Friday 25 October 2013

நினைவெல்லாம் அருண்..

episode 7
----------

"ஏய் நந்து!!!நீ இன்னும் இறங்கலியா ?" என்றபடி அவளை நோக்கி இரண்டடி எடுத்து வைத்து ஒரு வழியாக இறக்கி விட்டாள் ராதா ..

ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டிருந்த அருண்..," நந்து!" என்றபடி அவள் அருகில் சென்றான்..

அவளோ " நான் அருண் கிட்ட போகணும்..நான் என் அருண் கிட்ட போகணும்  " என்று அதே வரியை தான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாள்..
 அவன் அவள் தோளை பிடித்து உலுக்கினான்..

"நந்து!!அருண் தான் வந்திருக்கேன்!!பார் என்னை!!" என்றான்..

அவளோ ," அருண்..அருண்.." என்றபடி ,அதற்கு மேல் பேச சற்றும் திராணி இல்லாதவளாய் , அவன் நெஞ்சோடு  சாய்ந்தாள்.

மருத்துவமனையில் ,

நடந்ததையெல்லாம் அருணிடம் விவரித்தாள் ராதா ..

நந்திநிக்கோ இன்னும் நினைவு திரும்பவில்லை ..அருண் ராதாவை நோக்கி,

" உன்னை நம்பி தானே அனுப்பி வச்சேன் .." என்றான்..ராதாவுக்கோ கோபம் வந்தது..

" உங்க பயந்தாங்கொள்ளி பொண்டாட்டிய என் தலைல கட்டி அனுப்பி வச்சிட்டு இப்போ பழிய தூக்கி என் மேலே போடுறீங்களா??நேற்று ராத்திரி முதல் இங்க வந்து சேர்வது வரை எப்போவும் ," நான் அருண் கிட்ட போகணும்..நான் அருண் கிட்ட போகணும் னு  புலம்பிகிட்டே இருந்தா ..நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா??அவ்வளவு ஏன்..நேற்று ராத்திரி பத்து மணிக்கெல்லாம் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துட்டோம்..எத்தன முறை அவ கிட்ட சாப்பிடு சாப்பிடுன்னு சொன்னேன் தெரியுமா??காலையில வாங்கின பிரெட் கூட இருந்துச்சு..நான் தோசை வாங்கி சாப்ட்டேன் ..ஆனா அவ...நான் வாங்கி குடுத்த தோசைய தொட்டு கூட பார்க்கல...,சும்மா " நான் அருண் கிட்ட போகணும்னு புலம்பிகிட்டே  இருந்தா..!!!ஒரு நாள் முழுக்க சாப்டாமலே இருந்தா மயக்கம் வராம வேறென்ன பண்ணுமாம்..!!" என்று பேசி முடித்த போது அவள் கண்கள் லேசாக பனித்தது...

அவள் நிலையை புரிந்து கொண்டவன் , சற்று நிதானித்து ." ம்ம்..முதலில் உட்கார்" என்று அருகில் இருந்த நாற்காலியை இழுத்துபோட்டு ,அவளை அமர செய்தான்..

"நந்து பக்கத்துலையே இரு..இதோ வந்துடுறேன்.." என்று அந்த அறையை விட்டு வெளியே சென்றான்..

சில நிமிடங்களில் கையில் ஒரு சிறிய பொட்டலத்தோடு திரும்ப வந்தான்..

" என்ன இது?" என்றாள் ராதா..

"இட்லி வாங்கிட்டு வந்திருக்கேன்..முதல்ல சாப்பிடு " என்று அவள் கையில் அந்த பொட்டலத்தை  கொடுத்தான் ..

அதை வாங்கி கொண்ட ராதா,கையில் தன் கைபேசியை எடுத்துக் கொண்டு..

" இதோ வந்துடுறேன்.."என்றபடி வெளியே சென்றாள்..

