமே என்ற வருத்தம் அவளுக்குள்  இருந்தது..அதற்கு அந்த ஆட்டோக்காரர்,

"எதுக்கு மா மன்னிப்பெல்லாம்??உங்கள எப்டியாவது பத்திரமா கொண்டு வந்து செர்த்துடனும்னு நான் கூட பயந்து கிட்டே தாம்மா வண்டி ஓட்டினேன்..என் வீடு வடக்கம்பட்டு கிட்ட இருக்குறதால தான், காலைல ,உங்களுக்கு அங்க யாரை பார்க்கனும்னு கேட்டேன்..ஒரு மனிதனின்  முகத்தை வைத்து அவன் நல்லவனா கெட்டவனான்னு முடிவு செய்யாதீங்கம்மா.." என்றார்..

"ம்ம்.." என்று ஆமொதித்தவள் ,அவர் கையில் ஆட்டோவிர்கான பணத்தை கொடுத்து விட்டு நன்றி கூறி அனுப்பி வைத்தாள்..
சுமார் ஒரு மணி நேர காத்திருப்பிற்கு பின் , ரயில் வந்தது.

இருவரும் ஏறிக்கொண்டனர்...காலையில் கோயம்புத்தூர் நெருங்கியதும் , அருணுக்கு போன் செய்தாள் ராதா.நந்தினியோ ஜன்னல் வழி வெளியே பார்த்த படி , " நான் என் அருண் கிட்ட போகணும் .." என்று லேசாக முணுமுணுத்து கொண்டே இருந்தாள்..சுற்றி நடக்கும் எதையும் ஏற்றுக் கொள்ளும் , புரிந்து கொள்ளும் மனநிலையில் அவள் இல்லை..

ராதாவை பாராட்டியே ஆக வேண்டும்..இவ்வளவு தூரம் அவள் நந்தினியை இழுத்துக் கொண்டு வந்ததே பெரிய விஷயம் தான்..

ரயில் கோயம்புத்தூரை அடைந்த போது அங்கே அருண் காத்துக்கொண்டிருந்தான்..

"என்ன பிரச்சனையா இருக்கும்?நாளைக்கு தானே வர்றதா இருந்தாங்க.." என்று உள்ளூர எண்ணியபடி ரயிலை விட்டு இறங்கிய ராதாவின் அருகில் வந்தான்..

" என்னாச்சு? நந்து எங்கே?" என்ற அருணிடம் 
"அதோ" என்று கைகளை இடது பக்கமாய் நீட்டினாள் ராதா..

நந்தினி இறங்காமல் ரயில் பெட்டியின் வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள்..


(தொடரும்...)

Saturday 31 August 2013

நினைவெல்லாம் அருண்..

episode -5
................


சற்று தொலைவில் தலை வெட்டான் பட்டி என்ற போர்டு தெரிந்தது..

அதை பார்த்ததும்,

"ஏய் நந்து!! சக்சஸ் !!ஒரு வழியா சசி ஊருக்கு வந்துட்டோம்.." என்ற ராதாவின் குரலில் ,ஏதோ பெரிதாய் சாதித்து விட்டது போன்றதொரு மகிழ்ச்சி வெளிப்பட்டது..

ஊருக்குள் நுழைந்ததும் அங்கே விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனிடம்..

" மிட்டாய் கார சுப்பண்ணா வீடு எது தம்பி?" என்று ராதா கேட்ட பொது அவன் வேகமாய் ஓடிச்சென்று ஒரு ஓலை குடிசைக்குள் மறைந்து கொண்டான் ..இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்..அப்போது அந்த சிறுவன் ஒளிந்து கொண்ட குடிசையில் இருந்து கிழவி ஒருத்தி வெளியே வந்தாள்..

"என்ன வேண்டும்?" என்று இருவரையும் பார்த்து கேட்டாள்..

விவரத்தை நந்தினி சொன்ன போது..

"ஓ! மிட்டாய் காரர் வீடா??அந்த இறக்கத்துல அஞ்சாவது வீடு..." என்று தன் கையை இடது புறமாய் காட்டினாள்..

இருவரும் இடது புறம் ஒரு முறை திரும்பி பார்த்தனர்..

அங்கே மண் சாலை சரிந்து, ஒரு பள்ளமான பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது..

அந்த கிழவியிடம் நன்றி சொல்லி விட்டு இருவரும் அந்த வழியே நடக்க தொடங்கினர்..அந்த சாலையில் நடப்பது ஏதோ மலைச்சரிவில் நடப்பது போலிருந்தது..

"ராதா!!அந்த பாட்டி பள்ளத்தை தான் இறக்கம்னு சொன்னாங்கன்னு நெனக்கிறேன்.." என்ற நந்தினியிடம் பதில் ஏதும் சொல்லாமல்,

"ஒன்னு ...,ரெண்டு..." என்று எண்ணியபடி நடந்தாள் ராதா..

கொஞ்சம் தூரம் நடந்தவள்,

"ஏய் நந்து!! பாட்டி சொன்ன அஞ்சாவது வீடு வந்துடுச்சு...இந்த வீடா தான் இருக்கும்னு நெனக்கிறேன் .." என்றாள்..
அது ஒரு பழங்கால ஓட்டு வீடு போல் இருந்தது..காம்பவுண்டு சுவரோ ,முன் கேட்டோ இல்லாமல் இருந்த தனி வீடு அது..அந்த வீட்டு வாசலில் நின்று ..

"சசி!!சசி!!" என்று குரல் கொடுத்தாள் ராதா..யாரும் வெளியே வருவதை தெரியவில்லை...
மீண்டும் நந்தினி ஒரு முறை 'சசி!!சசி' என்று அழைத்துப் பார்த்தாள்..

போதா குறைக்கு தன் கைபேசியில் இருந்து சசியை தொடர்பு கொள்ள முயற்சி செய்தாள்..அதுவும் பலனளிக்கவில்லை...

சில நிமிட காத்திருப்பிற்கு பின் அடைத்திருந்த கதவு ஒரு வழியாக திறக்கப்பட்டது..

அங்கே ஒரு கிழவி நின்று கொண்டிருந்தாள்..

"யாரு வேணும்..??" என்ற கிழவியிடம்..

"இது மிட்டாய் கார சுப்பண்ணா வீடு தானே.." என்றாள் ராதா.

அதற்கு.."ஆமா!!நீங்க யாரு ?" என்ற கேள்வி வந்தது..

"நாங்க சசியோட பிரெண்ட்ஸ் ..சசிய பாக்குறதுக்காக வந்திருக்கோம் ..அவ இருக்காளா ??" என்றாள் நந்தினி..

இரண்டு பெண்களையும் மேலும் கீழுமாக ஒரு முறை பார்த்துவிட்டு..

" எந்த ஊர்ல இருந்து வர்றீங்க ?" என்றாள் கிழவி..

" எங்களுக்கு கோயம்புத்தூர் பக்கம் .." என்றாள் நந்தினி..

"ஓஹோ!! அவ்ளோ தொலவுல இருந்து தனியாவா வர்றீங்க??கல்யாணம் ஆயிடுச்சா??" என்று தன் கேள்வி கணைகளை ஒன்றன் பின் ஒன்றாக தொடுத்துக் கொண்டே போனாள் கிழவி..

ராதாவிற்கோ கோபம் வந்தது..

" ஏன் பாட்டி..??கல்யாணம் ஆனா தான் வீட்டுக்குள்ள சேர்ப்பீங்களா ??சசி இருக்காளா இல்லையா?"

"ம்க்கும் " என்று தன் தோளை முகவாயில் இடித்தபடி ..

"சசி வெளியில போயிருக்கு ..வர நேரமாகும் " என்றவள் வேறொன்றும் சொல்லாமல் வீட்டுக்குள் போய்விட்டாள்.

" என்னடி ..இந்த பாட்டி வீட்டுக்குள்ள வான்னு ஒரு வார்த்தை கூட சொல்லாம உள்ள போயிடுச்சு.." என்று அப்பாவி போல் கேட்டாள் நந்தினி..

ராதா பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாயிருந்தாள்..

அப்போது மதியம் பன்னிரண்டு மணி ஆகியிருந்தது..

சசி வீட்டு வாசலிலேயே இருவரும் காத்திருந்தனர்..

"பேசாம திரும்ப போயிடுவோமா?" என்ற ராதாவிடம்,

"இவ்ளோ கஷ்டப்பட்டு வந்திருக்கோம் ..அவள பார்த்துட்டு போகலாமே.." என்றாள் நந்தினி..

அவர்கள் இப்படி பேசிக்கொண்டிருந்த போது..அங்கே வெள்ளை வேட்டி சட்டையுடன், கருத்த தடிமனான முறுக்கு மீசை காரர் ஒருவர் வந்தார்..அவருக்கு குறைந்தது ஐம்பது வயதாவது இருக்கும் ..


சசி வீட்டு வாசற்படியில் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்து..

" யாரும்மா நீங்க..?? வாசலில் உட்கார்ந்திருக்கீங்க..."என்று அவர் கேட்ட போது விவரத்தை சொன்னாள் நந்தினி..
"ஓ!" சசி பிரெண்ட்சா??வாங்கம்மா !!வீட்டுக்குள்ள வாங்க ...சசி வெளிய போயிருக்கு..சாயங்காலம் வந்துடும் " என்றார் அவர்.

இருவருமாய் வீட்டுக்குள் நுழைந்தனர்..

அங்கே முதலில் கதவை திறந்த அந்த கிழவியை தவிர..

இரண்டு பெண்களும்,இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தனர்..

அந்த பெண்களில் ஒருத்திக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும்..அவள் தான் சசியோட அம்மாவாம்..அந்த இன்னொரு பெண்ணுக்கு சுமார் நாற்பது வயது இருக்கலாம்..

அங்கே யாருமே வரவேற்க தயாராயில்லை..

அந்த கருப்பு மனிதர் சசிக்கு மாமாவாம் ..அந்த மனிதரிடம் இருந்த குறைந்த பட்ச கருணை கூட அங்கே எந்த பெண்ணிடமும் இருந்ததை தெரியவில்லை..

" இப்டி உட்காருங்கம்மா.." என்று இரண்டு நாற்காலிகளை இழுத்து போட்டார் மாமா ..

பின்னர்.." அக்கா!!இவுங்க சசிக்கு பிரெண்ட்சாம்..சசிய பார்க்க வந்திருக்காங்க..!" என்றார் மாமா..சசியின் அம்மாவிடம்..

அந்த அம்மா பதில் ஏதும் சொல்லாமல் தோளை குலுக்கி கொண்டாள்..

பின்னர் அந்த மனிதர்,
"இங்கேயே இருங்கம்மா..சசி வந்துடுவா..எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு ..நான் கெளம்பனும்" என்றார்..

சரிங்க !!ஒன்னும் பிரச்சன இல்ல..நாங்க வெயிட் பண்றோம்!!" என்றாள் நந்தினி..

அவர் போன பிறகு நந்தினியும் ராதாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த படி அப்படியே அமர்ந்திருந்தனர்..

அழைப்பில்லாத திருமணத்திற்கு போயி முதல் வரிசையில் அமர்ந்திருப்பது போல் இருந்தது இருவருக்கும்..
அந்த பெண்களோ குழந்தைகளோ இவர்களை ஒரு பொருட்டாக கூட கருதவில்லை..

கிழவி மட்டும்.."ம்ம்..கண்ணாலம் ஆயிடுச்சாம்..ஆனா ஆமுடயான் இல்லாம ஊர் சுத்துராளுங்க..!!கலி முத்தி போச்சு டா சாமி!!" என்று முனு முணுத்துக் கொண்டிருந்தாள் ..

நந்திநிக்கோ கிழவியின் வார்த்தைகள் நெஞ்சில் ஈட்டி போல் தைத்தது..

அருணை ஒரு முறை நினைத்துக் கொண்டாள் ..பசி வேறு வயிற்றைக் கிள்ளியது..

" பசிக்குது ராதா."..என்று மெல்லிய குரலில் சொன்னாள் நந்தினி..

"ஒரு நாள் சாப்பிடலேன்னா..செத்து போயிட மாட்டோம் ..கொஞ்சம் பேசாமலிரு.." என்று கோபமாய் பதிலளித்தாள் ராதா.

சசி வீட்டார் மீதுள்ள கோபத்தை தான் தன் மீது காட்டுகிறாள் தோழி என்று புரிந்து கொண்டதால் அமைதியானாள் நந்தினி..

நேரம் போய்க்கொண்டிருந்தது..அந்த வீட்டுக்குள் நுழைந்து ஐந்து மணி நேரம் ஆகியும் பச்சை தண்ணீர் கூட யாரும் கொடுக்கவில்லை..

இந்நிலையில்.,

" யாரு வந்திருக்கா??வாசலில் ரெண்டு ஜோடி செருப்பு கிடக்குது " என்றபடி வீட்டுக்குள் நுழைந்தால் சசி..

உள்ளே  நந்தினியும் ராதாவும் இருப்பதை பார்த்து சற்று அதிர்ச்சியோடு..

" ஹே !!நீங்க எப்டி வந்தீங்க??" என்றாள்..

" வர்றதுக்கு தானே வழி கேட்டோம்!! வா வான்னு வெற்றிலை பாக்கு வச்சு அழைச்சுட்டு எப்டி வந்தீங்கன்னு கேட்டா என்ன அர்த்தம் ?" என்று சீறினாள் ராதா..


"இல்ல ..சும்மா தான் கேட்டீங்கன்னு நெனச்சேன்..ரொம்ப சந்தோஷமா இருக்கு " என்று பேச தொடங்கினாள் சசி..

மீண்டும் நந்தினியும் ராதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்..
அவர்களது பார்வை.." அட கடவுளே!!!இதற்கு வராமலே இருந்திருக்கலாம்.." என்பது போல் இருந்தது..

" அம்மா..அக்கா..பாட்டி ..எல்லாரையும் பார்த்தீங்களா ?" என்றாள் சசி..

"ம்ம்...என்றபடி இருவரும் தலையசைத்தனர்

" இதோ ஒரு நிமிஷத்துல வந்துடுறேன்.." என்றபடி வேகமாய் அடுக்களைக்குள் நுழைந்தாள் சசி..

அங்கிருந்த அம்மாவிடம்.." அம்மா!! அவங்களுக்கு காபி கொண்டு வாயேன்.." என்றாள்..

அம்மாவோ கோபமாய் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு..

" ம்..ம்ம்." என்றாள்..

சற்று நேரத்தில் இரண்டு பெரிய டம்ளர்களில் காபியோடு வந்தாள் சசி..

சில பேர் கோபம் வந்தால் வீட்டு பாத்திரங்களை போட்டு உடைப்பார்களாம்..அவர்கள் வீட்டில் எல்லோருமே கோபக்காரர்கள் தான் போலும்..
அவள் காபி கொண்டு வந்த பித்தளை டம்ளர்கள் இரண்டும் சப்பி சதைந்து இருந்தன..

