Monday 29 April 2013

shooting star!!!!!!!!!!



இன்னைக்கு ராத்திரி நெறைய எரி நட்சத்திரங்களை பார்க்க முடியுமாம்..சோ மறக்காம மொட்டை மாடிக்கு வந்துடு நித்யா என்றாள் மலையாள தோழி ஒருத்தி.மேலும் ,அதை பார்க்கும் போது என்ன வேண்டிகிட்டாலும் அப்படியே நடக்குமாம்..என்றாள்...வேண்டுதலுக்கா பஞ்சம்.."அப்டின்னா கண்டிப்பா வர்றேன் சேச்சி என்றேன் நான்.இருந்தாலும் பொன்னியின் செல்வன் கதையில் "வானில் எரி நட்சத்திரங்கள் தென்படுவது ஏதோ கெட்ட சகுனம் " என்று படித்தது போல் ஒரு நினைவு..அதனால் வேறொரு பெண்ணிடம் சென்று, "அக்கா நான் இன்னைக்கு எரி நட்சத்திரம் பார்க்க போறேன் நீங்களும் வர்றீங்களா?"என்றேன்..

"எரிநட்சத்திரம் பாக்குறது நல்லது இல்ல அப்டின்னு சொல்வாங்க ..ஒருவேளை பார்த்தால் அருகில் இருக்கும் ஏதாவது பச்சை மரத்தை பார்க்க வேண்டும் " என்றாள் அந்த அக்கா.மீண்டும் வேறொரு பெண்ணிடம் அதே கேள்வியை கேட்டேன்..அவ என்ன சொன்னா தெரியுமா??"நித்யா எரிநட்சத்திரம் பார்த்த ஞாபக சக்தி போயிடுமாம்.அதனால அதை பார்த்த உடனே ஏதாவது பூவின் பெயரை நினைத்துக்கொள்ள வேண்டும் " என்றாள்..மீண்டும் அதே கேள்வியை நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.."நித்யா எரிநட்சத்திரம் பார்ப்பது நல்லது இல்ல ..அப்டி பார்த்தா துணியில் இருக்கும் நூலை பிய்த்து பிய்த்து எறிய வேண்டும் ..அப்போ தான் அந்த தோஷம் போகும் " என்றார்..
இவர்கள் சொன்ன பதிலை கேட்டு பயந்து போய் என்னை மாடிக்கு அழைத்த மலையாளி பெண்ணிடம் சென்று கேட்டேன்..அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா ??"ஐயோ அப்டி சொல்றவங்க எல்லாம் வட்டு ..(லூசு) .எங்கள் நாட்டில் எரிநட்சத்திரம் பார்ப்பது ரொம்ப நல்லதுன்னு சொல்வாங்க..இங்க சிவாஜி கணேசன் மாதிரி எங்க ஊருல உள்ள பெரிய நடிகர் ஒருத்தர் வீட்டு பக்கத்துல உள்ள ஒரு கோயில் புல்வெளியில் படுத்து கிடந்தாராம் ..அப்போ அவரு எரிநட்சத்திரம் பார்த்தாராம் .அதுக்கு பிறகு தான் அவரு பெரிய ஸ்டார் ஆனாராம்..நீ இன்னைக்கு ராத்திரி வர்றியா இல்லையா ?"என்றாள்.  .("நாலு பேரு நாலு விதமா பேசுறது அப்டின்னா இது தான் போலும்) .."ஸ்டார் ஆக வேண்டும் என்ற நப்பாசையில் நானும் வர்றேன் என்றேன்.."