அவனோ  படுக்கையில் கண்கள் மூடிய படி கிடந்த தன மனைவியின் அருகில் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு , அதில் உட்கார்ந்து கொண்டான்..


அவள் முகத்தையே  பார்த்த படி அமர்ந்திருந்தான்..

என்றோ நடந்த அந்த சம்பவம் அவன் நினைவிற்கு வந்தது..


அன்று இருவருமாய் ஒரு பெரிய ஷாப்பிங் மாலிற்குள் நுழைந்தனர்..

ஏதேதோ சாமான்களை வாங்கிவிட்டு அங்கிருந்த பெண்ணிடம்,

" கண் மை இருக்கா?" என்றாள் நந்தினி..

"ம்ம்..இருக்கு மேடம்...வெறும் 200 ரூபாய் மட்டும் தான் " என்றாள் அந்த பெண்..

"இருநூறு ரூபாயா ?" என்று அதிர்ச்சியோடு கேட்ட அருணிடம்,

" ஆமா சார் ...இந்த கண் மை smudge  ஆகாது ..( கலைந்து போகாது..)அப்டியே கண்ணுக்குள்ளேயே இருக்கும்.." என்றாள் அந்த பெண்..

" இதோ இது எத்தனை ரூபாய் ?" என்று தன கையில் ஒரு சிறிய கண் மை டப்பாவை எடுத்தபடி அந்த பெண்ணிடம் வினவினாள் நந்தினி..

"அது கலைந்து போகும் மேடம் ...அஞ்சு ரூபா தான் " என்றாள் அந்த பெண்..

அதற்கு நந்தினி பதில் சொல்வதற்குள் ,

"யா...அந்த மாதிரி smudge ஆகுற மை தான் வேணும்..." என்றான் அருண்..

பதில் சொல்ல அவன் ஏன் முந்திக்கொண்டான்..???காரணம் இல்லாமல் இல்லை..

அவள் கண்ணில் மை இடுவாள் ..கொஞ்சம் நேரத்தில் அது கலைந்து கண்ணிற்கு வெளியே வந்து விடும்.."ஏ நந்து!!மை கலஞ்சிருக்கு பாரு " என்பான் அவன்..உடனே அவள் தன் வலது கை ஆள்காட்டி விரலால் , தன் கண்ணிற்கு கீழே வழிந்திருக்கும் மையை அழகாக துடைப்பாள்..ஆனாலும் முழுமையாய் துடைத்திருக்க மாட்டாள் ..உடனே அவன் அவள் அருகில் போய் அவள் விழிக்கு வெளியே வழிந்திருக்கும் மையை தன் கையால் துடைப்பான்..இப்படி வெறும் அஞ்சு ரூபாயில் அடிக்கடி நடக்கும் காதல் காட்சியை இருநூறு ரூபாய் கொடுத்து எந்த மடையனாவது தொலைப்பானா???

விற்பனைக்கு நின்ற பெண் வைத்த கண் வாங்காமல் அருணையே பார்த்துக் கொண்டு நின்றாள். 


அதை கவனித்த நந்தினியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன..

"ஹலோ " என்று அவள் சொல்வது கூட தெரியாமல் அந்த பெண் அருணையே பார்த்து கொண்டிருந்தாள் ..

நந்தினி மீண்டும் தன் கையை சொடுக்கி , 

" ஹலோ , உங்கள தான்.." ம்ம்..???" என்று தன் புருவத்தை உயர்த்தியபடி கேட்டாள்..

அதற்கு அந்த பெண்.." மேடம்..யுவர் ஹஸ்பன்ட் இஸ் ரியலி ஹாண்ட்சம்.." என்றாள் ..

அருண் தனக்கு மட்டும் உரிமையானவன் என்பதை அழுத்தமாக சொல்வதற்காகவோ என்னவோ ,நந்தினிஅருனின் கை இடுக்கில் தன் கையை நுழைத்து இறுக பற்றிய படி ,

"ஐ நோ " என்றாள்..