பால் சேர்க்கப்படாத அந்த கருப்பு காபியை மடக் மடக் என குடித்து முடித்தாள் நந்தினி..

ராதாவோ ,"இதை குடிக்கிறதுக்கு குடிக்காமலே இருக்கலாம்.." என்று உள்ளூர எண்ணியபடி நந்தினியை ஒரு முறை பார்த்தாள்..

" சாரி மா!!இங்கே இந்த நேரத்துக்கு பால் கிடைக்காது..அதனால தான் " என்று சற்று இழுத்தபடியே சசி சொன்னதும் ,

" ஏய் !! அதெல்லாம் பரவாயில்லை ..எனக்கு கருப்பு காபி ரொம்ப பிடிக்கும் " என்றபடி ஒரே இழுப்பில் காபியை குடித்து முடித்தாள் ராதா..

ராதாவின் இந்த பதில் நந்தினிக்கு சிரிப்பை கொடுத்தது..இதழோர புன்னகையோடு அவளை ஒரு தரம் பார்த்துக் கொண்டாள்..

" ஆமா..எங்க போயிருந்த ?" என்று நந்தினி கேட்ட போது..சுற்று முற்றும் பார்த்துக் கொண்டாள் சசி..

" வாங்க .." என்று இருவரையும் அழைத்துக் கொண்டு ஒரு சிறு அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டாள்..

ஒரு புறம் துணிக் கூட்டமும் ..மறு புறம் குப்பை கூலமுமாய் கிடந்த அறை அது..அங்கே இருந்த ஒரு மரக்கட்டிலில் இருவரையும் அமர செய்து தானும் அமர்ந்து கொண்டாள்..
ராதாவோ அந்த அறையை சுற்றி சுற்றி பார்த்து ,அங்கிருந்த குப்பையை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள்..

சசி மெல்ல பேச தொடங்கினாள்..


" மேல் படிப்புக்கு பாரம் வாங்கனும்னு பொய் சொல்லிட்டு வெளியே போயிருந்தேன்..வீட்ல என்னை எங்க மாமாவுக்கே இரண்டாம் தாரமா கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு பேசிட்டிருக்காங்க.."

" யாரு ??குட்டையா கருப்பா முறுக்கு மீசையோட இருப்பாரே ஒரு பெரியவர் அந்த மாமாவுக்கா?"

" ஓ! மாமாவை பார்தீங்களா? அவருக்கு தான் என்னை கல்யாணம் பண்ணி குடுக்க போறாங்களாம்..

எல்லாத்துக்கும் காரணம் எங்க வீட்டு கிழவி தான்..அது என் அம்மா மனசையும் மாத்தி வச்சிருக்கு...எங்க அம்மா கூட இன்னொருத்தங்க இருந்தாங்களே அவங்க தான் என் மாமாவோட மனைவி..ஒரு வகையில் என்னோட பெரியம்மா மகள்..ரொம்ப பயந்த சுபாவம் உள்ளவங்க..எங்க வீட்டு கிழவிய பார்த்து பயந்துகிட்டு இருக்காங்க..தன்னுடைய வாழ்க்கையை எங்கே நான் பிடுங்கிக் கொள்வேனோ என்ற பயத்தால் தன் குழந்தைகளை கூட என்னிடம் நெருங்க விடுவதில்லை..என் மாமா ஒரு முரட்டு ஆசாமி ..இவங்க மத்தியில நான் படுற பாடு இருக்கே  ."..என்று சொல்ல தொடங்கியவளின் கண்கள் லேசாக பனித்தது.

இருவரும் அவள் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர்..நேரம் நன்கு இருட்டி விட்டதால் எப்படியும் இங்கே தானே தங்க போகிறோம் என்ற அசட்டு தைரியம் அவர்களை பதற்றப் படாமல் அமர வைத்திருந்தது..

" உங்க அப்பா..."என்று இழுத்தாள் ராதா..

"அவரு இவங்க எல்லாருக்கும் மேல..எனக்காக ஒரு குடிகார மாப்பிள்ளையை பார்த்து கிட்டு வந்தார்..இவங்களையே நம்பிகிட்டு இருந்தா என் வாழ்க்கையையே சின்ன பின்னம் ஆக்கிடுவாங்க..அதனால தான் என் வாழ்க்கையை நானே தீர்மாநிக்கலாம்னு முடிவு பண்ணினேன்..இன்னக்கி அதுக்காக தான் வெளியே போயிருந்தேன்..எனக்கும் என் கூட வேலை பார்க்குற விசுவுக்கும் அடுத்த மாசம் கல்யாணம்..ரெஜிஸ்டர் ஆபீஸ்ல ..
உங்களை எல்லாம் அழைக்கணும்னு ஆசை தான் ..ஆனா நான் எப்படி இங்கிருந்து தப்பிக்க போறேன்னே எனக்கு தெரியல "என்று சசி சொன்ன போது அவளை பார்க்க பரிதாபமாக இருந்தது..அதற்குள் அறை கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டது..

வேகமாக கதவை திறந்தாள் சசி..அங்கே கிழவி நின்று கொண்டிருந்தாள் ..சசியிடம் ஏதோ முனு முனுத்தாள்..
பின்னர்..

" ஏய்!! பொண்ணுங்களா ...இன்னும் கேளம்பலியா??இப்ப போனா கடைசி பஸ்ஸ புடுச்சிடலாம் .." என்றாள்..

நந்தினிக்கும் ராதாவிற்கும் தூக்கி வாரி போட்டது..
சசியோ..தன் பார்வையால் இருவரிடமும் மன்னிப்பு வேண்டினாள்..தன் தோழியின் நிலையை புரிந்து கொண்ட இருவரும் சட்டென்று எழுந்து கொண்டனர்...

"ஒன்னும் இல்ல சசி நாங்க போயிடுவோம்.." என்றாள் ராதா..நந்தினியும் தலையாட்டினாள்..

"ஒத்தையடி பாதை முடியுற வரைக்கும் நான் துணைக்கு வர்றேன் " என்றபடி இவர்கள் பதிலுக்கு காத்திருக்காமல்..

"அம்மா!!அந்த டார்ச் லைட்ட குடு .." என்றாள் சசி..

மூவருமாய் வீட்டை விட்டு கிளம்பினர்..

" எத்தனை முறை அருண் சொன்னார்...போகாத நந்து போகதேன்னு..நான் கேட்டேனா...நம் வீட்டிற்கு எதிராளி வந்தால் கூட வரவேற்பில் குறை வைக்க கூடாது என்று அம்மா சொல்வாளே!!!இந்த வீட்டில் உள்ள மனிதர்களுக்கு விருந்தோம்பல் என்றாள் என்னவென்று தெரியவே தெரியாது போலும்" என்று உள்ளூர என்னென்னவோ எண்ணியபடி நடந்து கொண்டிருந்தாள் நந்தினி..

ஒத்தையடி பாதையில் சசி முன்னே செல்ல இருவரும் பின் தொடர்ந்தனர்..

ராதாவின் பின்னால் வந்த நந்திநிக்கோ கால் வலிக்க தொடங்கியது..

காலையில் கை குட்டையை வைத்து கட்டிய கட்டு லேசாக அவிழ்ந்திருன்தது..சரியாக கட்டலாம் என்று குனிந்து அந்த கைக்குட்டையை அவிழ்த்துவிட்டு மீண்டும் கட்டிக் கொண்டிருந்தாள்..

இவள் பின்னால் தான் வருவதாக எண்ணி சசியும் ராதாவும் நடந்து கொண்டேயிருந்தனர்..

நிசப்தமான இரவு அது ..பௌர்ணமி முடிந்து சில நாட்கள் ஆகியிருந்ததால் தேய்ந்து வரும் நிலவு மிக மெல்லிய வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது..

குனிந்திருந்த நந்தினியின் தோளில் யாரோ கை வைத்தது போல் இருந்தது..சட்டென்று திரும்பினாள் நந்தினி..திரும்பியவள் அதிர்ச்சியுற்றாள்..

"ஆ..ஆ.. " என்று அலறினாள்..


இந்த அலறல் சத்தம் அருணை பொருத்தவரை பழக்கப்பட்ட விஷயம் தான்..முதலில் ஓரிரு முறை அவனும் ஏமாந்திருக்கிறான்..என்னவோ ஏதோ என்று பதட்ற்றப்பட்டு ஓடி வந்து பார்த்தால், அவள் தன் கையில் ஏதாவது பழைய பத்திரிகையை வைத்துக்கொண்டு சுவர் ஓரமாய் நின்று,அண்ணார்ந்து பார்த்த படி  "சூ ..சூ.." என்று சொல்லி கொண்டிருப்பாள்..

"என்னாச்சு ? எதுக்கு கத்தின??" என்பான் அவன்..

அவள் தன் தலையை குனித்து வலது கையை உயர்த்தி , சுவரில் ஒட்டிக்கொண்டிருக்கும் பல்லியை காட்டுவாள்..

"ஐயோ !!சாதாரண பல்லி தானே !! அதுக்கு ஏன் பாம்பை பார்த்தது மாதிரி கத்துற? " என்று சலித்துக் கொள்வான் அவன்..

இப்படி ஓரிரு முறை ஏமாந்திருக்கிறான்..பின்னர் அதுவே பழகிப் போனது..சின்னஞ்சிறு பூச்சி முதல் சகலத்துக்கும் அவள் பயப்படுவாள் என்பது அருணுக்கு நன்றாகவே தெரியும்..

இரவில் உறக்கத்தில் 'ஆ '..என்ற அலறல் சத்தத்தோடு எழுந்து அமர்ந்து கொள்வாள் அவள்..

" என்னாச்சு?" என்று அருண் கேட்டால்,

"அது.....அது.....வந்து....ஒரு...ஒரு..பெரிய கருப்பு உருவம் "

"ம்..." என்று மூச்சிரைக்க சொல்லி விட்டு..

அவனை பார்த்து ," ...நான்....பயந்துட்டேன்..."என்பாள்..அவள் பார்வையில் மானின் மருட்சி தெரியும்,..

தன் கையை தலையில் வைத்தபடி " உனக்கு நாய்க்கும் பயம் பேய்க்கும் பயம்..!!கனவு தானே !!பேசாம தூங்கு நந்து..நாளைக்கு வேற எனக்கு மீட்டிங் இருக்கு " என்று அவளை சற்று கடிந்து கொள்வான் அவன்..


அவள் அதே மருட்சியோடு படுத்துக்கொள்வாள்..அவளுக்கு உறக்கம் வந்து விடும்.. ஆனால் அதற்கு மேல் அவனால் உறங்க முடியாது..லேசாக கண் அயர்வான்..மீண்டும் விழித்துக்கொள்வான்..அவளை ஒரு முறை பார்ப்பான்..பயப்படாமல் உறங்குகிறாளா இல்லையா என்று அவ்வப்போது எழுந்து உறுதி படுத்திக் கொள்வான்..

அவன் ஆறடி உயர ஆண்மைக்குள் ,ஒரு மென்மையான பெண்மை உண்டு..அது அவ்வப்போது தாய்மையாய் வெளிப்படுவதும் உண்டு...தான் என்னவோ அம்மா போலவும், அவள் என்னவோ தான் பெற்ற குழந்தை போலவும் பாவித்து அவள் புறமாய் சரிந்து படுத்து , அவளை தன் அரவணைப்பில் வைத்துக்கொண்ட பின் தான் ,அவனால் நிம்மதியாக உறங்க முடியும்..

இப்படி தன் மனைவி எல்லாவற்றிற்கும் அஞ்சுவாள் என்று தெளிவாக உணர்ந்ததால் தானோ என்னவோ , அவள் தலை வெட்டான் பட்டிக்கு போகிறேன் என்றபோது அவனால் முழு மனதோடு ஒப்புக்கொள்ள முடியவில்லை...

கனவில் கருப்பு உருவம் பார்த்து அலறியவள் இன்று நிஜமாகவே காரிருளில் ஒரு கோர உருவம் தன் தோளில் கை வைத்தால் ,அலறாமல் என்ன செய்வாள் ..

"ஆ"...என்று மீண்டும் அலறினாள் நந்தினி..

(தொடரும்..)

Sunday 28 July 2013

நினைவெல்லாம் அருண்..

நினைவெல்லாம் அருண் (episodes 1,2,3 and 4 together)
--------------------------------------------------------------------



"அருண் ப்ளீஸ் டா..ஓகே சொல்லேன் ..
எனக்காக ப்ளீஸ்..ப்ளீஸ்... " என்று ஓயாமல் நச்சரித்தாள் நந்தினி.
அவள் கெஞ்சும் தோரணை பிடித்திருந்தாலும் ,சரி என்று சம்மதம் சொல்ல அவனுக்கோ மனம் வரவில்லை.

இருவருக்கும் திருமணமாகி ஓரிரு வருடங்கள் தான் இருக்கும் .இதுவரை மழலைச் செல்வம் இல்லையே என்ற ஒரு குறை தவிர அவர்களுக்கு வேறு எந்த குறையுமில்லை .அன்புக்கும் காதலுக்கும் துளி கூட பஞ்சமில்லை .இந்நிலையில் நந்தினி தன் தோழி சசி வீட்டுக்கு போக வேண்டும் என்றது அருணுக்கு ஏனோ பிடிக்கவில்லை...

"தலைவெட்டான்பட்டி ..கருமம் கருமம் ஊரு பேர பார்த்தியா ??இப்டி ஒரு ஊருக்கு தனியா போறேன் அப்டின்குற.."

"தனியாவா? இல்லையே என் கூட ராதாவும் வர்றா.."


"யாரு ஒல்லியா உயரமா இருக்குமே ..அந்த ஓட்டடைகுச்சியா ??அவ தான் உனக்கு பாதுகாப்பா??"

என் தோழியை அப்படி சொல்லாதீங்க அப்றோம் எனக்கு கோபம் எனும் பாவனையில் அருண் மீது ஒரு முறை தன் பார்வையை வீசி விட்டு ,

"அப்டின்னா நீங்க வாங்களேன் எனக்கு துணையா .." என்றாள் நந்தினி.

"எனக்கு வர நேரம் இல்லைன்னு உனக்கு நல்லாவே தெரியுமே.." என்றான் அவன்

"ம்ம்..தெரியும்..அதனால தான் ராதா கூட போகவான்னு கேக்குறேன்.."என்றாள் அவள்..