அன்றிரவு ஏழு மணிக்கே மொட்டை மாடிக்கு போய் காவல் இருந்தோம்..எரினட்சத்திரத்தை தேடி வானம் முழுவதும் நோட்டமிட்டோம்..ம்ம்ம்..தெரிஞ்சுதுங்க..
"ஹே !!சேச்சி அங்க பாரு எரி நட்சத்திரம் என்று என் ஆள் காட்டி விரலை தூக்கி காட்டி சந்தோஷத்தில் குதித்தேன்..அட!!எரி நட்சத்திரம் பார்த்தால் ஏதாவது வேண்டிக்கொள்ள வேண்டுமே..அதனால் மனதில் உள்ள அத்தனை ஆசையையும் அதனிடம் சொன்னேன்..ஐயோ !!ஒரு வேளை மற்றவர்கள் சொன்னது போல் ஞாபக சக்தி குறைந்து விட்டால் என்ன செய்வது அதனால் அருகில் இருந்த பச்சை மரத்தை ஒரு முறை பார்த்துக்கொண்டேன்..ஐஐஒ !!பூ பெயரை நினைக்க மறந்துட்டேனே..நூலை பிய்த்து போடவும் மறந்துட்டேனே...!!"என்று ஏகப்பட்ட சிந்தனையில் மூழ்கி இருந்தேன்...அப்போது தான் அந்த மலையாளி பெண் என் முதுகில் ஒரு தட்டு தட்டி .."அடி பாவி அது எரி நட்சத்திரம் இல்ல டி ..விமானம்..அங்க பாரு இன்னும் நகர்ந்துகிட்டு இருக்கு..உங்க  ஊருல நட்சத்திரம் பின்னாடி சிகப்பு நிறத்துல விளக்கு எரியுமா " என்று சொல்லி விழுந்து விழுந்து சிரித்தாள்...

அட !!என் வேண்டுதல் எல்லாம் வீணா போச்சே என்று நானும் என்னையே நொந்து கொண்டேன்...கடைசி வரை ஒரு எரி நட்சத்திரத்தையும் பார்க்கவே இல்லை..

என்ன கொடும சார் இது???


Sunday 28 April 2013

obaama!!!




"யாரு அவரு.."

"யாரோ வெளிநாட்டுக்காரர் ..இப்போ கெளம்பிடுவாங்க "

"நான் கண்டிப்பா பார்த்தாகனுமே " என்றபடி அந்த மனிதரிடம் சென்றேன்.அவர் கிளம்ப தயார் ஆகிக்கொண்டிருந்தார்..நான் அவரிடம் "உங்களுக்கு ஒரே ஒரு வாக்கியம் மட்டும் தமிழில் பேச சொல்லி கொடுக்கட்டுமா ?"என்றேன்..

"ஒ !!sure !!"என்றார்..


"வாட் இஸ் யுவர் நேம் ?" அப்டின்னு யாரவது உங்க கிட்ட கேட்ட நீங்க அதுக்கு " என் பேரு ஆப்ரஹாம் லிங்கன் " அப்டின்னு சொல்லணும் .."என்றேன்..

மனிதர் குழம்பிவிட்டார்..இவர் ஏன் குழம்புகிறார் என்று அவர் முகத்தை உற்று பார்த்தேன் ..அப்போது தான் கவனித்தேன் ..அவர் ஆப்ரஹாம் லிங்கன் இல்லை ..பராக் ஒபாமா ..


மீண்டும் அவரிடம் .."oh  I am  really sorry .I confused u with abraham lincoln..u are obama right?? "இப்போ கார்ரக்டா சொல்லி தர்றேன் ..

"என் பேரு நித்யா ..உங்க பேரு என்ன ??"

அதற்கு அந்த மனிதர் மிக அழகா சொன்னார்..
"என் பேரு ஒபாமா " என்று .
காலில் யாரோ அழுந்த மிதித்தது போல் இருந்தது..
 ஆ என்ற சத்தத்துடன் கண் விழித்தேன்..அப்போது தான் புரிந்தது கண்டதெல்லாம் கனவு என்று..வலியை பொருட்படுத்தாமல் "அக்கா இப்போ தான் ஒபாமா கூட ஒரு முக்கியமான appointment முடிச்சுட்டு திரும்ப வர்றேன்.."என்றேன் 

அந்த அக்காவோ "எழுந்ததும் என்னடி உளறுற ??"என்றாள் சற்று கடினமாக..
"நெஜமா அக்கா .இப்போ தான் அமெரிக்கா அதிபர் ஒபாமாவுக்கு தமிழ் கத்து குடுத்துட்டு வர்றேன்.."என்றேன்..

"ஐயோ ராம !!இந்த பொண்ணு அலும்பு தாங்க முடியலியே..."
என்று புலம்பினாள் அக்கா..

#கனவுல கூடவா நான் அமெரிக்க அதிபருக்கு தமிழ் கத்து குடுக்க கூடாது..அட போங்கப்பா!!!


