Sunday 28 July 2013

நினைவெல்லாம் அருண்..

நினைவெல்லாம் அருண் (episodes 1,2,3 and 4 together)
--------------------------------------------------------------------



"அருண் ப்ளீஸ் டா..ஓகே சொல்லேன் ..
எனக்காக ப்ளீஸ்..ப்ளீஸ்... " என்று ஓயாமல் நச்சரித்தாள் நந்தினி.
அவள் கெஞ்சும் தோரணை பிடித்திருந்தாலும் ,சரி என்று சம்மதம் சொல்ல அவனுக்கோ மனம் வரவில்லை.

இருவருக்கும் திருமணமாகி ஓரிரு வருடங்கள் தான் இருக்கும் .இதுவரை மழலைச் செல்வம் இல்லையே என்ற ஒரு குறை தவிர அவர்களுக்கு வேறு எந்த குறையுமில்லை .அன்புக்கும் காதலுக்கும் துளி கூட பஞ்சமில்லை .இந்நிலையில் நந்தினி தன் தோழி சசி வீட்டுக்கு போக வேண்டும் என்றது அருணுக்கு ஏனோ பிடிக்கவில்லை...

"தலைவெட்டான்பட்டி ..கருமம் கருமம் ஊரு பேர பார்த்தியா ??இப்டி ஒரு ஊருக்கு தனியா போறேன் அப்டின்குற.."

"தனியாவா? இல்லையே என் கூட ராதாவும் வர்றா.."


"யாரு ஒல்லியா உயரமா இருக்குமே ..அந்த ஓட்டடைகுச்சியா ??அவ தான் உனக்கு பாதுகாப்பா??"

என் தோழியை அப்படி சொல்லாதீங்க அப்றோம் எனக்கு கோபம் எனும் பாவனையில் அருண் மீது ஒரு முறை தன் பார்வையை வீசி விட்டு ,

"அப்டின்னா நீங்க வாங்களேன் எனக்கு துணையா .." என்றாள் நந்தினி.

"எனக்கு வர நேரம் இல்லைன்னு உனக்கு நல்லாவே தெரியுமே.." என்றான் அவன்

"ம்ம்..தெரியும்..அதனால தான் ராதா கூட போகவான்னு கேக்குறேன்.."என்றாள் அவள்..


நந்தினி நவ நாகரிக பெண் தான்..கணவனை வாடா போடா என்று சொல்லும் அளவிற்கு நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் பெண் தான்..ஆனால் தன் கணவனின் சம்மதம் இல்லாமல் அவள் எந்த செயலிலும் இறங்குவதில்லை.நினைத்ததை நடத்திக்கொள்வாள்..தன் கணவனை எதிர்த்து அல்ல .அவனை எப்படியாவது சம்மதிக்க வைத்து..இப்போதும் அதற்கான முயற்சியில் தான் இறங்கியிருந்தாள்.

"சசி எத்தனை முறை நம் வீட்டில் வந்து தங்கியிருக்கா.இதுவரை குறைந்தது 10 தடவையாவது நம்மை அவ வீட்டுக்கு கூப்பிட்டிருப்பா ..அழைத்து அழைத்து களைத்து போய் அன்னைக்கு என்ன சொன்னா தெரியுமா ???"என் வீடு கிராமத்துல இருக்கு.நான் ஏழை..அதனால தானே என் வீட்டுக்கு வரமாட்டேன்குற" அப்டின்னு கவலையோட கேட்டா.இப்போ நீயே சொல்லு இவ்ளோ தூரம் கூப்பிட்டும் ,அவ வீட்டுக்கு நான் போகலேனா நல்ல இருக்குமா.."


தன் மனைவி சின்னஞ்சிறு குழந்தை போல , கன்னத்தில் ஆள் கட்டி விரலை அழுந்த பிடித்த படி கெஞ்சலாய் தன்னை பார்த்த பார்வை அருணுக்கு பிடித்திருந்தது. ஆனாலும் அவனுள்ளே இனந்தெரியாத ஒரு வித பயம் இருந்ததாலோ என்னவோ "சரி" என்று மனதார சொல்ல அவனால் முடியவில்லை.

"ம்ம்..வேண்டாம்..போகதே..அப்டின்னு நான் சொன்னா எதாச்சு சொல்லி என்னை சமாதானப்படுத்த முயற்சி செய்வ..சோ உன் இஷ்டம் போல செய் ..நீ பத்திரமா போயிட்டு வந்தா அதுவே எனக்கு போதும் " என்றபடி டிவி ரிமோட்டை கையில் எடுத்தான்..

"ஹே !நெஜமாவா சொல்ற..ரொம்ப தேங்க்ஸ் டா .." என்றபடி அவன் கன்னத்தில் "பச் " என்று முத்தமிட்டாள்.மனதில் நினைப்பதை எல்லாம் சில நேரங்களில் வெறும் வார்த்தைகளால் சொல்ல முடிவதில்லை .அவள் மகிழ்ச்சி அங்கே முத்தமாய் வெளிப்பட்டது..


தன் மனைவி இப்படி செய்வாள் என்று அவனுக்கு நன்றாக தெரியும் .கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி என்ற கவிஞரின் வார்த்தைகள் இங்கே பலனளிக்கவில்லை..தன் மனைவியின் முத்தத்தை ரசிக்க மனமில்லாதவனாய் ,அவள் எச்சில் படிந்த தன் கன்னத்தை துடைத்து விட்டு டிவியில் ஆழ்ந்தான்..


அந்த வார இறுதியில் நந்தினியும் ராதாவும் சசி வீட்டிற்கு புறப்பட தயாரானார்கள் .

இரயில் நிலையத்தில் ,
" நாளைக்கு காலைல ரெண்டு பேரும் அரக்கோணம் போய் சேர்ந்துடுவீங்க.அங்கிருந்து சசி வீட்டுக்கு கூட்டிட்டு போக யார் வருவா ??சசி வருவாங்களா ?" என்றான் அருண்.