நந்தினி நவ நாகரிக பெண் தான்..கணவனை வாடா போடா என்று சொல்லும் அளவிற்கு நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் பெண் தான்..ஆனால் தன் கணவனின் சம்மதம் இல்லாமல் அவள் எந்த செயலிலும் இறங்குவதில்லை.நினைத்ததை நடத்திக்கொள்வாள்..தன் கணவனை எதிர்த்து அல்ல .அவனை எப்படியாவது சம்மதிக்க வைத்து..இப்போதும் அதற்கான முயற்சியில் தான் இறங்கியிருந்தாள்.

"சசி எத்தனை முறை நம் வீட்டில் வந்து தங்கியிருக்கா.இதுவரை குறைந்தது 10 தடவையாவது நம்மை அவ வீட்டுக்கு கூப்பிட்டிருப்பா ..அழைத்து அழைத்து களைத்து போய் அன்னைக்கு என்ன சொன்னா தெரியுமா ???"என் வீடு கிராமத்துல இருக்கு.நான் ஏழை..அதனால தானே என் வீட்டுக்கு வரமாட்டேன்குற" அப்டின்னு கவலையோட கேட்டா.இப்போ நீயே சொல்லு இவ்ளோ தூரம் கூப்பிட்டும் ,அவ வீட்டுக்கு நான் போகலேனா நல்ல இருக்குமா.."


தன் மனைவி சின்னஞ்சிறு குழந்தை போல , கன்னத்தில் ஆள் கட்டி விரலை அழுந்த பிடித்த படி கெஞ்சலாய் தன்னை பார்த்த பார்வை அருணுக்கு பிடித்திருந்தது. ஆனாலும் அவனுள்ளே இனந்தெரியாத ஒரு வித பயம் இருந்ததாலோ என்னவோ "சரி" என்று மனதார சொல்ல அவனால் முடியவில்லை.

"ம்ம்..வேண்டாம்..போகதே..அப்டின்னு நான் சொன்னா எதாச்சு சொல்லி என்னை சமாதானப்படுத்த முயற்சி செய்வ..சோ உன் இஷ்டம் போல செய் ..நீ பத்திரமா போயிட்டு வந்தா அதுவே எனக்கு போதும் " என்றபடி டிவி ரிமோட்டை கையில் எடுத்தான்..

"ஹே !நெஜமாவா சொல்ற..ரொம்ப தேங்க்ஸ் டா .." என்றபடி அவன் கன்னத்தில் "பச் " என்று முத்தமிட்டாள்.மனதில் நினைப்பதை எல்லாம் சில நேரங்களில் வெறும் வார்த்தைகளால் சொல்ல முடிவதில்லை .அவள் மகிழ்ச்சி அங்கே முத்தமாய் வெளிப்பட்டது..


தன் மனைவி இப்படி செய்வாள் என்று அவனுக்கு நன்றாக தெரியும் .கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி என்ற கவிஞரின் வார்த்தைகள் இங்கே பலனளிக்கவில்லை..தன் மனைவியின் முத்தத்தை ரசிக்க மனமில்லாதவனாய் ,அவள் எச்சில் படிந்த தன் கன்னத்தை துடைத்து விட்டு டிவியில் ஆழ்ந்தான்..


அந்த வார இறுதியில் நந்தினியும் ராதாவும் சசி வீட்டிற்கு புறப்பட தயாரானார்கள் .

இரயில் நிலையத்தில் ,
" நாளைக்கு காலைல ரெண்டு பேரும் அரக்கோணம் போய் சேர்ந்துடுவீங்க.அங்கிருந்து சசி வீட்டுக்கு கூட்டிட்டு போக யார் வருவா ??சசி வருவாங்களா ?" என்றான் அருண்.

"ம்ம்...ஆமாங்க..சசி வருவா .நாளைக்கு ஒரு நாள் மட்டும் அவ வீட்ல தங்குவோம் .இன்னைக்கு வெள்ளிக்கிழமை தானே..திங்கட்கிழமை காலைல வீட்டுக்கு வந்துடுவோம்..
நான் இல்லைங்கறதால நீங்க அங்க இங்கன்னு சுத்திட்டு இருக்காதீங்க ..நேரத்துக்கு வீட்டுக்கு வந்துடு !!ஒழுங்க சாப்பிடு !!எப்போவும் டிவிலே இருக்காத .ராத்திரிக்கு தோசை மாவு வச்சிருக்கேன்..அப்றோம் "என்று மேலும் ஏதோ சொல்லப்போனவளை அவன் பார்வை தடுத்தது..

அவள் இப்படித்தான் கொதிக்கும் எண்ணெயில் போட்ட கடுகு போல் பட பட பட பட என்று பேசிக்கொண்டே போவாள் என்று அருணுக்கு நன்றாக தெரியும்..தன் கணவனை பொது இடங்களில் வா,போ என்று அழைக்க கூடாது என்பதற்காக "ங்க" என்று அவள் தன் பேச்சில் சேர்க்க முயல்வதும் ,முடியாமல் தோற்று போவதும் ,அவனை பொருத்தவரை ரசனைக்குரிய விஷயம் தான்.

தன் மனைவி பேசும் விதத்தை ரசித்தபடி ,
"சரி சரி !இங்க எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்..நீ பத்திரமா போயிட்டு வா " என்றான்..
பிரியும் வேளையில் மீண்டும் ஒரு பார்வை பரிமாற்றம்..

அவன் பார்வை ,"நீ கண்டிப்பா போகனுமா நந்து !!பேசாம வீட்டுக்கு போயிடுவோமா?" என்பது போல் இருந்தது .அவளுக்கு அவன் பார்வை சொல்லும் வார்த்தைகள் தெள்ள தெளிவாய் புரிந்ததாலோ என்னவோ
"ப்ளீஸ் டா" என்னும் பாவனையில் தன் புருவங்களை சற்று சுருக்கியபடி கெஞ்சலாய் ஒரு பார்வை பார்த்தாள்.

நான்கு விழிகள் மெளனமாக பேசிக்கொள்ளும், இந்த கவித்துவமான உரையாடலை கேட்கச் சகியாமலோ என்னவோ
"ம்க்கும் " என்று லேசாக செறுமினாள் ராதா..
சட்டென்று சுயநினைவிற்கு வந்தவனாய் , தன் பார்வையை வேறு பக்கமாய் திருப்பிக்கொண்டான் அருண்..

"அண்ணா!!ரெண்டு நாள் தானே !!சமாளிச்சுக்கோங்க ..உங்க மனைவிய பத்திரமா உங்க கிட்ட கொண்டு வந்து சேர்த்துடுறேன்.." " என்று சொல்லியபடி முறுவலித்தாள் ராதா.

அவனும் தலையசைத்தான்..

இரயில் புறப்பட்டது .அடுத்த நாள் காலையில் அரக்கோணத்தில் இறங்கியதும்,

"ஏண்டி உன் வீட்டுக்காரர்கிட்ட அப்டி சொன்ன?" என்றாள் ராதா

"எப்டி சொன்னேன் ?" என்றாள் நந்தினி..
அவர்கள் உரையாடல் தொடர்ந்தது..

"நம்மை இங்கிருந்து கூட்டிட்டு போக சசி வர்றதா சொல்லவே இல்லையே ..அப்றோம் ஏன் உன் வீட்டுக்காரர் கிட்ட சசி வருவான்னு சொன்ன?உண்மைய சொல்ல வேண்டியது தானே..

"ம்ம்..உண்மைய சொல்லியிருந்தா ரெண்டு வண்டி மூணு வண்டி பிடிச்சு நீ தனியா எங்கேயும் போக வேண்டாம்னு சொல்லி, என்னை அப்படியே வீட்டுக்கு இழுத்துட்டு போயிருப்பார்..நான் தனியா எங்காச்சு போய் ஏதாவது பிரச்சனைல மாட்டிக்குவேனொன்னு அவருக்கு பயம்.ஏன் தெரியுமா ? because he loves me truly " என்றாள் நந்தினி .

தன் தோள்பட்டையை மோவாயால் இடித்தபடி ," ம்க்கும் ..மை வீட்டுக்காரர் also loves me " என்றாள் ராதா ..அத்துடன் நிறுத்தாமல் ," தேவதை மாதிரி ஒரு பொண்ணு என் பக்கத்துல நின்னுட்டிருந்தா கூட ,என் வீட்டுக்காரர் அந்த தேவதையை பார்க்க மாட்டார் ..என்னை தான் பார்ப்பார் ,..தெரியுமா?" என்றாள்..

பெண்மைக்கே உரித்தான ஆற்றாமையும் பொறாமையும் அவள் பேச்சில் வெளிப்பட்டது..

"ஏன் ..உன் வீட்டுக்காரர் ரசனை அவ்ளோ மோசமா இருக்குமா??" என்றபடி சிரித்தாள் நந்தினி..

" ஹலோ !!என்ன நக்கலா?? நீ பக்கத்துல இருக்கும் பொது அருண் அண்ணா உன்னை விட்டுட்டு வேற யாராவது அழகான பெண்ணை பார்த்துகிட்டிருந்தா உனக்கு கோபம் வராதா ?" என்று சற்று கோபமாகவே கேட்டாள் ராதா .

" ம்ஹூம் கோபம் எல்லாம் வராது ..""ஹே !! சைட் அடிக்கிறியா ? அப்டின்னு கேட்டு அவன் தோளில் லேசா ஒரே ஒரு தட்டு தட்டுவேன்..அப்றோம் ரெண்டு பேரும் சேர்ந்தே சைட் அடிப்போம்..அழகை ரசிக்கிறது தப்பு இல்லை ராதா.அருணை பற்றி எனக்கு நல்லா தெரியும் .அவரு கண்ணு யார வேணும்னாலும் பார்க்கலாம் ..ஆனா அவர் மனசு மட்டும் எனக்கு தான் சொந்தம் .எனக்கு மட்டும் தான் சொந்தம்.."

" ஓஹோ !!அழகை ரசிக்கிறது தப்பு இல்லையா..??அப்போ நீ அழகா இருக்குறதா நெனச்சு ,உன்னை யாரவது ரசிச்சு பார்த்தா உன் வீட்டுக்காரர் ஒன்னும் சொல்ல மாட்டாரு ..அப்படித்தானே.." என்ற ராதாவின் குரலில் கோபம் சற்று தூக்கலாகவே இருந்தது..

நீ கூட அழகா தான் இருக்குற என்று அவள் சொல்லியிருக்கலாம்..அனால் அவளோ " நீ அழகா இருக்குறதா நெனச்சு " என்று சொன்ன ஒற்றை வரியிலேயே பெண்மைக்கான இலக்கணத்தை காட்டி விட்டாள்."

ராதாவின் கோபத்தை சற்றும் பொருட்படுத்தாமல் ,

" ம்ம்ம்..உண்மை தான் .வாயை திறந்து ஒன்னும் சொல்ல மாட்டாரு..அவர் பார்வை ஒன்றே போதும்..ஒருமுறை என்னாச்சு தெரியுமா??நானும் அருணும் பஸ் ஸ்டாண்டுல நின்னுட்டிருந்தோம் ..அவர் என்னை விட்டு ரெண்டு அடி தள்ளி நின்று யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தார்..அங்க ஒருத்தன் என்னை ரொம்ப நேரமா பார்த்துகிட்டே இருந்தான்..அது சாதாரண பார்வை இல்ல..கழுகு பார்வை..பெண்ணை வெறும் சதை பிண்டமாக மட்டும் பார்க்கும் மிருகத்தனமான பார்வை.கொஞ்சம் நேரம் பொறுமையாய் இருந்தேன்..அந்த மனிதனின் செயல்கள் எல்லை மீறிக்கொண்டே போனது.அவன் தன் உதடுகளை நாவால் ஈரப்படுத்தினான்.,பின்னர் தன் கீழுதட்டை பற்களால் கடித்துக்கொண்டான்.கண் சிமிட்டினான்..சைகையால் "தனியா போலாமா ?" என்றான்." சீ சீ !!அக்கா தங்கையோடு பிறந்திருக்க மாட்டான் போலும் .பெண்ணை இதற்கு முன் பார்த்திருக்கவே மாட்டான் போலும் ! என்று என்னென்னவோ மனதில் தோன்றியது..

ஒரு கட்டத்தில் ரொம்பவே பயந்துட்டேன்..வேகமாய் நகர்ந்து, அருண் பக்கத்துல போய் அவர் கையை இறுக்கமாய் பிடித்துக்கொண்டேன்..என் நடுக்கத்தை வைத்தே,என் பயத்தை புரிந்து கொண்ட அவர் ,கைபேசி இணைப்பை துண்டித்து விட்டு ,தன் புருவத்தை உயர்த்தியபடி ,"என்னாச்சு ?" என்றார் .
நான் லேசா தலையை திருப்பி அந்த ஆளை ஒரு முறை பார்த்து விட்டு ,அருணை ஒரு முறை பார்த்தேன்..அப்றோம் திரும்பவும் அவர் கைய இறுக்கமா பிடிச்சுக்கிட்டேன்.அவர் என் கையை உதறி விட்டு விட்டு அந்த ஆளு சட்டய புடிச்சு சண்டை போடுவார் அப்டின்னு எதிர்பார்த்தேன்..ஆனா அவர் அப்டி எதுவும் செய்யல ..அவர் அவனை கோபமாய் முறைத்து பார்த்துகிட்டே இருந்தார்..அவர் பார்வையிலேயே அந்த ஆளு பயந்துட்டான்..மெதுவா தயங்கி தயங்கி எங்களை நெருங்கி வந்தான்..வந்து என்ன சொன்னான் தெரியுமா??"அண்ணே !!இந்த தேர்தலில் சுத்தியல் அரிவாள் சின்னத்துக்கே உங்க ஓட்ட போடுங்க !!" அப்டின்னான்..நான் வாய வச்சுகிட்டு சும்மா இருக்காமல் ,
"யோவ் !!சுத்தியல தூக்கி உன் மண்டையில போட்டுடுவேன் ..ஒழுங்க ஓடி போயிடு !!" அப்டின்னு சொன்னேன்..அருண் அந்த ஆளோட பேச்சை காதுல வாங்காம முறைத்துக்கிட்டே இருந்தார்..அவர் பார்வைக்கு பயந்தே அந்த ஆளு மெதுவா அங்கிருந்து நழுவிட்டான்..."

அப்றோம் என்னாச்சு தெரியுமா?"

"வேண்டாம்..சொல்லாதே அப்டின்னு சொன்னா நீ விடவா போற..சொல்லு..அப்றோம் என்னாச்சு.."


" அப்றோம்..அருணோட கோபமான பார்வை என் பக்கம் திரும்புச்ச்சு..

இப்போ என்னை எதுக்கு முறைக்கிறீங்க ? அப்டின்னு கேட்டேன்..