Thursday 11 April 2013

வேண்டுதல்



பிள்ளையார் கோயில் -ஒரு நாள் ஒரு முறையாவது போய் பிள்ளையாரிடம் வருகை பதிவு செய்து விட்டு வந்தால் தான் அன்றைய நாளே பூரணம் ஆனது போல் ஒரு உணர்வு.அன்றும் அப்படித்தான் பிள்ளையாரை காண சென்றிருந்தேன்.அங்கு 10 வயது சிறுமி ஒருத்தி அடி பிரதட்சிணம் செய்து இறைவனை வணங்க கண்டேன்.உள்ளூர லேசாக புன்னகைத்தேன்..என் புன்னகைக்கு காரணம் இல்லாமல் இல்லை..இந்த குழந்தை அடி பிரதட்சிணம் செய்து அப்படி என்ன வேண்டுகிறாள் என்ற ஒற்றை எண்ணம் என்னை அவள் வயதிற்கு இழுத்துச்சென்றது..அவள் வயதில் நான் வேண்டியது எல்லாம் நினைவுக்கு வந்தது.என்னையும் அறியாமல் சிரிப்பு மேலிட்டது..


செல்வ விநாயகர் கோயில் -பத்து வயது முதல் பள்ளி படிப்பு முடியும் வரை அவருக்கு ஒரு நாள் இரண்டு முறை அட்டண்டன்ஸ் போடுவது வழக்கம்..அப்போது வேண்டிக்கொண்டதேல்லாம் ஒரே விஷயம் தான்.ஒரே வசனத்தை கேட்டு கேட்டு பிள்ளையாருக்கே புளிச்சு போயிருக்கும்..என்ன வசனம் அப்டின்னு தானே கேக்குறீங்க.."பிள்ளையாரப்ப இன்னைக்கு உள்ள எல்லா டெஸ்ட்லயும் நான் புல் மார்க் வாங்கணும்..".ஒருவேளை அன்றைய வகுப்பு தேர்விற்கு நான் படிக்கவில்லை என்றால் "பிள்ளையாரப்பா இன்னைக்கு நான் டெஸ்டுக்கு படிக்கல .அதனால எப்டியாச்சு இங்கிலீஷ் மிஸ் மனச மாத்தி இன்னைக்கு டெஸ்ட் வைக்காம பண்ணிடு.."இது மட்டும் இல்லீங்க.."எனக்கு மீனாவ ரொம்ப பிடிக்கும்.ஆனா அவ மட்டும் வேற யாரையாச்சு தான் பெஸ்ட் ப்ரெண்டுன்னு சொல்றா ..அவள எப்டியாச்சு என் பிரெண்டு ஆக்கி வச்சிடு பிள்ளையாரப்பா "என்று பிள்ளையாரிடம் புலம்பியதும் உண்டு..

ஒரு அருகம்புல்லை வைத்து தேவலோகத்தையே வாங்க முடியும் என்று யாரோ சொன்ன வார்த்தையை நம்பி.தெருவோரம் கிடக்கும் புல்லை எல்லாம் பிடுங்கி (ஏதோ புல்லை போட்டேன் அது அருகம்புல் தானான்னு செரியா தெரியலீங்க..அருகம்புல் அப்டின்னு நெனச்சு தான் போட்டேன் )பூட்டியிருக்கும் செல்வ கணபதி கோயிலின் இரும்பு கம்பியின் ஊடே கைவிட்டு கையில் இருக்கும் (அருகம்)புல்லை பிள்ளையார் மேல் தூக்கி போட்டு விட்டு.."பிள்ளையாரப்பா இத வச்சு தேவ லோகத்தையே வாங்க முடியுமாமே..எனக்கு அதெல்லாம் வேண்டாம்..இன்னைக்கு எழுதுற எல்லா டெஸ்ட்லயும் நான் முழு மதிப்பெண்ணும் வாங்கணும்.."என்பேன்..

ஒருவேளை அந்த பிள்ளையார் சிலைக்கு  பேசும் சக்தி மட்டும் இருந்திருந்தால் "இப்போ தாண்டி என்னை அய்யரு குளிப்பாட்டி அலங்காரம் எல்லாம் பண்ணி வச்சுட்டு போனாரு ..என் மேல ஏதேதோ புல்லை எல்லாம் போட்டு ஏண்டி என்னை அழுக்காக்குற ?எப்போவும் மார்க்கு மார்க்கு மார்க்கு ..இந்த வசனத்த நீ மாத்த போறியா இல்லையா என்று தன் தும்பிக்கையால் என்னை ஓங்கி அடித்திருப்பார் .