"ம்ம்...ஆமாங்க..சசி வருவா .நாளைக்கு ஒரு நாள் மட்டும் அவ வீட்ல தங்குவோம் .இன்னைக்கு வெள்ளிக்கிழமை தானே..திங்கட்கிழமை காலைல வீட்டுக்கு வந்துடுவோம்..
நான் இல்லைங்கறதால நீங்க அங்க இங்கன்னு சுத்திட்டு இருக்காதீங்க ..நேரத்துக்கு வீட்டுக்கு வந்துடு !!ஒழுங்க சாப்பிடு !!எப்போவும் டிவிலே இருக்காத .ராத்திரிக்கு தோசை மாவு வச்சிருக்கேன்..அப்றோம் "என்று மேலும் ஏதோ சொல்லப்போனவளை அவன் பார்வை தடுத்தது..

அவள் இப்படித்தான் கொதிக்கும் எண்ணெயில் போட்ட கடுகு போல் பட பட பட பட என்று பேசிக்கொண்டே போவாள் என்று அருணுக்கு நன்றாக தெரியும்..தன் கணவனை பொது இடங்களில் வா,போ என்று அழைக்க கூடாது என்பதற்காக "ங்க" என்று அவள் தன் பேச்சில் சேர்க்க முயல்வதும் ,முடியாமல் தோற்று போவதும் ,அவனை பொருத்தவரை ரசனைக்குரிய விஷயம் தான்.

தன் மனைவி பேசும் விதத்தை ரசித்தபடி ,
"சரி சரி !இங்க எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்..நீ பத்திரமா போயிட்டு வா " என்றான்..
பிரியும் வேளையில் மீண்டும் ஒரு பார்வை பரிமாற்றம்..

அவன் பார்வை ,"நீ கண்டிப்பா போகனுமா நந்து !!பேசாம வீட்டுக்கு போயிடுவோமா?" என்பது போல் இருந்தது .அவளுக்கு அவன் பார்வை சொல்லும் வார்த்தைகள் தெள்ள தெளிவாய் புரிந்ததாலோ என்னவோ
"ப்ளீஸ் டா" என்னும் பாவனையில் தன் புருவங்களை சற்று சுருக்கியபடி கெஞ்சலாய் ஒரு பார்வை பார்த்தாள்.

நான்கு விழிகள் மெளனமாக பேசிக்கொள்ளும், இந்த கவித்துவமான உரையாடலை கேட்கச் சகியாமலோ என்னவோ
"ம்க்கும் " என்று லேசாக செறுமினாள் ராதா..
சட்டென்று சுயநினைவிற்கு வந்தவனாய் , தன் பார்வையை வேறு பக்கமாய் திருப்பிக்கொண்டான் அருண்..

"அண்ணா!!ரெண்டு நாள் தானே !!சமாளிச்சுக்கோங்க ..உங்க மனைவிய பத்திரமா உங்க கிட்ட கொண்டு வந்து சேர்த்துடுறேன்.." " என்று சொல்லியபடி முறுவலித்தாள் ராதா.

அவனும் தலையசைத்தான்..

இரயில் புறப்பட்டது .அடுத்த நாள் காலையில் அரக்கோணத்தில் இறங்கியதும்,

"ஏண்டி உன் வீட்டுக்காரர்கிட்ட அப்டி சொன்ன?" என்றாள் ராதா

"எப்டி சொன்னேன் ?" என்றாள் நந்தினி..
அவர்கள் உரையாடல் தொடர்ந்தது..

"நம்மை இங்கிருந்து கூட்டிட்டு போக சசி வர்றதா சொல்லவே இல்லையே ..அப்றோம் ஏன் உன் வீட்டுக்காரர் கிட்ட சசி வருவான்னு சொன்ன?உண்மைய சொல்ல வேண்டியது தானே..

"ம்ம்..உண்மைய சொல்லியிருந்தா ரெண்டு வண்டி மூணு வண்டி பிடிச்சு நீ தனியா எங்கேயும் போக வேண்டாம்னு சொல்லி, என்னை அப்படியே வீட்டுக்கு இழுத்துட்டு போயிருப்பார்..நான் தனியா எங்காச்சு போய் ஏதாவது பிரச்சனைல மாட்டிக்குவேனொன்னு அவருக்கு பயம்.ஏன் தெரியுமா ? because he loves me truly " என்றாள் நந்தினி .

தன் தோள்பட்டையை மோவாயால் இடித்தபடி ," ம்க்கும் ..மை வீட்டுக்காரர் also loves me " என்றாள் ராதா ..அத்துடன் நிறுத்தாமல் ," தேவதை மாதிரி ஒரு பொண்ணு என் பக்கத்துல நின்னுட்டிருந்தா கூட ,என் வீட்டுக்காரர் அந்த தேவதையை பார்க்க மாட்டார் ..என்னை தான் பார்ப்பார் ,..தெரியுமா?" என்றாள்..

பெண்மைக்கே உரித்தான ஆற்றாமையும் பொறாமையும் அவள் பேச்சில் வெளிப்பட்டது..

"ஏன் ..உன் வீட்டுக்காரர் ரசனை அவ்ளோ மோசமா இருக்குமா??" என்றபடி சிரித்தாள் நந்தினி..

" ஹலோ !!என்ன நக்கலா?? நீ பக்கத்துல இருக்கும் பொது அருண் அண்ணா உன்னை விட்டுட்டு வேற யாராவது அழகான பெண்ணை பார்த்துகிட்டிருந்தா உனக்கு கோபம் வராதா ?" என்று சற்று கோபமாகவே கேட்டாள் ராதா .

" ம்ஹூம் கோபம் எல்லாம் வராது ..""ஹே !! சைட் அடிக்கிறியா ? அப்டின்னு கேட்டு அவன் தோளில் லேசா ஒரே ஒரு தட்டு தட்டுவேன்..அப்றோம் ரெண்டு பேரும் சேர்ந்தே சைட் அடிப்போம்..அழகை ரசிக்கிறது தப்பு இல்லை ராதா.அருணை பற்றி எனக்கு நல்லா தெரியும் .அவரு கண்ணு யார வேணும்னாலும் பார்க்கலாம் ..ஆனா அவர் மனசு மட்டும் எனக்கு தான் சொந்தம் .எனக்கு மட்டும் தான் சொந்தம்.."

" ஓஹோ !!அழகை ரசிக்கிறது தப்பு இல்லையா..??அப்போ நீ அழகா இருக்குறதா நெனச்சு ,உன்னை யாரவது ரசிச்சு பார்த்தா உன் வீட்டுக்காரர் ஒன்னும் சொல்ல மாட்டாரு ..அப்படித்தானே.." என்ற ராதாவின் குரலில் கோபம் சற்று தூக்கலாகவே இருந்தது..