அதுக்கு ,"எந்த பிரச்சனையா இருந்தாலும் நம்மால முடிஞ்ச அளவு ஒதுங்கி போகணும். நாமே தலைய குடுத்து "இந்தாவெட்டுங்க வெட்டுங்க " அப்டின்னு சொல்றது முட்டாள் தனம்.நான் தான் உன் பக்கத்துலையே இருக்குரேனே..அப்றோம் நீ எதுக்கு தேவை இல்லாம அந்த ஆளுக்கெல்லாம் பதில் சொல்ற.." அப்டின்னு ஒரு பெரிய பிரசங்கமே பண்ணினாரு...

"நீங்க என் கூட இருக்குற தைரியத்துல தான் அப்டி சொன்னேன்.." அப்டின்னேன்..அதுக்கு அவர்," இப்போ நான் உன் கூட இருந்தேன்..இதே மாதிரி எப்பவும் என்னால உன் கூட இருக்க முடியுமா ?"என்றார்..உடனே என் புருவங்களை சுருக்கிக்கொண்டு சின்னஞ்சிறு குழந்தை போல் முகத்தை வைத்துக்கொண்டு ,

"ஏன் ? எப்பவும் என் கூட இருக்க மாட்டியா?" என்றேன்..நான் கேட்ட அந்த ஒற்றை கேள்வியிலேயே அவர் கோபம் எல்லாம் மாயமா போச்சு.சிரித்தபடியே ,என் தலைல லேசா ஒரு தட்டு தட்டினார்.." சரியான இம்சை டி நீ " அப்டின்னார்..

நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லலியே..இருப்பியா ? இல்லையா ?" என்று மீண்டும் கேட்டேன்..

அவருக்கே உரிய பாணியில் மெல்ல தலையசைத்தபடி,

" ம்ம்..இருப்பேன்..என் வேலை வெட்டி எல்லாத்தையும் விட்டுட்டு எப்பவும் உன் கூடவே தான் இருப்பேன் ..சரியா ?" என்றபடி சிரித்தார்..நானும் சிரித்துக்கொண்டேன்..."

என்று ஒரு பெரிய கதையை சொல்லி முடித்தாள் நந்தினி..அத்துடன் நிறுத்தாமல் தன் கையில் இருந்த பையை கீழே வைத்து விட்டு, தனது கை விரல்கள் பத்தையும் ஒன்றோடொன்று கோர்த்து ,உடலை ஒருவாறு நெளித்தபடி..

"அருண் என் ஹீரோ டி " என்றாள்..

தனது தோழியின் காதல் புராணத்தை கேட்கச் சகியாதவளாய்,

"போதும்!போதும்!!வடக்கம்பட்டுக்கு எத்தனை மணிக்கு பஸ் இருக்குன்னு யாரையாச்சு கேட்கலாம் வா!!" என்று நந்தினியின் வாயை மூட பேச்சை பேருந்தின் பக்கமாய் திருப்பினாள் ராதா.

ராதாவின் வார்த்தைகளை காதில் வாங்கிக்கொள்ளாமல் ,

"அரக்கோணம் ரயில் நிலையம் ஆங்கிலேயர் காலத்திலேயே கட்டப்பட்டது தெரியுமா ?" என்றாள் நந்தினி.

ராதவோ ,"அதெல்லாம் இருக்கட்டும்.முதல்ல அந்த ஆட்டோகாரர் கிட்ட வடக்கம்பட்டுக்கு இப்போ பஸ் இருக்கான்னு கேளு " என்றாள்.

"பேசாம சசிக்கே போன் பண்ணி கேக்கலாம் ."

"அதெல்லாம் எதுக்கு ?அவ தான் தன்னோட வீட்டுக்கு வர தெளிவா வழி சொல்லி இருக்காளே !!முதல்ல வடக்கம்பட்டுக்கு பஸ்ல போகணும்.அப்றோம் அங்கிருந்து தலைவேட்டான்பட்டிக்கு அடுத்த வண்டி பிடிக்கணும்..ஊருக்குள்ள போனதும் மிட்டாய்க்கார சுப்பண்ணா வீடுன்னு கேட்டா போதுமாம்"

"மிட்டாய்க்கார சுப்பன்னாவா ?"

"ம்ம்..அவங்க அப்பா முன்னாடி மிட்டாய் கடை வச்சிருந்தாராம் .ஆனால் அந்த தொழிலில் அவருக்கு பயங்கர நஷ்டமாம்.அப்றோம் வேறு ஏதேதோ கூலித்தொழில் எல்லாம் பார்த்து ,அவளை கஷ்டப்பட்டு படிக்க வைத்தாராம்.அந்த 'மிட்டாய் ' என்ற வார்த்தை மட்டும் அவர் பெயரோடு ஒட்டிக்கொண்டதாம்."என்று ராதா சொன்னதை கேட்டு சிரித்தவாறு

"ம்ம் ..மிட்டாய்க்கார சுப்..பண்..ணா" என்று இழுத்து சொல்லி பார்த்த படி ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடந்தாள் நந்தினி.

அங்கிருந்த ஆட்டோக்காரரிடம்.
"அண்ணே !!வடக்கம்பட்டுக்கு இப்போ பஸ் இருக்கா?" என்றாள்.

பின்புறமாய் திரும்பி நின்ற ஆட்டோக்காரர் ,தன்னிடம் ஒரு பெண் பேசும் குரலைக் கேட்டு சட்டென்று திரும்பினார்.அவரது ஒரு கண் முழுவதும் பூ படர்ந்திருந்தது.முகமோ குண்டும் குழியுமாய் விகாரமாய் இருந்தது.

நந்தினி சற்று பயந்து பின் நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தாள்.

"வடக்கம்பட்டா ?அங்கே யாரை பார்க்கணும் ?"என்றார் ஆட்டோக்காரர்.

"அது வந்து.."என்று தொடங்கிய நந்தினியை பேச விடாமல் குறுக்கிட்டு..

"அது உங்களுக்கு தேவை இல்லை .வடக்கம்பட்டுக்கு இப்போ பஸ் இருக்கானு மட்டும் சொல்லுங்க !"என்றாள் ராதா.

அங்கிருந்த மற்றொரு ஆட்டோக்காரர்,

"ம்ம்..இருக்கும்மா ...ஆனா அரை மணி நேரம் ஆகும்.'APN travels னு ஒரு மினி பஸ் வரும் "என்றார்.


சுமார் ஒரு மணி நேர காத்திருப்பிற்கு பின் பேருந்து வந்தது..
இருவரும் ஏறிக்கொண்டனர்.

ஓடும் பேருந்தின் ஜன்னல் வழியே தரிசிக்கும் உலகம் மிகவும் அபரிமிதமானது.அதை ஒரு வித வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி..

தார்சாலைகளும் சாலையோர மரங்களும் பின் நோக்கி ஓட பேருந்தின் வேகம் அதிகமானது.ஒட்டு வீடுகளும் ,குடிசை வீடுகளும் நிறைந்த பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தது.அங்கே வேறு எதையோ பார்த்துவிட்டு,

"ராத!!..நம்ம ஊருல ஆடு,மாடு, கோழி,நாய் இதையெல்லாம் தானே வீட்டில் வளர்ப்போம் ..இங்கே எல்லா வீடுகளிலும் என்னென்ன வளர்க்கிறார்கள் பாரேன் !" என்று அருகில் இருந்த ராதாவின் தோளை பிடித்து உலுக்கினாள் நந்தினி..
இவள் என்ன உளருகிறாள் என்று உள்ளூர எண்ணிய படி ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தாள் ராதா.அங்கே சில பன்றிகள் மேய்ந்து கொண்டிருந்தன..ஆங்காங்கே சில வீடுகளின் வாசலில், நாய்க்குட்டியை கட்டி வைப்பது போல் ,பன்றிகளை கட்டி வைத்திருந்தனர்..

"ம்ம்..நாய்க்கு பதிலா பன்றி வளர்க்கிறாங்க "என்றாள் ராதா ,சற்று சிரித்தபடி..

பேருந்து ,வீடுகள் இருந்த பகுதிகளை கடந்து இப்போது எதோ காட்டு வழியில் போய்க்கொண்டிருந்தது .சுற்றிலும் பொட்டல் வெளிகளும்,முட் காடுகளுமே தென்பட்டன..அங்கிருந்த முட்புதர்களை சிலர் கழிப்பறையாக பயன் படுத்திக்கொண்டிருந்தனர்.அந்த பொட்டல் வெளிகளையும் ரியல் எஸ்டேட் காரர்கள் விட்டு வைக்க வில்லை ..ஆங்காங்கே பிளாட்டுகள் பிரிக்கப்பட்டு ரியல் எஸ்டேட் போர்டுகள் நட்டு வைக்கப்பட்டிருந்தன..

"நாம சரியான ரூட்ல தானே வந்துட்டிருக்கோம் ..எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு ..ஏதோ காட்டுக்குள் நுழைவது போல் ஒரு உணர்வு..சசிக்கு போன் பண்ணி பார்த்தேன் .அவள் கைபேசி அனைத்து வைக்கப்பட்டிருக்காம்..."என்றாள் நந்தினி..

ராதவோ பதில் ஏதும் சொல்லாமல் சிந்தனையில் ஆழ்ந்தாள்.

ஒரு மணி நேர பேருந்து பயணத்தின் முடிவில்.

"இந்தாம்மா..வடக்கம்பட்டு ...நீ தானே கேட்டா ..அடுத்து வர்றது தான் வடக்கம்பட்டு.."என்றார் நடத்துனர்..

வடக்கம்பட்டில் இறங்கியதும்,

"ரொம்ப பசிக்குது ராதா .பக்கத்துல எதாச்சு ஹோட்டல் இருந்தா சாப்டுட்டு போகலாம்..மணி இப்போவே பத்தாச்சு .."என்றாள் நந்தினி..

ராதா தன் தலையை திருப்பி சுட்டறு முற்றும் ஒரு முறை பார்த்து விட்டு,"இந்த காட்டுல ஹோட்டலுக்கு எங்கே போறது..அதோ பாரு அங்க ஒரு டீக்கடை இருக்கு..ரொம்ப பசிக்குதுன்னா பிரெட்டொ பிஸ்கட்டோ வாங்கிக்கலாம் வா" என்றாள்..
இருவரும் தங்கள் பைகளை தூக்கிக்கொண்டு டீக்கடையை நோக்கி நடந்தனர்..
டீக்கடையில்,

ஒரு பாக்கெட் ப்ரெட்டை வாங்கி, அதில் ஆளுக்கு இரண்டு துண்டுகளை மட்டும் சாப்பிட்டு விட்டு, அந்த இடத்தை விட்டு நகரும் முன்,

"அண்ணே !!தலைவெட்டான்பட்டிக்கு இப்போ பஸ் இருக்கா ?"என்று கடைக்கார பெரியவரிடம் விசாரித்தால் ராதா.

அவரோ சிரிக்க தொடங்கி விட்டார்..தன் கைகளை மட்டும் இலை என்பது போல் அசைத்தார்.அனால் கெக்க பெக்க என்று தன் வெற்றிலை கரை படிந்த பற்கள் தெரியும் வண்ணம் சிரித்துக்கொண்டே இருந்தார்..

ராதாவுக்கோ கோபம் வந்தது..

"அப்டி நான் என்ன தப்பா கேட்டுட்டேன்னு சிரிக்குறீங்க?"என்றாள் அவள்.

அதற்கு அந்த பெரியவர், தன்னுள்ளிருந்து பொங்கி வரும் சிரிப்பை கொஞ்சம் அடக்கியவாறு,

"தலைவெட்டான்பட்டிக்கு மனுஷன் போவானா? அந்த ஊருக்கு பஸ் இருக்கான்னு கேட்டியே !அத நெனச்சு சிரிச்சேன்.."என்றார்..

"ஏன் அங்க வாழுறவங்க எல்லாம் மனுஷங்க இல்லையா ?" என்று சீற்றத்துடன் பேசிய ராதாவின் தோளில் கை வைத்து அவளை அமைதியாக்க முயற்சித்தவளாய்,

"பஸ் இல்லீங்களா ?அப்போ அந்த ஊருக்கு எப்டி போறது? என்று கடைக்காரரிடம் கேட்டாள் நந்தினி..

"இந்த மண்சாலையை கடந்து நேரா போனா ஒரு வற்றிய குளம் வரும் .அதிலிருந்து இடது பக்கமா திரும்பினா அங்க காத்தமுத்துன்னு ஒரு வண்டிக்காரர் நிற்பார்..அவரு கிட்ட சொன்னா கொண்டு போய் விடுவாரு.."

"வண்டிக்காரரா ? என்ன வண்டி ?"

"இந்த கிராமத்துல வேறென்ன வண்டி இருக்கும் கண்ணு..மாட்டு வண்டி தான்" என்றார் பெரியவர்..

"மாட்டு வண்டியா ?" என்று வாயை பிளந்த ராதாவை சோகமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு, கடைக்காரரை நோக்கி
" ஆட்டோ எதுவும் இல்லீங்களா?"என்றாள் நந்தினி..

"ராசையான்னு ஒரு புள்ள ஆட்டோ ஓட்டும் ..அது இன்னைக்கு அரக்கோணம் போயிருக்கு .."என்றார் பெரியவர்.

வேறு வழியில்லாமல் ."வா!வண்டியை பிடிக்கலாம் என்றபடி நடக்க தொடங்கினால் நந்தினி..

ராதாவோ ,"ஏதோ காட்டுக்குள் வந்து மாட்டிகிட்டோமே !!" என்று புலம்பியபடியே நடந்தாள்...

கொஞ்சம் தூரம் நடந்த பிறகு,

"நந்தினி!!இந்த சசி பொண்ணு வண்டில வரணும்னு சொன்னா ..ஆனா மாட்டு வண்டின்னு சொல்லவே இல்லியே டி.."என்றாள் ராதா..

நந்தினி தன் பின்னால் தான் வருவதாக எண்ணி பேசிக்கொண்டே வந்தவள், " ஏண்டி !பேசாமல் வர்ற ?" என்றபடி லேசாக திரும்பி பார்த்தாள்..அங்கே நந்தினி இல்லை..

"நந்தினி!!நந்தினி!!"என்ற ராதாவின் சத்தத்தை கேட்டு..

"இதோ..வர்றேன் ராதா "என்று சில அடி தூரம் பின்னால் இருக்கும் ஒரு முட்செடியின் மறைவில் இருந்து குரல் கொடுத்தாள் நந்தினி..அவள் முகத்தில் ஏதோ ஏமாற்றம் தென்பட்டது..
"ஹே !நந்து..அங்க என்னடி பண்ற ?நீ என் பின்னாடி தான் வர்றன்னு நெனச்சு நான் தனியா பேசிகிட்டே நடக்குறேன்..வா!!"என்று சத்தமாய்ச் சொன்னாள் ராதா..
"வர்..ரே..ரே..ன் " என்றபடி தன் கையில் இருந்த பையோடு ஓட்டமும் நடையுமாய் ஓடி வந்தாள் நந்தினி..
"இந்த ஆளரவம் இல்ல ஊரில் தனியா நடக்க எவ்ளோ பயமா இருக்கு தெரியுமா? நீ அங்க என்ன பண்ணிட்டிருந்த ?" என்று கோபமாய் கேட்டாள் ராதா..