எல்லாம் சரி அந்த வசனத்த மாத்துனியா இல்லையா அப்டின்னு தானே கேக்குறீங்க ..ம்ம்ம் ..மாத்திநேங்க...ஒரே ஒரு சின்ன மாற்றம் தான்...பதினேழு வயது முதல் கல்லூரி படிப்பு முடியும் வரை "பிள்ளையாரப்பா இன்னைக்கு பரீட்சைல என்னை பாஸ் மட்டும் பண்ணி விட்டுரு பிள்ளையாரப்பா " அப்டின்னு வேண்டிட்டு இருந்தேங்க...இந்த வேண்டுதல்களை இப்போ நெனச்ச ரொம்ப ரொம்ப சிரிப்பா வருது..எவ்வளவு முட்டாளாய் இருந்திருக்கிறேன்..மதிப்பெண் மதிப்பெண் என்று எண்களுக்கு பின்னால் ஓடியிருக்கிறேன்...அந்த ஓட்டத்தின் வேகத்தில் அறிவையும் திறமையையும் தேட மறந்து விட்டேன்...இப்போதும் பிள்ளையாரிடம் தவறாமல் அட்டெண்டன்ஸ் போடுவது உண்டு ..ஆனா அவர்கிட்ட போய் ஒன்னே ஒன்னு தான் சொல்வேன்.."பிள்ளையாரப்பா ஐ லவ் யு .ஐ ரியலி லவ் யு " அப்டின்னு.நமக்கு என்ன குடுக்கனும்னு கடவுளுக்கு நல்லாவே தெரியுங்க..நாம வேண்டனும்னு அவசியம் இல்லை..நம் அன்பை மட்டும் அவரிடம் சொன்னால் போதும்..மிச்சத்தை அவர் பார்த்துக்கொள்வார்...


அந்த சின்ன குழந்தையோட வேண்டுதலும் கண்டிப்பா மாற்குக்காக தான் இருக்கும் அப்டின்னு எனக்கு தெரியுங்க..
இந்த மொக்க கதைய எதுக்கு நித்யா சொல்ற அப்டிங்குரீன்களா..

1.உங்க குழந்தைகளை வளர்க்கும் பொது இப்டி பந்தய குதிரை மாதிரி மதிப்பெண் பின்னாடி ஓட விடாதீங்க..குழந்தைகள்  படிக்கட்டும் ,நல்ல மதிப்பெண் எடுக்கட்டும் நான் வேண்டாம் என்று சொல்லவில்லை கூடவே அறிவை வளர்க்கட்டும் திறனை வளர்க்கட்டும் ,பிறருக்கு உதவி செய்யும் நல்ல மனதை வளர்க்கட்டும்,அறம் செய்யும் பண்பை வளர்க்கட்டும்..
நானும் பொறியியல் தான் படித்தேன்..மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை ..ச்விச்சு போட்ட லைட்டு எரியும் என்பதை தவிர சத்தியமா எனக்கு வேற எதுவுமே தெரியாதுங்க..சீ !!வெட்க கேடு..யாராவது கேட்டால் நானும் எஞ்சினியர் என்று சொல்லிகொள்கிறேன்..இந்த நிலை உங்கள் குழந்தைகளுக்கு வர வேண்டாம்...

அவர்கள் விரும்பும் படிப்பை படிக்க வையுங்கள் .பெரிய அரண்மனையில் கூலிககாரியாய் இருப்பதை விட ஒரு சின்ன குடிசையில் மகாராணியாய் வாழ்வதையே நான் பெருமையாய் கருதுகிறேன்..இருக்கும் இடத்தை விட அந்த இடத்தில் நீ என்னவாக இருக்கிறாய் என்பது தான் முக்கியம் .உங்கள் குழந்தைகள் மன்னர்கள் ஆகட்டும் மகாராணிகள் ஆகட்டும்..இந்த தேசத்தை ஆளட்டும்..எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்னும் முண்டாசு கவிஞனின் வார்த்தைகள் மெய் ஆகட்டும்..

வாழ்க பாரதம்!!!!!