நீ கூட அழகா தான் இருக்குற என்று அவள் சொல்லியிருக்கலாம்..அனால் அவளோ " நீ அழகா இருக்குறதா நெனச்சு " என்று சொன்ன ஒற்றை வரியிலேயே பெண்மைக்கான இலக்கணத்தை காட்டி விட்டாள்."

ராதாவின் கோபத்தை சற்றும் பொருட்படுத்தாமல் ,

" ம்ம்ம்..உண்மை தான் .வாயை திறந்து ஒன்னும் சொல்ல மாட்டாரு..அவர் பார்வை ஒன்றே போதும்..ஒருமுறை என்னாச்சு தெரியுமா??நானும் அருணும் பஸ் ஸ்டாண்டுல நின்னுட்டிருந்தோம் ..அவர் என்னை விட்டு ரெண்டு அடி தள்ளி நின்று யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தார்..அங்க ஒருத்தன் என்னை ரொம்ப நேரமா பார்த்துகிட்டே இருந்தான்..அது சாதாரண பார்வை இல்ல..கழுகு பார்வை..பெண்ணை வெறும் சதை பிண்டமாக மட்டும் பார்க்கும் மிருகத்தனமான பார்வை.கொஞ்சம் நேரம் பொறுமையாய் இருந்தேன்..அந்த மனிதனின் செயல்கள் எல்லை மீறிக்கொண்டே போனது.அவன் தன் உதடுகளை நாவால் ஈரப்படுத்தினான்.,பின்னர் தன் கீழுதட்டை பற்களால் கடித்துக்கொண்டான்.கண் சிமிட்டினான்..சைகையால் "தனியா போலாமா ?" என்றான்." சீ சீ !!அக்கா தங்கையோடு பிறந்திருக்க மாட்டான் போலும் .பெண்ணை இதற்கு முன் பார்த்திருக்கவே மாட்டான் போலும் ! என்று என்னென்னவோ மனதில் தோன்றியது..

ஒரு கட்டத்தில் ரொம்பவே பயந்துட்டேன்..வேகமாய் நகர்ந்து, அருண் பக்கத்துல போய் அவர் கையை இறுக்கமாய் பிடித்துக்கொண்டேன்..என் நடுக்கத்தை வைத்தே,என் பயத்தை புரிந்து கொண்ட அவர் ,கைபேசி இணைப்பை துண்டித்து விட்டு ,தன் புருவத்தை உயர்த்தியபடி ,"என்னாச்சு ?" என்றார் .
நான் லேசா தலையை திருப்பி அந்த ஆளை ஒரு முறை பார்த்து விட்டு ,அருணை ஒரு முறை பார்த்தேன்..அப்றோம் திரும்பவும் அவர் கைய இறுக்கமா பிடிச்சுக்கிட்டேன்.அவர் என் கையை உதறி விட்டு விட்டு அந்த ஆளு சட்டய புடிச்சு சண்டை போடுவார் அப்டின்னு எதிர்பார்த்தேன்..ஆனா அவர் அப்டி எதுவும் செய்யல ..அவர் அவனை கோபமாய் முறைத்து பார்த்துகிட்டே இருந்தார்..அவர் பார்வையிலேயே அந்த ஆளு பயந்துட்டான்..மெதுவா தயங்கி தயங்கி எங்களை நெருங்கி வந்தான்..வந்து என்ன சொன்னான் தெரியுமா??"அண்ணே !!இந்த தேர்தலில் சுத்தியல் அரிவாள் சின்னத்துக்கே உங்க ஓட்ட போடுங்க !!" அப்டின்னான்..நான் வாய வச்சுகிட்டு சும்மா இருக்காமல் ,
"யோவ் !!சுத்தியல தூக்கி உன் மண்டையில போட்டுடுவேன் ..ஒழுங்க ஓடி போயிடு !!" அப்டின்னு சொன்னேன்..அருண் அந்த ஆளோட பேச்சை காதுல வாங்காம முறைத்துக்கிட்டே இருந்தார்..அவர் பார்வைக்கு பயந்தே அந்த ஆளு மெதுவா அங்கிருந்து நழுவிட்டான்..."

அப்றோம் என்னாச்சு தெரியுமா?"

"வேண்டாம்..சொல்லாதே அப்டின்னு சொன்னா நீ விடவா போற..சொல்லு..அப்றோம் என்னாச்சு.."


" அப்றோம்..அருணோட கோபமான பார்வை என் பக்கம் திரும்புச்ச்சு..

இப்போ என்னை எதுக்கு முறைக்கிறீங்க ? அப்டின்னு கேட்டேன்..

அதுக்கு ,"எந்த பிரச்சனையா இருந்தாலும் நம்மால முடிஞ்ச அளவு ஒதுங்கி போகணும். நாமே தலைய குடுத்து "இந்தாவெட்டுங்க வெட்டுங்க " அப்டின்னு சொல்றது முட்டாள் தனம்.நான் தான் உன் பக்கத்துலையே இருக்குரேனே..அப்றோம் நீ எதுக்கு தேவை இல்லாம அந்த ஆளுக்கெல்லாம் பதில் சொல்ற.." அப்டின்னு ஒரு பெரிய பிரசங்கமே பண்ணினாரு...

"நீங்க என் கூட இருக்குற தைரியத்துல தான் அப்டி சொன்னேன்.." அப்டின்னேன்..அதுக்கு அவர்," இப்போ நான் உன் கூட இருந்தேன்..இதே மாதிரி எப்பவும் என்னால உன் கூட இருக்க முடியுமா ?"என்றார்..உடனே என் புருவங்களை சுருக்கிக்கொண்டு சின்னஞ்சிறு குழந்தை போல் முகத்தை வைத்துக்கொண்டு ,

"ஏன் ? எப்பவும் என் கூட இருக்க மாட்டியா?" என்றேன்..நான் கேட்ட அந்த ஒற்றை கேள்வியிலேயே அவர் கோபம் எல்லாம் மாயமா போச்சு.சிரித்தபடியே ,என் தலைல லேசா ஒரு தட்டு தட்டினார்.." சரியான இம்சை டி நீ " அப்டின்னார்..

நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லலியே..இருப்பியா ? இல்லையா ?" என்று மீண்டும் கேட்டேன்..

அவருக்கே உரிய பாணியில் மெல்ல தலையசைத்தபடி,

" ம்ம்..இருப்பேன்..என் வேலை வெட்டி எல்லாத்தையும் விட்டுட்டு எப்பவும் உன் கூடவே தான் இருப்பேன் ..சரியா ?" என்றபடி சிரித்தார்..நானும் சிரித்துக்கொண்டேன்..."

என்று ஒரு பெரிய கதையை சொல்லி முடித்தாள் நந்தினி..அத்துடன் நிறுத்தாமல் தன் கையில் இருந்த பையை கீழே வைத்து விட்டு, தனது கை விரல்கள் பத்தையும் ஒன்றோடொன்று கோர்த்து ,உடலை ஒருவாறு நெளித்தபடி..

"அருண் என் ஹீரோ டி " என்றாள்..

தனது தோழியின் காதல் புராணத்தை கேட்கச் சகியாதவளாய்,

"போதும்!போதும்!!வடக்கம்பட்டுக்கு எத்தனை மணிக்கு பஸ் இருக்குன்னு யாரையாச்சு கேட்கலாம் வா!!" என்று நந்தினியின் வாயை மூட பேச்சை பேருந்தின் பக்கமாய் திருப்பினாள் ராதா.

ராதாவின் வார்த்தைகளை காதில் வாங்கிக்கொள்ளாமல் ,

"அரக்கோணம் ரயில் நிலையம் ஆங்கிலேயர் காலத்திலேயே கட்டப்பட்டது தெரியுமா ?" என்றாள் நந்தினி.

ராதவோ ,"அதெல்லாம் இருக்கட்டும்.முதல்ல அந்த ஆட்டோகாரர் கிட்ட வடக்கம்பட்டுக்கு இப்போ பஸ் இருக்கான்னு கேளு " என்றாள்.

"பேசாம சசிக்கே போன் பண்ணி கேக்கலாம் ."

"அதெல்லாம் எதுக்கு ?அவ தான் தன்னோட வீட்டுக்கு வர தெளிவா வழி சொல்லி இருக்காளே !!முதல்ல வடக்கம்பட்டுக்கு பஸ்ல போகணும்.அப்றோம் அங்கிருந்து தலைவேட்டான்பட்டிக்கு அடுத்த வண்டி பிடிக்கணும்..ஊருக்குள்ள போனதும் மிட்டாய்க்கார சுப்பண்ணா வீடுன்னு கேட்டா போதுமாம்"

"மிட்டாய்க்கார சுப்பன்னாவா ?"

"ம்ம்..அவங்க அப்பா முன்னாடி மிட்டாய் கடை வச்சிருந்தாராம் .ஆனால் அந்த தொழிலில் அவருக்கு பயங்கர நஷ்டமாம்.அப்றோம் வேறு ஏதேதோ கூலித்தொழில் எல்லாம் பார்த்து ,அவளை கஷ்டப்பட்டு படிக்க வைத்தாராம்.அந்த 'மிட்டாய் ' என்ற வார்த்தை மட்டும் அவர் பெயரோடு ஒட்டிக்கொண்டதாம்."என்று ராதா சொன்னதை கேட்டு சிரித்தவாறு

"ம்ம் ..மிட்டாய்க்கார சுப்..பண்..ணா" என்று இழுத்து சொல்லி பார்த்த படி ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடந்தாள் நந்தினி.

அங்கிருந்த ஆட்டோக்காரரிடம்.
"அண்ணே !!வடக்கம்பட்டுக்கு இப்போ பஸ் இருக்கா?" என்றாள்.

பின்புறமாய் திரும்பி நின்ற ஆட்டோக்காரர் ,தன்னிடம் ஒரு பெண் பேசும் குரலைக் கேட்டு சட்டென்று திரும்பினார்.அவரது ஒரு கண் முழுவதும் பூ படர்ந்திருந்தது.முகமோ குண்டும் குழியுமாய் விகாரமாய் இருந்தது.

நந்தினி சற்று பயந்து பின் நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தாள்.

"வடக்கம்பட்டா ?அங்கே யாரை பார்க்கணும் ?"என்றார் ஆட்டோக்காரர்.

"அது வந்து.."என்று தொடங்கிய நந்தினியை பேச விடாமல் குறுக்கிட்டு..

"அது உங்களுக்கு தேவை இல்லை .வடக்கம்பட்டுக்கு இப்போ பஸ் இருக்கானு மட்டும் சொல்லுங்க !"என்றாள் ராதா.

அங்கிருந்த மற்றொரு ஆட்டோக்காரர்,

"ம்ம்..இருக்கும்மா ...ஆனா அரை மணி நேரம் ஆகும்.'APN travels னு ஒரு மினி பஸ் வரும் "என்றார்.


சுமார் ஒரு மணி நேர காத்திருப்பிற்கு பின் பேருந்து வந்தது..
இருவரும் ஏறிக்கொண்டனர்.

ஓடும் பேருந்தின் ஜன்னல் வழியே தரிசிக்கும் உலகம் மிகவும் அபரிமிதமானது.அதை ஒரு வித வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி..

தார்சாலைகளும் சாலையோர மரங்களும் பின் நோக்கி ஓட பேருந்தின் வேகம் அதிகமானது.ஒட்டு வீடுகளும் ,குடிசை வீடுகளும் நிறைந்த பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தது.அங்கே வேறு எதையோ பார்த்துவிட்டு,

"ராத!!..நம்ம ஊருல ஆடு,மாடு, கோழி,நாய் இதையெல்லாம் தானே வீட்டில் வளர்ப்போம் ..இங்கே எல்லா வீடுகளிலும் என்னென்ன வளர்க்கிறார்கள் பாரேன் !" என்று அருகில் இருந்த ராதாவின் தோளை பிடித்து உலுக்கினாள் நந்தினி..
இவள் என்ன உளருகிறாள் என்று உள்ளூர எண்ணிய படி ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தாள் ராதா.அங்கே சில பன்றிகள் மேய்ந்து கொண்டிருந்தன..ஆங்காங்கே சில வீடுகளின் வாசலில், நாய்க்குட்டியை கட்டி வைப்பது போல் ,பன்றிகளை கட்டி வைத்திருந்தனர்..