"அது வந்து...சாலையோரமா வளந்திருந்த அந்த செடி தொட்டச்சினுங்கின்னு நெனச்சு தொட்டு தொட்டு பார்த்தேன்...ஆனா அது சிணுங்கவே இல்ல ...அதான் யோசிச்சிட்டிருந்தேன்.." என்று குழந்தை போல் பதில் சொன்னால் நந்தினி..

நந்தினி எப்போதும் இப்படித்தான்..இவளது குழந்தை தனம் ராதாவிற்கு எரிச்சலையே கொடுத்தது..

"அந்த மனுஷன் எப்டி தான் உன்ன வச்சு காலம் தள்ளுராரோ.." என்று லேசாக முணுமுணுத்துக் கொண்டாள்.

ஒரு வழியாக வண்டி நிற்கும் இடத்தை அடைந்தனர்..வைக்கோல் ஏற்றிச் செல்ல பயன் படும் மாட்டு வண்டி அது..

"ஏண்டி !!இதுலயா நாம போகணும் " என்றாள் ராதா..

"வேற எப்டி போறதாம்? நடந்து போ ன்னு சொல்லாம ஏதோ ஒரு வண்டி கொடுத்தார்களே !!இதுவே போதும் ..பேசாமல் வா!!" என்றபடி வண்டியில் ஏறிக்கொண்டாள் நந்தினி..

சற்று கடுகடுத்தபடி ராதாவும் ஏறிக்கொண்டாள்..

பல முறை முயற்சி செய்தும் சசியை தொடர்பு கொள்ள முடியாதது ராதாவிற்கு மேலும் எரிச்சலையே கொடுத்தது...

கொஞ்சம் நேரம் இருவரும் ஒன்றும் பேசாமல் அமைதியாகவே இருந்தனர்..ஆனால் நந்தினியால் பேசாமல் இருக்க முடியவில்லை..

"ராதா !!சசி நம்மை விட ரெண்டு வயசு பெரியவள் தானே !!அவளுக்கு அவ வீட்ல வரன் தேடுறாங்களா இல்லையா " என்றாள் நந்தினி...

ம்ம்..பார்க்குறாங்களாம்..ஆனா ஜாதக பொருத்தம் இல்லையாம் "
என்றாள் ராதா.

"ஜாதகமா ? அதெல்லாம் பார்ப்பது வீண் வேலை.."

"ஏன்? உனக்கு நம்பிக்கை இல்லையா ?"

"நம்பிக்கை இருக்கு..அதனால தான் சொல்றேன்..!!விதிப்படி ஒரு விஷயம் நடக்கனும்னு இருந்தா அதை யாராலும் மாற்ற முடியாது ராதா.."

"விதியை மதியால் வெல்லலாம்.."

"ம்ஹூம் ..நிச்சயமா முடியாது..இதுக்கு ஒரு கதை கூட சொல்வாங்க...முன்னொரு காலத்தில பாச்கராச்சரியார் என்றொரு பெரிய கணித மேதை இருந்தாராம்..அவர் தன் மகள் லீலாவதிக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தாராம்..ஆனால் அவள் ஜாதகப்படி அவளை மணக்கும் மனிதன் இறந்து விடுவான்..இதை கணித்த பாஸ்கராச்சரியார் தன் மகளுக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை மிக துல்லியமாக கணித்தார்..சரியாக அவர் கணித்த நேரத்தில் திருமணம் நடந்தால் அவர் மாப்பிள்ளை உயிருக்கு ஆபத்து கிடையாது..அப்படி துல்லியமாக நேரத்தை கணிப்பதற்காக ,தன் வீட்டில் இரண்டு பானைகளை ஒன்றின்மேல் ஒன்றாக வைத்தார்..மேலே இருக்கும் பானையில் ஒரு சிறிய துளை இட்டு அதில் தண்ணீரை நிரப்பி வைத்திருந்தார்..அந்த பானையில் உள்ள தண்ணீரின் அளவு குறைவதை வைத்து நேரத்தை மிக துல்லியமாக கணக்கிட்டு, அவர் குறித்த நேரத்திலேயே தன் மகளின் திருமணத்தை நடத்தி வைத்தார்..பார்த்து பார்த்து எல்லாம் செய்தும், லீலாவதியின் கணவன் திருமணமான கொஞ்சம் நாட்களிலேயே இறந்து போனான்.அந்த கணித மேதைக்கு காரணம் புரியவில்லை .குழப்பத்தோடு தன் இல்லத்தில் நேரம் கணக்கிட தான் வைத்திருந்த பானையை ஒரு முறை எட்டி பார்த்தார்.உள்ளே முத்து ஓன்று பானையின் துளையை லேசாக அடைத்திருந்தது..தான் கணித்த நேரம் தவறியதற்கான காரணம் அப்போது தான் அவருக்கு புரிந்தது.முத்து எப்படி பானைக்கு சென்றது என்று தன் மகளிடம் வினவினார் .."அப்பா பானையில எதுக்காக தண்ணி வச்சிருந்தீங்க? ஒரு நாள் நீரில் தெரியும் என் முக பிம்பத்தை பார்ப்பதற்காக பானைக்குள் எட்டி பார்த்தேன்..என் கழுத்தில் அணிந்திருந்த முத்து மாலையின் முத்து தவறி உள்ளே விழுந்திருக்கும் என்று நினைக்கிறேன்.." என்றாளாம்..பாஸ்கராச்சரியார் தன் தலையில் அடித்துக்கொண்டார்..விதி முத்து ரூபத்தில் வந்து லீலாவதியின் வாழ்க்கையோடு விளையாடியது..விதி வலியது ராதா ..அதை மதியால் வெல்வது நிச்சயமா முடியாது.."என்று நந்தினி சொல்லி முடித்த போது

"அம்மா..இதுக்கு மேல வண்டி போகாது ..நடந்து தான் போகணும் "என்றார் வண்டிக்காரர்.

"நடந்தா?நடந்து போனா எவ்ளோ நேரம் ஆகும் ?"

"வேகமா நடந்தா அரை மணி நேரத்தில் போயிடலாம்..வழியில தலையெல்லாம் சடை பிடிச்சு ,துணியெல்லாம் கிழிச்சுகிட்டு காத்தயின்னு ஒரு கிழவி இருக்கும்..அது கிட்ட மட்டும் பேச்சு கொடுக்காதீங்க ..அது ஒரு காதல் பைத்தியம் .."என்றார் வண்டிக்காரர்..

இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமுறை பார்த்துக்கொண்டு,
"சரிங்க!ரொம்ப நன்றி !" என்று கொஞ்சம் சில்லறையை அவர் கையில் கொடுத்து விட்டு நடக்க தொடங்கினர்...

நடக்கும் வழியில் ,ஒரு சிறிய கல்லை தன் காலால் எட்டி உதைத்தாள் நந்தினி ..
"என்னடி இது கால் பந்து ஆடிகிட்டே வர்ற ?" என்றாள் ராதா..

சிரித்தபடி," இது ஒரு விளையாட்டு ராதா "என்றாள் நந்தினி..

"விளையாட்டா?"

"ம்ம்,,விளையாட்டு தான்..உனக்கொரு விஷயம் தெரியுமா?கல்யாணத்துக்கு முன்னாடியே அருணை ரொம்ப நேசிச்சேன்.அவரு கிட்ட என் காதலை சொன்ன போது அவரு ஏத்துக்கவே இல்ல...கற்பனையிலேயே இருக்காத..நீ நெனக்கிறது நடக்காது அப்டின்னார்..தன் மனதை துறவு நிலையில் வைத்திருந்தார்..பொதுவாகவே அவருக்கு யார் மீதும் நம்பிக்கை கிடையாது..அதுவும் குறிப்பா பெண்கள் மீது சுத்தமா நம்பிக்கை கிடையாது..அவர் மனதுக்குள் நுழைய ஒரு சிறிய வாய்ப்பாவது கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு பல காலம் தவமாய் தவமிருந்தேன்..

கோயில்களுக்கு போவேன்.."இறைவா என் அருண் மனசுல எனக்காக ஒரு சின்ன இடத்தை மட்டும் வாங்கி கொடேன் " என்று வேண்டலாம்னு நெனைப்பேன்..ஆனா எதுவும் வேண்டாமல் திரும்ப வந்து விடுவேன்.

ஒரு முறை காளி தேவி கோயில் ஒன்றுக்கு போயிருந்தேன்.பிரார்த்தனை சீட்டில் உங்கள் மனதில் உள்ள ஆசையை எழுதி அம்பாள் பாதத்தில் வைத்தாள் ,நீங்கள் வேண்டியது நிச்சயம் பலிக்கும் என்றார்கள்.பத்து ரூபாய் செலவு செய்து ஒரு பிரார்த்தனை சீட்டை வாங்கி அதில் என் வேண்டுதலை எழுதலாம் என்று நினைத்தேன்.ஆனால் எழுத மனம் வரவில்லை..'எல்லாம் உனக்கு தெரியும்..நீயே பார்த்துக்கோம்மா.' என்று மட்டும் எழுதி அதை அம்பாள் காலடியில் வைத்தேன்..அப்போதெல்லாம் இப்படித்தான் கல்லை தட்டி விளையாடி என் காதலின் வெற்றியை கணிப்பேன்..

நான் தட்டி விடும் கல் நான் நினைக்கும் கோட்டை தாண்டி விட்டால்,என் அருண் எனக்கு தான்..ஒருவேளை தாண்டாவிட்டால் அந்த கல்லின் மீது எனக்கு பயங்கரமா கோபம் வரும் .வேகமாக நடந்து சென்று அந்த கல்லை அருகில் இருக்கும் ஏதாவது சாக்கடையில் தள்ளி விட்டு விடுவேன்..என் பேச்சை மதிக்காத கல்லுக்கு மரண தண்டனை கொடுத்ததாக நினைத்து உள்ளூர மகிழ்ந்து கொள்வேன்.."என்று நந்தினியை சற்று வியப்போடு பார்த்த படி..,

"அடி பாவி !!கோயிலுக்கு போவாளாம்..வேண்ட மாட்டாளாம்..ஆனால் கல்லை தட்டி காதலை கணிப்பாலாம் ..சரியான பைத்தியம் நீ..!"என்றாள் ராதா..

"ம்ம்...பைத்தியம் தான்...வெறும் பைத்தியம் இல்லை ..அருண் பைத்தியம்..!!உன் காதலுக்கு தூதாக நான் வேணும்னா போகட்டுமா என்று அந்த கடவுளே என்னிடம் கேட்டிருந்தால் கூட 'இல்லை வேண்டாம் 'என்று மறுத்திருப்பேன்..ஏன் தெரியுமா?காதல் ரொம்ப அழகான உணர்வு ராதா..அதை கட்டாயப்படுத்தி வாங்கி விட முடியாது..அது தானா வரணும்..நான் ஒன்றும் கல்லை காதலிக்கவில்லையே .ஒரு பெண்ணின் மன உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தியுள்ள ஒரு மனிதனை தானே காதலித்தேன்..அதனால் தான் அவர் மனமும் ஒரு நாள் கனியும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தேன்.

"சரி!சரி! அப்றோம் எப்டி தான் அவர் ஒத்துகிட்டார்?"

அத ஏன் கேக்குற ராதா..கவிதை கவிதையா எழுதி அவருக்கு அனுப்பிகிட்டிருந்தேன்.."என்று நந்தினி முழுமையாய் சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்ட ராதா..

"உன் கவிதைகளை படித்து மயங்கிட்டாரா?" என்றாள்.

"இல்ல..பயந்துட்டார்"

"என்னடி சொல்ற??"

"ம்ம்...
உன்ன விரும்புது பொண்ணு
ப்ளீஸ் ஒத்துக்கோடா கண்ணு
கடலும் நீளமும் ஒண்ணு
நீ இல்லன்ன நான் மண்ணு

இந்த மாதிரி கன்னா பின்னான்னு கவிதைகள் எழுதி அவருக்கு அனுப்பிகிட்டேயிருந்தேன்..ஒரு நாள் போன் பண்ணினார்..உன்னை நேரில் பார்க்கணும் அப்டின்னார்..அவர் சொன்ன இடத்துக்கு நானும் போனேன்..அங்கே அவர் காத்திருந்தார்...

நான் போய் பத்து நிமிடங்கள் ஆகியும் அவர் ஒரு வார்த்தை கூட பேசல..

"பேசணும்னு வர சொல்லிட்டு இப்டி பேசாமலே இருந்தா என்ன அர்த்தம்?" அப்டின்னேன் ..

"பேச்சு வரலேன்னு அர்த்தம் "என்றார் அவர்..

எனக்கு கோபம் வந்து விட்டது..சுற்று முற்றும் ஒரு முறை பார்த்துக்கொண்டேன்..சட்டென்று இருக்கையை விட்டு எழுந்து

"நான் கெளம்புறேன் " என்றேன்..

அவர் என் கையை பற்றிக்கொண்டார் ..அவரை ஒரு முறை பார்த்தேன்..அவர் தன் பார்வையை இருக்கையின் புறமாய் செலுத்தி 'உட்காரு' என்பதை பார்வையிலேயே சொன்னார்..முதல் முதலாய் அவர் கை பிடிக்குள் இருப்பது ஒரு வித பயத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது..

என்னால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை..பேசாமல் தலை குனிந்தபடி உட்கார்ந்து கொண்டேன்..

"நந்தினி!" என்றார் அவர்..

என் நெஞ்சத்து ஏக்கத்தை எல்லாம் கண்களில் தேக்கியபடி அவரை ஒரே ஒரு பார்வை பார்த்தேன்..

அவரோ தன் கண்களால் என் கண்களை பருகியபடி..

"வில் யு மேரி மீ ?"என்றார்..

"என்ன திடீர் ஞானோதயம் ?"என்றேன்..

"கேட்கனும்னு தோனுச்சு "அப்டின்னார்.

அத்துடன் அவர் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை..அவரோ..

"ஆனா ..ஒரே ஒரு கண்டிஷன் "என்றார்..

என்ன கண்டிஷனா இருக்கும் என்று உள்ளூர நான் யோசித்துக்கொண்டிருக்கும் போதே..