அதற்கு மேல் அவள் அங்கே நிற்கவில்லை ..

"மையும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் !வாங்க போகலாம் !!" என்றபடி  அவனை அப்படியே இழுத்து செல்ல முயன்றாள்..

அவனோ.." ஏன் நந்து..இப்டி பண்ற??உனக்கு வேணும்னா இருநூறு ரூபா மையே வாங்கி தர்றேன்..!!" என்றான்..

அவளோ.."ஒன்னும் தேவையில்ல..வேற கடையில வாங்கிக்கலாம்.." 
என்று பிடிவாதமாய் அவனை இழுத்துச் சென்றாள்..அப்படி போகும் போது,ஒரு முறை திரும்பி விற்பனைக்காக நின்ற அந்த பெண்ணை சுட்டெரித்து விடுவது போல் ஒரு பார்வை பார்த்தாள்..

அந்த கனல் கக்கும் விழிகள் இன்றோ மூடிய நிலையில் ..அருணால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..நெஞ்சொரமாய் வலிப்பது போல் இருந்தது..எப்போது விழிப்பாள் எப்போது பேசுவாள் என்ற ஏக்கத்தோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

சற்று நேரத்தில் விழி மலர் விரிந்தது..அவள் தன் இமை கைகளை தட்டியபடி அவனை ஒரு முறை பார்த்தாள் ..தன் கைகளை மெல்ல நகர்த்தி படுக்கையின் மீதிருந்த அவனது கைகள் மீது வைத்தாள்..

"அருண்.." என்றவளின் மெல்லிய குரல் கேட்டு  அவளை பார்த்தான் அவன்...

அவளோ விம்மி விம்மி,

"என்னை ஏன் தனியா அனுப்பி வச்ச??நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா?? " என்றாள் அவனை நோக்கி..

"நானா போன்னு சொன்னேன்.." என்றான் அவன்..

"நான் என்ன பண்ண??நான் சரின்னு நெனச்சு பண்றது எல்லாமே தப்பாயிடுது..இப்போ பாரு..நீ கூட என்ன திட்டுற..ஏன் அருண்..நான் திரும்பவும் இந்த மாதிரி எதாச்சு தப்பு பண்ணினா நீ என்னை வெறுத்துடுவியா??"

"ம்ம்...அப்போ நீ திரும்பவும் தப்பு பண்ணுவ..அப்டி தானே.." என்றான் அவன்..

ஏற்கனவே கண்ணீரோடு இருந்தவளின் முக வாட்டத்தை பொறுக்க மாட்டாமல்..

அவள் தலையில் லேசாக தட்டி..

"குழந்தை தப்பு பண்ணினா அம்மா கோவப்படுவா ...ஆனா வெறுக்க மாட்டா..என்னால உன்னை வெறுக்க முடியாது டி.." என்றான்..

அவளுக்கோ மேலும் அழுகை வந்தது..அவனை நோக்கி..

"ஐ ஆம் சாரி அருண்..இனிமே உன் பேச்சை மீறி நான் எங்கயும் போக மாட்டேன்.."என்றாள்..

" சரி மா " என்று அவளை சமாதான படுத்த முயன்ற்றவனிடம் ,

"நேத்து full ஆ நான் சாப்டவே இல்ல தெரியுமா??இதோ பாரு என் காலில்.." என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் அவள் காலை பார்த்தான் அவன்..

"அடிபட்டது ரொம்ப வலிக்குதா?" என்றான் அவன்..

அதற்கு அவள்,

"ஐயோ ..வலிய விடு அருண்..எவ்ளோ வலி என்றாலும் தாங்கிக்குவேன்..ஆனா..ஆனா.." என்று சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் விம்ம தொடங்கினாள்..

கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட,

"நீ எனக்கு வாங்கி கொடுத்த கொலுசு தொலஞ்சு போச்சு அருண்.." என்றாள்..