"ம்ம்..நாய்க்கு பதிலா பன்றி வளர்க்கிறாங்க "என்றாள் ராதா ,சற்று சிரித்தபடி..

பேருந்து ,வீடுகள் இருந்த பகுதிகளை கடந்து இப்போது எதோ காட்டு வழியில் போய்க்கொண்டிருந்தது .சுற்றிலும் பொட்டல் வெளிகளும்,முட் காடுகளுமே தென்பட்டன..அங்கிருந்த முட்புதர்களை சிலர் கழிப்பறையாக பயன் படுத்திக்கொண்டிருந்தனர்.அந்த பொட்டல் வெளிகளையும் ரியல் எஸ்டேட் காரர்கள் விட்டு வைக்க வில்லை ..ஆங்காங்கே பிளாட்டுகள் பிரிக்கப்பட்டு ரியல் எஸ்டேட் போர்டுகள் நட்டு வைக்கப்பட்டிருந்தன..

"நாம சரியான ரூட்ல தானே வந்துட்டிருக்கோம் ..எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு ..ஏதோ காட்டுக்குள் நுழைவது போல் ஒரு உணர்வு..சசிக்கு போன் பண்ணி பார்த்தேன் .அவள் கைபேசி அனைத்து வைக்கப்பட்டிருக்காம்..."என்றாள் நந்தினி..

ராதவோ பதில் ஏதும் சொல்லாமல் சிந்தனையில் ஆழ்ந்தாள்.

ஒரு மணி நேர பேருந்து பயணத்தின் முடிவில்.

"இந்தாம்மா..வடக்கம்பட்டு ...நீ தானே கேட்டா ..அடுத்து வர்றது தான் வடக்கம்பட்டு.."என்றார் நடத்துனர்..

வடக்கம்பட்டில் இறங்கியதும்,

"ரொம்ப பசிக்குது ராதா .பக்கத்துல எதாச்சு ஹோட்டல் இருந்தா சாப்டுட்டு போகலாம்..மணி இப்போவே பத்தாச்சு .."என்றாள் நந்தினி..

ராதா தன் தலையை திருப்பி சுட்டறு முற்றும் ஒரு முறை பார்த்து விட்டு,"இந்த காட்டுல ஹோட்டலுக்கு எங்கே போறது..அதோ பாரு அங்க ஒரு டீக்கடை இருக்கு..ரொம்ப பசிக்குதுன்னா பிரெட்டொ பிஸ்கட்டோ வாங்கிக்கலாம் வா" என்றாள்..
இருவரும் தங்கள் பைகளை தூக்கிக்கொண்டு டீக்கடையை நோக்கி நடந்தனர்..
டீக்கடையில்,

ஒரு பாக்கெட் ப்ரெட்டை வாங்கி, அதில் ஆளுக்கு இரண்டு துண்டுகளை மட்டும் சாப்பிட்டு விட்டு, அந்த இடத்தை விட்டு நகரும் முன்,

"அண்ணே !!தலைவெட்டான்பட்டிக்கு இப்போ பஸ் இருக்கா ?"என்று கடைக்கார பெரியவரிடம் விசாரித்தால் ராதா.

அவரோ சிரிக்க தொடங்கி விட்டார்..தன் கைகளை மட்டும் இலை என்பது போல் அசைத்தார்.அனால் கெக்க பெக்க என்று தன் வெற்றிலை கரை படிந்த பற்கள் தெரியும் வண்ணம் சிரித்துக்கொண்டே இருந்தார்..

ராதாவுக்கோ கோபம் வந்தது..

"அப்டி நான் என்ன தப்பா கேட்டுட்டேன்னு சிரிக்குறீங்க?"என்றாள் அவள்.

அதற்கு அந்த பெரியவர், தன்னுள்ளிருந்து பொங்கி வரும் சிரிப்பை கொஞ்சம் அடக்கியவாறு,

"தலைவெட்டான்பட்டிக்கு மனுஷன் போவானா? அந்த ஊருக்கு பஸ் இருக்கான்னு கேட்டியே !அத நெனச்சு சிரிச்சேன்.."என்றார்..

"ஏன் அங்க வாழுறவங்க எல்லாம் மனுஷங்க இல்லையா ?" என்று சீற்றத்துடன் பேசிய ராதாவின் தோளில் கை வைத்து அவளை அமைதியாக்க முயற்சித்தவளாய்,

"பஸ் இல்லீங்களா ?அப்போ அந்த ஊருக்கு எப்டி போறது? என்று கடைக்காரரிடம் கேட்டாள் நந்தினி..

"இந்த மண்சாலையை கடந்து நேரா போனா ஒரு வற்றிய குளம் வரும் .அதிலிருந்து இடது பக்கமா திரும்பினா அங்க காத்தமுத்துன்னு ஒரு வண்டிக்காரர் நிற்பார்..அவரு கிட்ட சொன்னா கொண்டு போய் விடுவாரு.."

"வண்டிக்காரரா ? என்ன வண்டி ?"

"இந்த கிராமத்துல வேறென்ன வண்டி இருக்கும் கண்ணு..மாட்டு வண்டி தான்" என்றார் பெரியவர்..

"மாட்டு வண்டியா ?" என்று வாயை பிளந்த ராதாவை சோகமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு, கடைக்காரரை நோக்கி
" ஆட்டோ எதுவும் இல்லீங்களா?"என்றாள் நந்தினி..

"ராசையான்னு ஒரு புள்ள ஆட்டோ ஓட்டும் ..அது இன்னைக்கு அரக்கோணம் போயிருக்கு .."என்றார் பெரியவர்.

வேறு வழியில்லாமல் ."வா!வண்டியை பிடிக்கலாம் என்றபடி நடக்க தொடங்கினால் நந்தினி..

ராதாவோ ,"ஏதோ காட்டுக்குள் வந்து மாட்டிகிட்டோமே !!" என்று புலம்பியபடியே நடந்தாள்...

கொஞ்சம் தூரம் நடந்த பிறகு,

"நந்தினி!!இந்த சசி பொண்ணு வண்டில வரணும்னு சொன்னா ..ஆனா மாட்டு வண்டின்னு சொல்லவே இல்லியே டி.."என்றாள் ராதா..