"இனிமே கவிதை எழுதுறேன் அப்டின்குற பேர்ல தமிழை கொலை பண்ண கூடாது சரியா?" என்றார்..
அவர் என் காதலை ஏற்றுக்கொண்டது அளப்பரிய மகிழ்ச்சியை கொடுத்தது.என் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாய் கொட்டியது..கொஞ்சம் சந்தோஷம்ன சிரிக்கலாம் ..அளவுக்க அதிகமான சந்தோஷம்னா அழுகை தானே வரும்..நான் என் உள்ளங்கையில் முகம் புதைத்து தேம்பி தேம்பி அழுதேன்..

அதை அவர் தவறாக புரிந்து கொண்டார்..

"ஏய் !!ப்ளீஸ் !ப்ளீஸ்!அழாத..கவிதை எழுதனும்னா தாராளமா எழுது நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்" என்றார்..

எனக்கோ சிரிப்பு வந்து விட்டது..கன்னம் வழி கண்ணீர் வழிந்தோட..சிரிப்பு ஒரு புறம் தாண்டவமாட...அப்பப்பா அந்த நிமிஷத்தை விவரிக்க வார்த்தையே கிடையாது.."

என்றபடி தன் காலில் தட்டு பட்ட ஒரு சிறிய கல்லை வேகமாக எட்டி உதைத்தாள் நந்தினி..பேச்சு சுவாரஸ்யத்தில் தன் எதிரில் இருந்த பெரிய கருங்கல்லை அவள் கவனிக்கவில்லை...அவளது வலது கால் அந்த கல்லில் மோதியதில் கட்டை விரலில் பலத்த அடி ஏற்பட்டு இரத்தம் பீறிட்டது..


ராதாவின் வார்த்தைகளை காதில் வாங்கிக்கொள்ளாமல் ,

"அரக்கோணம் ரயில் நிலையம்  ஆங்கிலேயர் காலத்திலேயே கட்டப்பட்டது தெரியுமா ?" என்றாள் நந்தினி.

ராதவோ ,"அதெல்லாம் இருக்கட்டும்.முதல்ல அந்த ஆட்டோகாரர் கிட்ட வடக்கம்பட்டுக்கு இப்போ பஸ் இருக்கான்னு கேளு " என்றாள்.

"பேசாம சசிக்கே போன் பண்ணி கேக்கலாம் ."

"அதெல்லாம் எதுக்கு ?அவ தான் தன்னோட வீட்டுக்கு வர தெளிவா வழி சொல்லி இருக்காளே !!முதல்ல வடக்கம்பட்டுக்கு பஸ்ல போகணும்.அப்றோம் அங்கிருந்து தலைவேட்டான்பட்டிக்கு அடுத்த வண்டி பிடிக்கணும்..ஊருக்குள்ள போனதும் மிட்டாய்க்கார சுப்பண்ணா வீடுன்னு கேட்டா போதுமாம்"

"மிட்டாய்க்கார சுப்பன்னாவா ?"

"ம்ம்..அவங்க அப்பா முன்னாடி மிட்டாய் கடை வச்சிருந்தாராம் .ஆனால் அந்த தொழிலில் அவருக்கு பயங்கர நஷ்டமாம்.அப்றோம் வேறு ஏதேதோ கூலித்தொழில் எல்லாம் பார்த்து ,அவளை கஷ்டப்பட்டு படிக்க வைத்தாராம்.அந்த 'மிட்டாய் ' என்ற வார்த்தை மட்டும் அவர் பெயரோடு ஒட்டிக்கொண்டதாம்."என்று ராதா சொன்னதை கேட்டு சிரித்தவாறு

"ம்ம் ..மிட்டாய்க்கார சுப்..பண்..ணா" என்று இழுத்து சொல்லி பார்த்த படி ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடந்தாள் நந்தினி.

அங்கிருந்த ஆட்டோக்காரரிடம்.
"அண்ணே !!வடக்கம்பட்டுக்கு இப்போ பஸ் இருக்கா?" என்றாள்.

பின்புறமாய் திரும்பி நின்ற ஆட்டோக்காரர் ,தன்னிடம் ஒரு பெண் பேசும் குரலைக் கேட்டு சட்டென்று திரும்பினார்.அவரது ஒரு கண் முழுவதும் பூ படர்ந்திருந்தது.முகமோ குண்டும் குழியுமாய் விகாரமாய் இருந்தது.

நந்தினி சற்று பயந்து பின் நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தாள்.

"வடக்கம்பட்டா ?அங்கே யாரை பார்க்கணும் ?"என்றார் ஆட்டோக்காரர்.

"அது வந்து.."என்று தொடங்கிய நந்தினியை பேச விடாமல் குறுக்கிட்டு..

"அது உங்களுக்கு தேவை இல்லை .வடக்கம்பட்டுக்கு இப்போ பஸ் இருக்கானு மட்டும் சொல்லுங்க !"என்றாள் ராதா.

அங்கிருந்த மற்றொரு ஆட்டோக்காரர்,

"ம்ம்..இருக்கும்மா ...ஆனா அரை மணி நேரம் ஆகும்.'APN  travels னு ஒரு மினி பஸ் வரும் "என்றார்.


சுமார் ஒரு மணி நேர காத்திருப்பிற்கு பின் பேருந்து வந்தது..
 இருவரும் ஏறிக்கொண்டனர்.

ஓடும் பேருந்தின் ஜன்னல் வழியே தரிசிக்கும் உலகம் மிகவும் அபரிமிதமானது.அதை ஒரு வித வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி..

தார்சாலைகளும் சாலையோர மரங்களும் பின் நோக்கி ஓட பேருந்தின் வேகம் அதிகமானது.ஒட்டு வீடுகளும் ,குடிசை வீடுகளும் நிறைந்த பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தது.அங்கே வேறு எதையோ பார்த்துவிட்டு,

"ராத!!..நம்ம ஊருல ஆடு,மாடு, கோழி,நாய் இதையெல்லாம் தானே வீட்டில் வளர்ப்போம் ..இங்கே எல்லா வீடுகளிலும் என்னென்ன வளர்க்கிறார்கள் பாரேன் !" என்று அருகில் இருந்த ராதாவின் தோளை பிடித்து உலுக்கினாள் நந்தினி..
இவள் என்ன உளருகிறாள் என்று உள்ளூர எண்ணிய படி ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தாள் ராதா.அங்கே சில பன்றிகள் மேய்ந்து கொண்டிருந்தன..ஆங்காங்கே சில வீடுகளின் வாசலில், நாய்க்குட்டியை கட்டி வைப்பது போல் ,பன்றிகளை கட்டி வைத்திருந்தனர்..

"ம்ம்..நாய்க்கு பதிலா பன்றி வளர்க்கிறாங்க "என்றாள் ராதா ,சற்று சிரித்தபடி..

பேருந்து ,வீடுகள் இருந்த பகுதிகளை கடந்து இப்போது எதோ காட்டு வழியில் போய்க்கொண்டிருந்தது .சுற்றிலும் பொட்டல் வெளிகளும்,முட் காடுகளுமே தென்பட்டன..அங்கிருந்த முட்புதர்களை சிலர் கழிப்பறையாக பயன் படுத்திக்கொண்டிருந்தனர்.அந்த பொட்டல் வெளிகளையும் ரியல் எஸ்டேட் காரர்கள் விட்டு வைக்க வில்லை ..ஆங்காங்கே பிளாட்டுகள் பிரிக்கப்பட்டு ரியல் எஸ்டேட் போர்டுகள் நட்டு வைக்கப்பட்டிருந்தன..

"நாம சரியான ரூட்ல தானே வந்துட்டிருக்கோம் ..எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு ..ஏதோ காட்டுக்குள் நுழைவது போல் ஒரு உணர்வு..சசிக்கு போன் பண்ணி பார்த்தேன் .அவள் கைபேசி அனைத்து வைக்கப்பட்டிருக்காம்..."என்றாள் நந்தினி..

ராதவோ பதில் ஏதும் சொல்லாமல் சிந்தனையில் ஆழ்ந்தாள்.

ஒரு மணி நேர பேருந்து பயணத்தின் முடிவில்.

"இந்தாம்மா..வடக்கம்பட்டு ...நீ தானே கேட்டா ..அடுத்து வர்றது தான் வடக்கம்பட்டு.."என்றார் நடத்துனர்..

வடக்கம்பட்டில் இறங்கியதும்,

"ரொம்ப பசிக்குது ராதா .பக்கத்துல எதாச்சு ஹோட்டல் இருந்தா சாப்டுட்டு போகலாம்..மணி இப்போவே பத்தாச்சு .."என்றாள் நந்தினி..

ராதா தன் தலையை திருப்பி சுட்டறு முற்றும் ஒரு முறை பார்த்து விட்டு,"இந்த காட்டுல ஹோட்டலுக்கு எங்கே போறது..அதோ பாரு அங்க ஒரு டீக்கடை இருக்கு..ரொம்ப பசிக்குதுன்னா பிரெட்டொ பிஸ்கட்டோ வாங்கிக்கலாம் வா" என்றாள்..
இருவரும் தங்கள் பைகளை தூக்கிக்கொண்டு டீக்கடையை நோக்கி நடந்தனர்..
டீக்கடையில்,

ஒரு பாக்கெட் ப்ரெட்டை வாங்கி, அதில் ஆளுக்கு இரண்டு துண்டுகளை மட்டும் சாப்பிட்டு விட்டு, அந்த இடத்தை விட்டு நகரும் முன்,

"அண்ணே !!தலைவெட்டான்பட்டிக்கு இப்போ பஸ் இருக்கா ?"என்று கடைக்கார பெரியவரிடம்    விசாரித்தால்   ராதா.

அவரோ சிரிக்க தொடங்கி விட்டார்..தன் கைகளை மட்டும் இலை என்பது போல் அசைத்தார்.அனால் கெக்க பெக்க என்று தன் வெற்றிலை கரை படிந்த பற்கள் தெரியும் வண்ணம் சிரித்துக்கொண்டே இருந்தார்..

ராதாவுக்கோ கோபம் வந்தது..

"அப்டி நான் என்ன தப்பா கேட்டுட்டேன்னு சிரிக்குறீங்க?"என்றாள் அவள்.

அதற்கு அந்த பெரியவர், தன்னுள்ளிருந்து பொங்கி வரும் சிரிப்பை கொஞ்சம் அடக்கியவாறு,

"தலைவெட்டான்பட்டிக்கு மனுஷன் போவானா? அந்த ஊருக்கு பஸ் இருக்கான்னு கேட்டியே !அத நெனச்சு சிரிச்சேன்.."என்றார்..

"ஏன் அங்க வாழுறவங்க எல்லாம் மனுஷங்க இல்லையா ?" என்று சீற்றத்துடன் பேசிய ராதாவின் தோளில் கை வைத்து அவளை அமைதியாக்க முயற்சித்தவளாய்,

"பஸ் இல்லீங்களா ?அப்போ அந்த ஊருக்கு எப்டி போறது? என்று கடைக்காரரிடம் கேட்டாள் நந்தினி..

"இந்த மண்சாலையை கடந்து நேரா போனா ஒரு வற்றிய குளம் வரும் .அதிலிருந்து இடது  பக்கமா திரும்பினா அங்க காத்தமுத்துன்னு ஒரு வண்டிக்காரர் நிற்பார்..அவரு கிட்ட சொன்னா கொண்டு போய் விடுவாரு.."

"வண்டிக்காரரா ? என்ன வண்டி ?"

"இந்த கிராமத்துல வேறென்ன வண்டி இருக்கும் கண்ணு..மாட்டு வண்டி தான்" என்றார் பெரியவர்..

"மாட்டு வண்டியா  ?" என்று வாயை பிளந்த ராதாவை சோகமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு, கடைக்காரரை நோக்கி
" ஆட்டோ எதுவும் இல்லீங்களா?"என்றாள் நந்தினி..

"ராசையான்னு ஒரு புள்ள ஆட்டோ ஓட்டும் ..அது இன்னைக்கு அரக்கோணம் போயிருக்கு .."என்றார் பெரியவர்.

வேறு வழியில்லாமல் ."வா!வண்டியை பிடிக்கலாம் என்றபடி நடக்க தொடங்கினால் நந்தினி..

ராதாவோ ,"ஏதோ காட்டுக்குள் வந்து மாட்டிகிட்டோமே !!" என்று புலம்பியபடியே நடந்தாள்...

கொஞ்சம் தூரம் நடந்த பிறகு,

"நந்தினி!!இந்த சசி பொண்ணு வண்டில வரணும்னு சொன்னா ..ஆனா மாட்டு வண்டின்னு சொல்லவே இல்லியே டி.."என்றாள் ராதா..

நந்தினி தன் பின்னால் தான் வருவதாக எண்ணி பேசிக்கொண்டே வந்தவள், " ஏண்டி !பேசாமல் வர்ற ?" என்றபடி லேசாக திரும்பி பார்த்தாள்..அங்கே நந்தினி இல்லை..

"நந்தினி!!நந்தினி!!"என்ற ராதாவின் சத்தத்தை கேட்டு..

"இதோ..வர்றேன் ராதா "என்று சில அடி தூரம் பின்னால் இருக்கும் ஒரு முட்செடியின் மறைவில் இருந்து குரல் கொடுத்தாள் நந்தினி..அவள் முகத்தில் ஏதோ ஏமாற்றம் தென்பட்டது..
"ஹே !நந்து..அங்க என்னடி பண்ற ?நீ என் பின்னாடி தான் வர்றன்னு நெனச்சு நான் தனியா பேசிகிட்டே நடக்குறேன்..வா!!"என்று சத்தமாய்ச் சொன்னாள் ராதா..
"வர்..ரே..ரே..ன் " என்றபடி தன் கையில் இருந்த பையோடு ஓட்டமும் நடையுமாய் ஓடி வந்தாள் நந்தினி..
"இந்த ஆளரவம் இல்ல ஊரில் தனியா நடக்க எவ்ளோ பயமா இருக்கு தெரியுமா? நீ அங்க என்ன பண்ணிட்டிருந்த ?" என்று கோபமாய் கேட்டாள் ராதா..

"அது வந்து...சாலையோரமா வளந்திருந்த அந்த செடி தொட்டச்சினுங்கின்னு நெனச்சு தொட்டு தொட்டு பார்த்தேன்...ஆனா அது சிணுங்கவே இல்ல ...அதான் யோசிச்சிட்டிருந்தேன்.." என்று குழந்தை போல் பதில் சொன்னால் நந்தினி..

நந்தினி எப்போதும் இப்படித்தான்..இவளது குழந்தை தனம் ராதாவிற்கு எரிச்சலையே கொடுத்தது..

"அந்த மனுஷன் எப்டி தான் உன்ன வச்சு காலம் தள்ளுராரோ.." என்று லேசாக முணுமுணுத்துக் கொண்டாள்.

ஒரு வழியாக வண்டி நிற்கும் இடத்தை அடைந்தனர்..வைக்கோல் ஏற்றிச் செல்ல பயன் படும் மாட்டு வண்டி அது..