"அத்துடன் நிறுத்தாமல்,

"எல்லாத்துக்கும் காரணம் நான் தான்..இனிமே நான் அடம் பிடிச்சாலும் ,என்னை தனியா எங்கயும் அனுப்பிடாத..!!" என்ற படி விம்மி விம்மி அழுதாள்..

"சரிம்மா...நீ இப்படியே அழுதுகிட்டு இருந்தா நம்ம குழந்தையும் அழுமூஞ்சியா தான் பிறக்கும் .." என்று அவன் சொன்னதன் அர்த்தம் புரியாமல் , கண்ணீர் வழியும் கண்களோடு அவனை ஒரு முறை பார்த்தாள் நந்தினி..

அவன் நாற்காலியை விட்டு எழுந்தான்...அவளது படுக்கையில் அமர்ந்து கொண்டான்..தன் இடது கரத்தால் அவளை அணைத்தபடி , வலது கரத்தால் அவளது கண்ணீரை துடைத்தான்..அவள் நெற்றியில் முத்தமிட்டான்..அவளுக்கு புரியவில்லை என்பதை உணர்ந்ததால் , தன் தலையை அசைத்தபடி,

"ம்ம்..டாக்டர் confirm  பண்ணிட்டார்.." என்றான்..

அழுவதா சிரிப்பதா என்று புரியாமல் திணறிக் கொண்டிருந்தவளை மேலும் திணற விடாமல் , தன் மார்போடு சேர்த்து அணைத்துக்
கொண்டான்..

இரண்டு ஆண்டுகள் கழித்து..

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாசலில்..

"அருண்..உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்.." என்று
எதையோ சொல்ல தொடங்கினாள் நந்தினி..

"என்ன "என்று கேட்கும் பாவனையில் தலை அசைத்தான் அருண்..

"என் கூட வேலை பார்க்குறா இல்ல ..வனிதா ..அவ தன்னோட ஊருக்கு என்னை ரொம்ப நாளா கூப்பிட்டு கிட்டே இருக்கா...அவ ஊரு பேரு என்ன தெரியுமா..காட்டுபுதூர்.."என்றாள் நந்தினி ..

"ஸோ....."  என்றான் அருண்,அவள் முகத்தை பார்த்தபடி..

(அட...திரும்பவும் தொடங்கி விட்டாளே..எதாச்சு சொல்லி என்னை சம்மதம்னு சொல்ல வைப்பாளே ...லஞ்சமா முத்தம் வேற கொடுப்பாளே.. என்று ஏகப்பட்ட எண்ணங்கள் அருண் சொன்ன "ஸோ" என்ற ஒற்றை ஆங்கில வார்த்தைக்குள் புதைந்து கிடந்தன..)

" ஸோ... !!காட்டுபுதூர் அப்டின்னு பேரு இருக்குற ஊருக்கெல்லாம் என் வீட்டுக்காரர் என்னை அனுப்பி வைக்க மாட்டார் அப்டின்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன்.." என்றபடி அவனை பார்த்து கண் சிமிட்டினாள்..

"ஐயோ..இம்ச ..!!!என்று அவன் பாணியில் அவள் தலையில் லேசாக ஒரு தட்டு தட்டி தன் வலது கையால் அவளது தோளை பற்றிக்கொண்டான்..

இடது கையில் தூக்கி வைத்திருந்த அவனது மகளோ , தன் பிஞ்சு கைகளால் அவன் கழுத்தை சுற்றி பிடித்த படி, "ப்பா .." என்று மழலை மொழியில் பேச எத்தனித்தாள்..

முகத்தில் புன்னகை தவழ..மனமெல்லாம் சந்தோஷத்துடன்..

மூவருமாய் கோயிலுக்குள் நுழைந்தனர்..


AND THEY LIVED HAPPILY FOREVER.....

(முற்றும்..)