நந்தினி தன் பின்னால் தான் வருவதாக எண்ணி பேசிக்கொண்டே வந்தவள், " ஏண்டி !பேசாமல் வர்ற ?" என்றபடி லேசாக திரும்பி பார்த்தாள்..அங்கே நந்தினி இல்லை..

"நந்தினி!!நந்தினி!!"என்ற ராதாவின் சத்தத்தை கேட்டு..

"இதோ..வர்றேன் ராதா "என்று சில அடி தூரம் பின்னால் இருக்கும் ஒரு முட்செடியின் மறைவில் இருந்து குரல் கொடுத்தாள் நந்தினி..அவள் முகத்தில் ஏதோ ஏமாற்றம் தென்பட்டது..
"ஹே !நந்து..அங்க என்னடி பண்ற ?நீ என் பின்னாடி தான் வர்றன்னு நெனச்சு நான் தனியா பேசிகிட்டே நடக்குறேன்..வா!!"என்று சத்தமாய்ச் சொன்னாள் ராதா..
"வர்..ரே..ரே..ன் " என்றபடி தன் கையில் இருந்த பையோடு ஓட்டமும் நடையுமாய் ஓடி வந்தாள் நந்தினி..
"இந்த ஆளரவம் இல்ல ஊரில் தனியா நடக்க எவ்ளோ பயமா இருக்கு தெரியுமா? நீ அங்க என்ன பண்ணிட்டிருந்த ?" என்று கோபமாய் கேட்டாள் ராதா..

"அது வந்து...சாலையோரமா வளந்திருந்த அந்த செடி தொட்டச்சினுங்கின்னு நெனச்சு தொட்டு தொட்டு பார்த்தேன்...ஆனா அது சிணுங்கவே இல்ல ...அதான் யோசிச்சிட்டிருந்தேன்.." என்று குழந்தை போல் பதில் சொன்னால் நந்தினி..

நந்தினி எப்போதும் இப்படித்தான்..இவளது குழந்தை தனம் ராதாவிற்கு எரிச்சலையே கொடுத்தது..

"அந்த மனுஷன் எப்டி தான் உன்ன வச்சு காலம் தள்ளுராரோ.." என்று லேசாக முணுமுணுத்துக் கொண்டாள்.

ஒரு வழியாக வண்டி நிற்கும் இடத்தை அடைந்தனர்..வைக்கோல் ஏற்றிச் செல்ல பயன் படும் மாட்டு வண்டி அது..

"ஏண்டி !!இதுலயா நாம போகணும் " என்றாள் ராதா..

"வேற எப்டி போறதாம்? நடந்து போ ன்னு சொல்லாம ஏதோ ஒரு வண்டி கொடுத்தார்களே !!இதுவே போதும் ..பேசாமல் வா!!" என்றபடி வண்டியில் ஏறிக்கொண்டாள் நந்தினி..

சற்று கடுகடுத்தபடி ராதாவும் ஏறிக்கொண்டாள்..

பல முறை முயற்சி செய்தும் சசியை தொடர்பு கொள்ள முடியாதது ராதாவிற்கு மேலும் எரிச்சலையே கொடுத்தது...

கொஞ்சம் நேரம் இருவரும் ஒன்றும் பேசாமல் அமைதியாகவே இருந்தனர்..ஆனால் நந்தினியால் பேசாமல் இருக்க முடியவில்லை..

"ராதா !!சசி நம்மை விட ரெண்டு வயசு பெரியவள் தானே !!அவளுக்கு அவ வீட்ல வரன் தேடுறாங்களா இல்லையா " என்றாள் நந்தினி...

ம்ம்..பார்க்குறாங்களாம்..ஆனா ஜாதக பொருத்தம் இல்லையாம் "
என்றாள் ராதா.

"ஜாதகமா ? அதெல்லாம் பார்ப்பது வீண் வேலை.."

"ஏன்? உனக்கு நம்பிக்கை இல்லையா ?"

"நம்பிக்கை இருக்கு..அதனால தான் சொல்றேன்..!!விதிப்படி ஒரு விஷயம் நடக்கனும்னு இருந்தா அதை யாராலும் மாற்ற முடியாது ராதா.."

"விதியை மதியால் வெல்லலாம்.."

"ம்ஹூம் ..நிச்சயமா முடியாது..இதுக்கு ஒரு கதை கூட சொல்வாங்க...முன்னொரு காலத்தில பாச்கராச்சரியார் என்றொரு பெரிய கணித மேதை இருந்தாராம்..அவர் தன் மகள் லீலாவதிக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தாராம்..ஆனால் அவள் ஜாதகப்படி அவளை மணக்கும் மனிதன் இறந்து விடுவான்..இதை கணித்த பாஸ்கராச்சரியார் தன் மகளுக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை மிக துல்லியமாக கணித்தார்..சரியாக அவர் கணித்த நேரத்தில் திருமணம் நடந்தால் அவர் மாப்பிள்ளை உயிருக்கு ஆபத்து கிடையாது..அப்படி துல்லியமாக நேரத்தை கணிப்பதற்காக ,தன் வீட்டில் இரண்டு பானைகளை ஒன்றின்மேல் ஒன்றாக வைத்தார்..மேலே இருக்கும் பானையில் ஒரு சிறிய துளை இட்டு அதில் தண்ணீரை நிரப்பி வைத்திருந்தார்..அந்த பானையில் உள்ள தண்ணீரின் அளவு குறைவதை வைத்து நேரத்தை மிக துல்லியமாக கணக்கிட்டு, அவர் குறித்த நேரத்திலேயே தன் மகளின் திருமணத்தை நடத்தி வைத்தார்..பார்த்து பார்த்து எல்லாம் செய்தும், லீலாவதியின் கணவன் திருமணமான கொஞ்சம் நாட்களிலேயே இறந்து போனான்.அந்த கணித மேதைக்கு காரணம் புரியவில்லை .குழப்பத்தோடு தன் இல்லத்தில் நேரம் கணக்கிட தான் வைத்திருந்த பானையை ஒரு முறை எட்டி பார்த்தார்.உள்ளே முத்து ஓன்று பானையின் துளையை லேசாக அடைத்திருந்தது..தான் கணித்த நேரம் தவறியதற்கான காரணம் அப்போது தான் அவருக்கு புரிந்தது.முத்து எப்படி பானைக்கு சென்றது என்று தன் மகளிடம் வினவினார் .."அப்பா பானையில எதுக்காக தண்ணி வச்சிருந்தீங்க? ஒரு நாள் நீரில் தெரியும் என் முக பிம்பத்தை பார்ப்பதற்காக பானைக்குள் எட்டி பார்த்தேன்..என் கழுத்தில் அணிந்திருந்த முத்து மாலையின் முத்து தவறி உள்ளே விழுந்திருக்கும் என்று நினைக்கிறேன்.." என்றாளாம்..பாஸ்கராச்சரியார் தன் தலையில் அடித்துக்கொண்டார்..விதி முத்து ரூபத்தில் வந்து லீலாவதியின் வாழ்க்கையோடு விளையாடியது..விதி வலியது ராதா ..அதை மதியால் வெல்வது நிச்சயமா முடியாது.."என்று நந்தினி சொல்லி முடித்த போது