"ஏண்டி !!இதுலயா நாம போகணும் " என்றாள் ராதா..

"வேற எப்டி போறதாம்? நடந்து போ ன்னு சொல்லாம ஏதோ ஒரு வண்டி கொடுத்தார்களே !!இதுவே போதும் ..பேசாமல் வா!!" என்றபடி வண்டியில் ஏறிக்கொண்டாள் நந்தினி..

சற்று கடுகடுத்தபடி ராதாவும் ஏறிக்கொண்டாள்..

பல முறை முயற்சி செய்தும் சசியை தொடர்பு கொள்ள முடியாதது ராதாவிற்கு மேலும் எரிச்சலையே கொடுத்தது...

கொஞ்சம் நேரம் இருவரும் ஒன்றும் பேசாமல் அமைதியாகவே இருந்தனர்..ஆனால் நந்தினியால் பேசாமல் இருக்க முடியவில்லை..

"ராதா !!சசி நம்மை விட ரெண்டு வயசு பெரியவள் தானே !!அவளுக்கு அவ வீட்ல வரன் தேடுறாங்களா இல்லையா " என்றாள் நந்தினி...

ம்ம்..பார்க்குறாங்களாம்..ஆனா ஜாதக பொருத்தம் இல்லையாம் "
என்றாள் ராதா.

"ஜாதகமா ? அதெல்லாம் பார்ப்பது வீண் வேலை.."

"ஏன்? உனக்கு நம்பிக்கை இல்லையா ?"

"நம்பிக்கை இருக்கு..அதனால தான் சொல்றேன்..!!விதிப்படி ஒரு விஷயம் நடக்கனும்னு இருந்தா அதை யாராலும் மாற்ற முடியாது ராதா.."

"விதியை மதியால் வெல்லலாம்.."

"ம்ஹூம் ..நிச்சயமா முடியாது..இதுக்கு ஒரு கதை கூட சொல்வாங்க...முன்னொரு காலத்தில பாச்கராச்சரியார் என்றொரு பெரிய கணித மேதை இருந்தாராம்..அவர் தன் மகள் லீலாவதிக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தாராம்..ஆனால் அவள் ஜாதகப்படி அவளை மணக்கும் மனிதன் இறந்து விடுவான்..இதை கணித்த பாஸ்கராச்சரியார் தன் மகளுக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை மிக துல்லியமாக கணித்தார்..சரியாக அவர் கணித்த நேரத்தில் திருமணம்  நடந்தால் அவர் மாப்பிள்ளை உயிருக்கு ஆபத்து கிடையாது..அப்படி துல்லியமாக நேரத்தை கணிப்பதற்காக ,தன் வீட்டில் இரண்டு பானைகளை ஒன்றின்மேல் ஒன்றாக வைத்தார்..மேலே இருக்கும் பானையில் ஒரு சிறிய துளை இட்டு அதில் தண்ணீரை நிரப்பி வைத்திருந்தார்..அந்த பானையில் உள்ள தண்ணீரின் அளவு குறைவதை வைத்து  நேரத்தை மிக துல்லியமாக கணக்கிட்டு, அவர் குறித்த நேரத்திலேயே தன் மகளின் திருமணத்தை நடத்தி வைத்தார்..பார்த்து பார்த்து எல்லாம் செய்தும், லீலாவதியின் கணவன் திருமணமான கொஞ்சம் நாட்களிலேயே இறந்து போனான்.அந்த கணித மேதைக்கு காரணம் புரியவில்லை .குழப்பத்தோடு தன் இல்லத்தில் நேரம் கணக்கிட தான் வைத்திருந்த பானையை  ஒரு முறை எட்டி பார்த்தார்.உள்ளே முத்து ஓன்று பானையின் துளையை லேசாக அடைத்திருந்தது..தான் கணித்த நேரம் தவறியதற்கான காரணம் அப்போது தான் அவருக்கு புரிந்தது.முத்து எப்படி பானைக்கு சென்றது என்று தன் மகளிடம் வினவினார் .."அப்பா பானையில எதுக்காக தண்ணி வச்சிருந்தீங்க? ஒரு நாள் நீரில் தெரியும் என் முக பிம்பத்தை பார்ப்பதற்காக பானைக்குள் எட்டி பார்த்தேன்..என் கழுத்தில் அணிந்திருந்த முத்து மாலையின் முத்து தவறி உள்ளே விழுந்திருக்கும் என்று நினைக்கிறேன்.." என்றாளாம்..பாஸ்கராச்சரியார் தன் தலையில் அடித்துக்கொண்டார்..விதி முத்து ரூபத்தில் வந்து லீலாவதியின் வாழ்க்கையோடு விளையாடியது..விதி வலியது ராதா ..அதை மதியால் வெல்வது நிச்சயமா முடியாது.."என்று நந்தினி சொல்லி முடித்த போது

"அம்மா..இதுக்கு மேல வண்டி போகாது ..நடந்து தான் போகணும் "என்றார் வண்டிக்காரர்.

"நடந்தா?நடந்து போனா எவ்ளோ நேரம் ஆகும் ?"

"வேகமா நடந்தா அரை மணி நேரத்தில் போயிடலாம்..வழியில தலையெல்லாம் சடை பிடிச்சு ,துணியெல்லாம் கிழிச்சுகிட்டு காத்தயின்னு ஒரு கிழவி இருக்கும்..அது கிட்ட மட்டும் பேச்சு கொடுக்காதீங்க ..அது ஒரு காதல் பைத்தியம் .."என்றார் வண்டிக்காரர்..

இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமுறை பார்த்துக்கொண்டு,
"சரிங்க!ரொம்ப நன்றி !" என்று கொஞ்சம் சில்லறையை அவர் கையில் கொடுத்து விட்டு நடக்க தொடங்கினர்...

நடக்கும் வழியில் ,ஒரு சிறிய கல்லை தன் காலால் எட்டி உதைத்தாள் நந்தினி ..
"என்னடி இது கால் பந்து ஆடிகிட்டே வர்ற ?" என்றாள் ராதா..

சிரித்தபடி," இது ஒரு விளையாட்டு ராதா "என்றாள் நந்தினி..

"விளையாட்டா?"

"ம்ம்,,விளையாட்டு தான்..உனக்கொரு விஷயம் தெரியுமா?கல்யாணத்துக்கு முன்னாடியே அருணை ரொம்ப நேசிச்சேன்.அவரு கிட்ட என் காதலை சொன்ன போது அவரு ஏத்துக்கவே இல்ல...கற்பனையிலேயே இருக்காத..நீ நெனக்கிறது நடக்காது அப்டின்னார்..தன் மனதை துறவு நிலையில் வைத்திருந்தார்..பொதுவாகவே அவருக்கு யார் மீதும் நம்பிக்கை கிடையாது..அதுவும் குறிப்பா பெண்கள் மீது சுத்தமா நம்பிக்கை கிடையாது..அவர் மனதுக்குள் நுழைய ஒரு சிறிய வாய்ப்பாவது கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு பல காலம் தவமாய் தவமிருந்தேன்..

கோயில்களுக்கு போவேன்.."இறைவா என் அருண் மனசுல எனக்காக ஒரு சின்ன இடத்தை மட்டும் வாங்கி கொடேன் " என்று வேண்டலாம்னு நெனைப்பேன்..ஆனா எதுவும் வேண்டாமல் திரும்ப வந்து விடுவேன்.

ஒரு முறை  காளி தேவி கோயில் ஒன்றுக்கு போயிருந்தேன்.பிரார்த்தனை சீட்டில் உங்கள் மனதில் உள்ள ஆசையை  எழுதி அம்பாள் பாதத்தில் வைத்தாள் ,நீங்கள் வேண்டியது நிச்சயம் பலிக்கும் என்றார்கள்.பத்து ரூபாய் செலவு செய்து ஒரு பிரார்த்தனை சீட்டை வாங்கி அதில் என் வேண்டுதலை எழுதலாம் என்று நினைத்தேன்.ஆனால் எழுத மனம் வரவில்லை..'எல்லாம் உனக்கு தெரியும்..நீயே பார்த்துக்கோம்மா.' என்று மட்டும் எழுதி அதை அம்பாள் காலடியில் வைத்தேன்..அப்போதெல்லாம் இப்படித்தான் கல்லை தட்டி விளையாடி என் காதலின் வெற்றியை கணிப்பேன்..

நான் தட்டி விடும் கல் நான் நினைக்கும் கோட்டை தாண்டி விட்டால்,என் அருண் எனக்கு தான்..ஒருவேளை தாண்டாவிட்டால் அந்த கல்லின் மீது எனக்கு பயங்கரமா கோபம் வரும் .வேகமாக நடந்து சென்று அந்த கல்லை அருகில் இருக்கும் ஏதாவது சாக்கடையில் தள்ளி விட்டு விடுவேன்..என் பேச்சை மதிக்காத கல்லுக்கு மரண தண்டனை கொடுத்ததாக நினைத்து உள்ளூர மகிழ்ந்து கொள்வேன்.."என்று நந்தினியை சற்று வியப்போடு பார்த்த படி..,

"அடி பாவி !!கோயிலுக்கு போவாளாம்..வேண்ட மாட்டாளாம்..ஆனால் கல்லை தட்டி காதலை கணிப்பாலாம் ..சரியான பைத்தியம் நீ..!"என்றாள் ராதா..

"ம்ம்...பைத்தியம் தான்...வெறும் பைத்தியம் இல்லை ..அருண் பைத்தியம்..!!உன் காதலுக்கு தூதாக நான் வேணும்னா போகட்டுமா என்று அந்த கடவுளே என்னிடம் கேட்டிருந்தால் கூட 'இல்லை வேண்டாம் 'என்று மறுத்திருப்பேன்..ஏன் தெரியுமா?காதல் ரொம்ப அழகான உணர்வு ராதா..அதை கட்டாயப்படுத்தி வாங்கி விட முடியாது..அது தானா வரணும்..நான் ஒன்றும் கல்லை காதலிக்கவில்லையே .ஒரு பெண்ணின் மன உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தியுள்ள ஒரு மனிதனை தானே காதலித்தேன்..அதனால் தான் அவர் மனமும் ஒரு நாள் கனியும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தேன்.

"சரி!சரி! அப்றோம் எப்டி தான் அவர் ஒத்துகிட்டார்?"

அத ஏன் கேக்குற ராதா..கவிதை கவிதையா எழுதி அவருக்கு அனுப்பிகிட்டிருந்தேன்.."என்று நந்தினி முழுமையாய் சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்ட  ராதா..

"உன் கவிதைகளை படித்து மயங்கிட்டாரா?" என்றாள்.

"இல்ல..பயந்துட்டார்"

"என்னடி சொல்ற??"

"ம்ம்...
உன்ன விரும்புது பொண்ணு
ப்ளீஸ் ஒத்துக்கோடா கண்ணு
கடலும் நீளமும் ஒண்ணு
நீ இல்லன்ன நான் மண்ணு

இந்த மாதிரி கன்னா பின்னான்னு கவிதைகள் எழுதி அவருக்கு அனுப்பிகிட்டேயிருந்தேன்..ஒரு நாள் போன் பண்ணினார்..உன்னை நேரில் பார்க்கணும் அப்டின்னார்..அவர் சொன்ன இடத்துக்கு நானும் போனேன்..அங்கே அவர் காத்திருந்தார்...

நான் போய் பத்து நிமிடங்கள் ஆகியும் அவர் ஒரு வார்த்தை கூட பேசல..

"பேசணும்னு வர சொல்லிட்டு இப்டி பேசாமலே இருந்தா என்ன அர்த்தம்?" அப்டின்னேன் ..

"பேச்சு வரலேன்னு அர்த்தம் "என்றார் அவர்..

எனக்கு கோபம் வந்து விட்டது..சுற்று முற்றும் ஒரு முறை பார்த்துக்கொண்டேன்..சட்டென்று இருக்கையை விட்டு எழுந்து

"நான் கெளம்புறேன் " என்றேன்..

அவர் என் கையை பற்றிக்கொண்டார் ..அவரை ஒரு முறை பார்த்தேன்..அவர் தன் பார்வையை இருக்கையின் புறமாய் செலுத்தி 'உட்காரு' என்பதை பார்வையிலேயே சொன்னார்..முதல் முதலாய் அவர் கை பிடிக்குள் இருப்பது ஒரு வித பயத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது..

என்னால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை..பேசாமல் தலை குனிந்தபடி உட்கார்ந்து கொண்டேன்..

"நந்தினி!" என்றார் அவர்..

என் நெஞ்சத்து ஏக்கத்தை எல்லாம் கண்களில் தேக்கியபடி அவரை ஒரே ஒரு பார்வை பார்த்தேன்..

அவரோ தன் கண்களால் என் கண்களை பருகியபடி..

"வில் யு மேரி மீ ?"என்றார்..

"என்ன திடீர் ஞானோதயம் ?"என்றேன்..

"கேட்கனும்னு தோனுச்சு "அப்டின்னார்.

அத்துடன் அவர் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை..அவரோ..

"ஆனா ..ஒரே ஒரு கண்டிஷன் "என்றார்..

என்ன கண்டிஷனா இருக்கும் என்று உள்ளூர நான் யோசித்துக்கொண்டிருக்கும் போதே..

"இனிமே கவிதை எழுதுறேன் அப்டின்குற பேர்ல தமிழை கொலை பண்ண கூடாது சரியா?" என்றார்..
அவர் என் காதலை ஏற்றுக்கொண்டது அளப்பரிய மகிழ்ச்சியை கொடுத்தது.என் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாய் கொட்டியது..கொஞ்சம் சந்தோஷம்ன சிரிக்கலாம் ..அளவுக்க அதிகமான சந்தோஷம்னா அழுகை தானே வரும்..நான் என் உள்ளங்கையில் முகம் புதைத்து தேம்பி தேம்பி அழுதேன்..

அதை அவர் தவறாக புரிந்து கொண்டார்..

"ஏய் !!ப்ளீஸ் !ப்ளீஸ்!அழாத..கவிதை எழுதனும்னா தாராளமா எழுது நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்" என்றார்..

எனக்கோ சிரிப்பு வந்து விட்டது..கன்னம் வழி கண்ணீர் வழிந்தோட..சிரிப்பு ஒரு புறம் தாண்டவமாட...அப்பப்பா அந்த நிமிஷத்தை விவரிக்க வார்த்தையே கிடையாது.."

என்றபடி தன் காலில் தட்டு பட்ட ஒரு சிறிய கல்லை வேகமாக எட்டி உதைத்தாள் நந்தினி..பேச்சு சுவாரஸ்யத்தில்  தன் எதிரில் இருந்த பெரிய கருங்கல்லை அவள் கவனிக்கவில்லை...அவளது வலது கால் அந்த கல்லில் மோதியதில் கட்டை விரலில் பலத்த அடி ஏற்பட்டு இரத்தம் பீறிட்டது..