"அம்மா..இதுக்கு மேல வண்டி போகாது ..நடந்து தான் போகணும் "என்றார் வண்டிக்காரர்.

"நடந்தா?நடந்து போனா எவ்ளோ நேரம் ஆகும் ?"

"வேகமா நடந்தா அரை மணி நேரத்தில் போயிடலாம்..வழியில தலையெல்லாம் சடை பிடிச்சு ,துணியெல்லாம் கிழிச்சுகிட்டு காத்தயின்னு ஒரு கிழவி இருக்கும்..அது கிட்ட மட்டும் பேச்சு கொடுக்காதீங்க ..அது ஒரு காதல் பைத்தியம் .."என்றார் வண்டிக்காரர்..

இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமுறை பார்த்துக்கொண்டு,
"சரிங்க!ரொம்ப நன்றி !" என்று கொஞ்சம் சில்லறையை அவர் கையில் கொடுத்து விட்டு நடக்க தொடங்கினர்...

நடக்கும் வழியில் ,ஒரு சிறிய கல்லை தன் காலால் எட்டி உதைத்தாள் நந்தினி ..
"என்னடி இது கால் பந்து ஆடிகிட்டே வர்ற ?" என்றாள் ராதா..

சிரித்தபடி," இது ஒரு விளையாட்டு ராதா "என்றாள் நந்தினி..

"விளையாட்டா?"

"ம்ம்,,விளையாட்டு தான்..உனக்கொரு விஷயம் தெரியுமா?கல்யாணத்துக்கு முன்னாடியே அருணை ரொம்ப நேசிச்சேன்.அவரு கிட்ட என் காதலை சொன்ன போது அவரு ஏத்துக்கவே இல்ல...கற்பனையிலேயே இருக்காத..நீ நெனக்கிறது நடக்காது அப்டின்னார்..தன் மனதை துறவு நிலையில் வைத்திருந்தார்..பொதுவாகவே அவருக்கு யார் மீதும் நம்பிக்கை கிடையாது..அதுவும் குறிப்பா பெண்கள் மீது சுத்தமா நம்பிக்கை கிடையாது..அவர் மனதுக்குள் நுழைய ஒரு சிறிய வாய்ப்பாவது கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு பல காலம் தவமாய் தவமிருந்தேன்..

கோயில்களுக்கு போவேன்.."இறைவா என் அருண் மனசுல எனக்காக ஒரு சின்ன இடத்தை மட்டும் வாங்கி கொடேன் " என்று வேண்டலாம்னு நெனைப்பேன்..ஆனா எதுவும் வேண்டாமல் திரும்ப வந்து விடுவேன்.

ஒரு முறை காளி தேவி கோயில் ஒன்றுக்கு போயிருந்தேன்.பிரார்த்தனை சீட்டில் உங்கள் மனதில் உள்ள ஆசையை எழுதி அம்பாள் பாதத்தில் வைத்தாள் ,நீங்கள் வேண்டியது நிச்சயம் பலிக்கும் என்றார்கள்.பத்து ரூபாய் செலவு செய்து ஒரு பிரார்த்தனை சீட்டை வாங்கி அதில் என் வேண்டுதலை எழுதலாம் என்று நினைத்தேன்.ஆனால் எழுத மனம் வரவில்லை..'எல்லாம் உனக்கு தெரியும்..நீயே பார்த்துக்கோம்மா.' என்று மட்டும் எழுதி அதை அம்பாள் காலடியில் வைத்தேன்..அப்போதெல்லாம் இப்படித்தான் கல்லை தட்டி விளையாடி என் காதலின் வெற்றியை கணிப்பேன்..

நான் தட்டி விடும் கல் நான் நினைக்கும் கோட்டை தாண்டி விட்டால்,என் அருண் எனக்கு தான்..ஒருவேளை தாண்டாவிட்டால் அந்த கல்லின் மீது எனக்கு பயங்கரமா கோபம் வரும் .வேகமாக நடந்து சென்று அந்த கல்லை அருகில் இருக்கும் ஏதாவது சாக்கடையில் தள்ளி விட்டு விடுவேன்..என் பேச்சை மதிக்காத கல்லுக்கு மரண தண்டனை கொடுத்ததாக நினைத்து உள்ளூர மகிழ்ந்து கொள்வேன்.."என்று நந்தினியை சற்று வியப்போடு பார்த்த படி..,

"அடி பாவி !!கோயிலுக்கு போவாளாம்..வேண்ட மாட்டாளாம்..ஆனால் கல்லை தட்டி காதலை கணிப்பாலாம் ..சரியான பைத்தியம் நீ..!"என்றாள் ராதா..

"ம்ம்...பைத்தியம் தான்...வெறும் பைத்தியம் இல்லை ..அருண் பைத்தியம்..!!உன் காதலுக்கு தூதாக நான் வேணும்னா போகட்டுமா என்று அந்த கடவுளே என்னிடம் கேட்டிருந்தால் கூட 'இல்லை வேண்டாம் 'என்று மறுத்திருப்பேன்..ஏன் தெரியுமா?காதல் ரொம்ப அழகான உணர்வு ராதா..அதை கட்டாயப்படுத்தி வாங்கி விட முடியாது..அது தானா வரணும்..நான் ஒன்றும் கல்லை காதலிக்கவில்லையே .ஒரு பெண்ணின் மன உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தியுள்ள ஒரு மனிதனை தானே காதலித்தேன்..அதனால் தான் அவர் மனமும் ஒரு நாள் கனியும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தேன்.