"ஆ... அம்மாஆஆ  ...." என்று அலறினாள் நந்தினி .

"என்னாச்சு டி " என்ற ராதாவிடம்

"ஒரு சிறு கல்லை தட்டினேன் .என் காலில் பெரிய அடி பட்டு விட்டது " என்றாள் அவள்.

ராதாவோ 'களுக்' என்று சிரித்து விட்டாள்.

" என் வலி உனக்கு சிரிப்பா இருக்கா?"

"இல்ல நந்து !! எங்க வீட்டு பக்கத்துல ஒருத்தர் குடி போதையில் வண்டி ஓட்டி ,சாலையோரமாய் நிறுத்திவைக்க பட்டிருந்த  லாரியின் மீது மோதி இறந்து போனார். காதலும் ஒரு போதை என்பது உன்னை பார்க்கும் போது தான் தெரியுது . சிவனேன்னு ஒரு ஓரமா கிடந்த கல்லின் மீது நீயாய் போய் மோதிகிட்டியே அத நெனச்சு சிரிச்சேன்.."

"இவளுக்கு எப்போ அடி படும் ..எப்போ அறிவுரைகளை அள்ளி வீசலாம்னு காத்துட்டிருந்தியாக்கும்.??ஐயோ!!!ரத்தம் கூட வருதே.!!"

ராதாவோ ," சரி !சரி!சாரி !" என்று தன கையில் இருந்த கைக்குட்டையை எடுத்து, குடிப்பதற்காக பாட்டிலில் வைத்திருந்த தண்ணீரை அதில் ஊற்றி ,அந்த கைக்குட்டையை ஈரப்படுத்தினாள்..பின்னர் அந்த ஈரத்துணியை நந்தினியின் ரத்தம் வழியும் கட்டை விரலில் கட்டி விட முயன்றாள்.

நந்தினி நின்று கொண்டிருந்ததால் அவளால் சரியாக கட்டி விட முடியவில்லை .அதனால் நந்தினியை சற்று தொலைவில் தெரிந்த கல் இருக்கையை நோக்கி மெதுவாக அழைத்து சென்றாள் ராதா.பின்னர் அவளை அந்த கல்லில் அமர செய்து , அவளது காலில் அந்த ஈர கைக்குட்டையை கட்டி விட்டாள்.

இந்நிலையில் இரண்டு கண்கள் இவர்களை தொடர்ந்து வருவதை இருவருமே கவனிக்கவில்லை..

'டப் டப் 'என்று யாரோ கை தட்டும் ஓசை கேட்டு இருவரும் திரும்பினர்..

அங்கே சற்று தொலைவில் கந்தல் ஆடையும், சடை  பிடித்த தலையுமாய் ஒரு கிழவி நின்று கொண்டிருந்தாள். சற்று பயந்த நந்தினி ,"ராதா!!அதோ பாரேன்...அந்த வண்டிக்காரர் சொன்ன காத்தாயி இதுவா தான் இருக்கும்னு நெனக்கிறேன் " என்றாள் .

ஆமோதிப்பது போல் தலை அசைத்தாள் ராதா.

இவர்களை நோக்கி நடந்து வந்த காத்தாயி ,'ஏய் பொண்ணுங்களா !!இந்த உச்சி வெயிலில் கல்லறை மேல் உட்கார்ந்து என்ன பண்ணிட்டிருக்கீங்க ?" என்றாள் சப்தமாக.

"அட இந்த பைத்தியக்கார கிழவி என்ன உளறுகிறாள் " என்று முணுமுணுத்த படி சற்று குனிந்து அந்த கல்லை பார்த்த ராதா அதிர்ச்சியுற்றாள்.

ஆம்!அது கல்லறை தான்.தோற்றம் மறைவு என்று பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்கள் பாதி அழிந்த நிலையில் இருந்தன..

"ஹே! நந்து எழுந்திரு !!கிழவி சொல்றது சரி தான்..இது ஏதோ வில்லங்கம் போல் தெரியுது ..வா !!வேகமா நடந்துடலாம் "என்று அவளை இழுத்தபடி நடக்க தொடங்கினாள் ராதா..

ஓட்டமும் நடையுமாய் போகும் ராதாவின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் , சற்று நொண்டியபடி பின் தொடர்ந்தாள்  நந்தினி..

கொஞ்சம் தூரம் கடந்த பிறகு ,ஒரு முறை திரும்பி பார்த்த நந்தினி,

"ஹே ராதா !!அந்த கிழவி போயிடுச்சு !!இனியாவது கொஞ்சம் மெதுவா நடையேன் !!!" என்றாள்..

"நல்ல வேளை அந்த கிழவி போயிடுச்சு !!அது பைத்தியம்னு வண்டிக்காரர் சொன்னாரே நினைவிருக்கா !"என்றாள் ராதா.

"ம்ம்ம்.." என்று தலையசைத்தவள்
"இன்னும் எவ்ளோ தூரம் நடக்கணுமோ தெரியலியே " என்றாள் .

சற்று தொலைவில் ,
ஒரு புளிய மரத்து நிழலில் ,நடுத்தர வயதுள்ள மனிதன் ஒருவன் தலையில் முண்டாசும் கையில் பீடியுமாய் குத்த வைத்து அமர்ந்திருந்தான்..அவன் கையுள்ள பனியனும்,கட்டம் போட்ட அழுக்கு லுங்கியும் அணிந்திருந்தான்..

இருவரும் அந்த மனிதனை நோக்கி நடந்தனர்.

"அண்ணே !!தலைவெட்டான் பட்டிக்கு எப்டி போகணும் ?" என்றாள் ராதா.

அந்த மனிதன், இருவரையும் மேலும் கீழுமாய் ஒரு முறை பார்த்துக்கொண்டான்.பின்னர், தன் வலது கையில் பீடியை பிடித்து கொண்டு ,
"அங்க யாரை பார்க்கணும்?" என்றான்.
" அது உனக்கு தேவை இல்லை .வழியை கேட்டால் வழியை மட்டும் சொல் ." என்று முகத்தில் அறைவது போல் தான் ராதா பேசுவாள் என்று நந்தினிக்கு நன்றாக தெரியும்,.அதனால் அவள் அப்படி ஏதும் பேசுவதற்கு முன்னால் தானே பதில் சொல்லி விட வேண்டும் என்று முந்தி கொண்டாள்..
"மிட்டாய் கார சுப்பண்ணா வீட்டுக்கு போகணும் " என்ற நந்தினியை கோபமாய் ஒரு முறை பார்த்தாள் ராதா.அவள் பார்வை இவனுக்கெல்லாம் எதுக்கு பதில் சொல்ற என்பது போல் இருந்தது.

ராதா எப்போதும் இப்படி தான் .யாரையும் எளிதில் நம்ப மாட்டாள் .ஆனால் நந்தினியோ குழந்தை போல் எல்லோரையும் நம்பி விடுவாள்.

இந்த விஷயத்தில் அருணுக்கும் நந்தினிக்கும் இடையே கூட சின்ன சின்ன வாக்கு வாதங்கள் நடப்பதுண்டு..

"இப்டி குழந்தைதனமா எல்லாரையும் நம்ப கூடாது நந்து " என்பான் அவன்.

"நல்லவங்கள சந்தேக படுறது கூட தப்பு தாங்க " என்பாள் அவள்..

இப்படி தொடங்கும் வாக்குவாதம் நீண்டு கொண்டே போகும்.

"நந்து!!ஒரு மனிதனின் குணத்தை தெளிவா ஆராய்ந்து தெரிஞ்சுக்காம அவங்க மேல நம்பிக்கை வைப்பது புத்திசாலித்தனம் இல்லை நந்து!" என்பான் அவன் தன்னையுமறியாமல் பேச்சுக்கு இடையில் அவள் பெயரை அடிக்கடி உச்சரித்தபடி..

அவனுக்கு பதில் சொல்லும் விதமாக..

"ஆமாமா !!நீ உன் ஆராய்ச்சியை முடிக்கிறதுக்குள்ள அந்த மனுஷங்க ஆயுசு முடிஞ்சு போகும்.நம்பிக்கை வைப்பது என் கடமை..நான் நம்பிக்கை வைக்கும் மனிதர்கள் என்னை ஏமாற்றி விட்டால், நம்பியவளை ஏமாற்றிய பாவம் அவர்களை தானே சேரும் "என்பாள் அவள்.

"ம்ம்ம்..ஏமாந்த பாவம் உன்னை சேரும்..பாவமாம் புண்ணியமாம் ..இதோ பாரு நந்து, நீ இப்டியே இருந்தா எல்லோரும் உன்னை முட்டாள் ஆக்கி விடுவார்கள்.."

"நான் முட்டாள் ஆகாமல் பார்த்துக்க தான் நீ இருக்குறியே " என்பாள் நந்தினி, தன் பார்வையால் அவனை ஊடுருவியபடி..

தன் மனைவி எதை சொன்னாலும் ,கடைசியில் ஒரு துளி காதலையும் கலந்து விடுகிறாளே என்று உள்ளூர அவளை ரசித்ததனால் ,முகத்தில் பளிச்சிட்ட புன்னகையை மறைக்க முயன்றவாறு,

"சரி சரி !!ஒரு கப் காபி கிடைக்குமா ?" என்று பேச்சை மாற்றுவான் அருண்..

'ஆமா! என் வாயை  அடைக்கணும்னா எதாச்சு வேலை குடுத்து கிச்சனுக்கு அனுப்பிட வேண்டியது." என்று முனுமுனுத்தபடி அடுக்களைக்குள் நுழைவாள் அவள்.

அந்த புளிய மரத்தடி மனிதனிடம்   மிட்டாய் கார சுப்பண்ணா வீட்டுக்கு போகணும் என்று நந்தினி சொன்னதும்,

"ஒ! சுப்பண்ணா வீட்டுக்கா ??இந்த ஒத்தையடி பாதையில நேரா போயி சோத்து கை பக்கமா திரும்பினா தலைவெட்டான்பட்டி ன்னு ஒரு பெரிய போர்டு இருக்கும் .ஊருக்குள்ள போயி சுப்பண்ணா வீடு எதுன்னு கேட்டீங்கன்னா  சொல்வாங்க .." என்றான்.

"நன்றிங்க !! என்றபடி இருவரும் மீண்டும் நடக்க தொடங்கினர்..

கொஞ்சம் தூரம் பேசாமல் நடந்த பின் ,

"நந்து!!பொதுவா காதலில் தோற்ற ஆண்கள் தானே பைத்தியம் ஆவாங்க..பெண்களுக்கு கூடவா பைத்தியம் பிடிக்கும் என்று ராதா சொன்ன போது ,காத்தாயி கிழவியை மனதில் வைத்துக் கொண்டு தான் இவள் இப்படி கேட்கிறாள் என்பதை புரிந்து கொண்டாள் நந்தினி ..

"ம்ம்...அதெல்லாம் காதலின் அளவை பொறுத்தது ராதா !!காதல்னா என்ன??அன்பின் இன்னொரு பரிமாணம் தானே !அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம் தான்.காதலும் அப்படி தான் ..அது மிதமிஞ்சி போனால் மனநிலை பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு..பொதுவாக ஆண்கள்  வலியை மனதுக்குள் மறைத்து வைப்பவர்கள்..அவர்களால் வாய் விட்டு அழ முடியாது..அப்படி அழுவது ஆண்மைக்கு அழகும் கிடையாது..ஆனால் பெண்கள் அப்படி கிடையாது ..ஒரு சின்ன பிரச்சனையை என்றால் கூட  ஐயோ அம்மா என்று ஒப்பாரி வைத்து  வலியை தீர்த்து கொள்வார்கள் ..அவர்கள் இதயத்தில் இருக்கும் பாரமெல்லாம் கண்ணீரால் கரைந்து போய் விடும்..இந்த காத்தாயி மாதிரி சில பெண்கள் மட்டும் விதி விலக்கு."


"நீ சொல்றதும் சரி தான்..ஆனா அது காதலுக்கு பொருந்தாது..ஒரு ஆண் காதலில் தோற்று விட்டால் ,அவள் தாடி வளர்த்துக் கொள்ளலாம் ,தேவதாஸ் ஆகி டாஸ்மாக்கே கதி என்று கிடக்கலாம்,புண் பட்ட மனதை புகை விட்டு ஆற்ற போகிறேன் என்று தன்னை தானே அழித்துக்கொள்ளலாம் , பைத்தியம் போல் தெருவில் சுற்றலாம், 'சீ !!சீ! இந்த பொண்ணுங்களே இப்படி தான் மச்சி..எவளையும் நம்ப கூடாது ' என்ற அழுத்தமான முடிவோடு இருக்கலாம்,வஞ்சம் வைத்து பழி வாங்க துடிக்கலாம், இங்கே எல்லாத்துக்கும் ஆணுக்கு உரிமை உண்டு..ஆனால் பாவம் இந்த பெண்ண ஜென்மம்..காதலில் தோற்று விட்டால், வேறு எதை பற்றியும் யோசிக்காமல் இன்னொருத்தரை கல்யாணம் பண்ணி , அவர் குழந்தைக்கு அம்மா ஆகி விட வேண்டும்..ம்ம்.."

"வேறென்ன பண்ணனும் அப்டின்குற ??காதலில் தோற்ற பெண்கள் எல்லாம் பைத்தியம் ஆகி தெருவில் திரியனும் அப்டிங்குரியா??ஒரு வேளை அப்படி ஒரு நிலை  வந்தால் என்ன ஆகும்னு யோசிச்சு பாத்தியா ??தாய்மை உணர்வோடு அன்னை ஒருத்தி ,தன் குழந்தைக்கு பாலூட்டுவதற்காக முந்தானையை விலக்கினால் கூட எங்கே என்ன தெரிகிறது என்று எட்டி பார்க்கும் ஈனப்பிறவிகள் வாழும் சமூஹம் ஆச்சே இது ..இவர்களுக்கு மத்தியில் மதியிழந்த பெண்கள் மானத்தோடு வாழ முடியுமா??இப்படி பைத்தியக்காரியாய் வேசியாய் தெருவில் திரிவதை விட, ஒருவனை மணந்து அவனுக்கு பத்தினியாய் வாழ்வது ஒன்றும் பாவமான செயல் இல்லை ராதா !!" என்று நந்தினி சொல்லி முடித்த போது ஆமோதிப்பது போல் "ம்ம்" என்றபடி தலையசைத்தாள் ராதா...

இருவரும் பேசி பேசி நடந்ததால் ,கடந்த தூரமும் நடந்த களைப்பும் தெரியவில்லை ..

சற்று தொலைவில் தலைவெட்டான்பட்டி என்ற போர்டு தெரிந்தது..

(தொடரும்..)