"சரி!சரி! அப்றோம் எப்டி தான் அவர் ஒத்துகிட்டார்?"

அத ஏன் கேக்குற ராதா..கவிதை கவிதையா எழுதி அவருக்கு அனுப்பிகிட்டிருந்தேன்.."என்று நந்தினி முழுமையாய் சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்ட ராதா..

"உன் கவிதைகளை படித்து மயங்கிட்டாரா?" என்றாள்.

"இல்ல..பயந்துட்டார்"

"என்னடி சொல்ற??"

"ம்ம்...
உன்ன விரும்புது பொண்ணு
ப்ளீஸ் ஒத்துக்கோடா கண்ணு
கடலும் நீளமும் ஒண்ணு
நீ இல்லன்ன நான் மண்ணு

இந்த மாதிரி கன்னா பின்னான்னு கவிதைகள் எழுதி அவருக்கு அனுப்பிகிட்டேயிருந்தேன்..ஒரு நாள் போன் பண்ணினார்..உன்னை நேரில் பார்க்கணும் அப்டின்னார்..அவர் சொன்ன இடத்துக்கு நானும் போனேன்..அங்கே அவர் காத்திருந்தார்...

நான் போய் பத்து நிமிடங்கள் ஆகியும் அவர் ஒரு வார்த்தை கூட பேசல..

"பேசணும்னு வர சொல்லிட்டு இப்டி பேசாமலே இருந்தா என்ன அர்த்தம்?" அப்டின்னேன் ..

"பேச்சு வரலேன்னு அர்த்தம் "என்றார் அவர்..

எனக்கு கோபம் வந்து விட்டது..சுற்று முற்றும் ஒரு முறை பார்த்துக்கொண்டேன்..சட்டென்று இருக்கையை விட்டு எழுந்து

"நான் கெளம்புறேன் " என்றேன்..

அவர் என் கையை பற்றிக்கொண்டார் ..அவரை ஒரு முறை பார்த்தேன்..அவர் தன் பார்வையை இருக்கையின் புறமாய் செலுத்தி 'உட்காரு' என்பதை பார்வையிலேயே சொன்னார்..முதல் முதலாய் அவர் கை பிடிக்குள் இருப்பது ஒரு வித பயத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது..

என்னால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை..பேசாமல் தலை குனிந்தபடி உட்கார்ந்து கொண்டேன்..

"நந்தினி!" என்றார் அவர்..

என் நெஞ்சத்து ஏக்கத்தை எல்லாம் கண்களில் தேக்கியபடி அவரை ஒரே ஒரு பார்வை பார்த்தேன்..

அவரோ தன் கண்களால் என் கண்களை பருகியபடி..

"வில் யு மேரி மீ ?"என்றார்..

"என்ன திடீர் ஞானோதயம் ?"என்றேன்..

"கேட்கனும்னு தோனுச்சு "அப்டின்னார்.

அத்துடன் அவர் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை..அவரோ..

"ஆனா ..ஒரே ஒரு கண்டிஷன் "என்றார்..

என்ன கண்டிஷனா இருக்கும் என்று உள்ளூர நான் யோசித்துக்கொண்டிருக்கும் போதே..

"இனிமே கவிதை எழுதுறேன் அப்டின்குற பேர்ல தமிழை கொலை பண்ண கூடாது சரியா?" என்றார்..
அவர் என் காதலை ஏற்றுக்கொண்டது அளப்பரிய மகிழ்ச்சியை கொடுத்தது.என் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாய் கொட்டியது..கொஞ்சம் சந்தோஷம்ன சிரிக்கலாம் ..அளவுக்க அதிகமான சந்தோஷம்னா அழுகை தானே வரும்..நான் என் உள்ளங்கையில் முகம் புதைத்து தேம்பி தேம்பி அழுதேன்..

அதை அவர் தவறாக புரிந்து கொண்டார்..

"ஏய் !!ப்ளீஸ் !ப்ளீஸ்!அழாத..கவிதை எழுதனும்னா தாராளமா எழுது நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்" என்றார்..

எனக்கோ சிரிப்பு வந்து விட்டது..கன்னம் வழி கண்ணீர் வழிந்தோட..சிரிப்பு ஒரு புறம் தாண்டவமாட...அப்பப்பா அந்த நிமிஷத்தை விவரிக்க வார்த்தையே கிடையாது.."

என்றபடி தன் காலில் தட்டு பட்ட ஒரு சிறிய கல்லை வேகமாக எட்டி உதைத்தாள் நந்தினி..பேச்சு சுவாரஸ்யத்தில் தன் எதிரில் இருந்த பெரிய கருங்கல்லை அவள் கவனிக்கவில்லை...அவளது வலது கால் அந்த கல்லில் மோதியதில் கட்டை விரலில் பலத்த அடி ஏற்பட்டு இரத்தம் பீறிட்டது..


ராதாவின் வார்த்தைகளை காதில் வாங்கிக்கொள்ளாமல் ,

"அரக்கோணம் ரயில் நிலையம்  ஆங்கிலேயர் காலத்திலேயே கட்டப்பட்டது தெரியுமா ?" என்றாள் நந்தினி.

ராதவோ ,"அதெல்லாம் இருக்கட்டும்.முதல்ல அந்த ஆட்டோகாரர் கிட்ட வடக்கம்பட்டுக்கு இப்போ பஸ் இருக்கான்னு கேளு " என்றாள்.

"பேசாம சசிக்கே போன் பண்ணி கேக்கலாம் ."

"அதெல்லாம் எதுக்கு ?அவ தான் தன்னோட வீட்டுக்கு வர தெளிவா வழி சொல்லி இருக்காளே !!முதல்ல வடக்கம்பட்டுக்கு பஸ்ல போகணும்.அப்றோம் அங்கிருந்து தலைவேட்டான்பட்டிக்கு அடுத்த வண்டி பிடிக்கணும்..ஊருக்குள்ள போனதும் மிட்டாய்க்கார சுப்பண்ணா வீடுன்னு கேட்டா போதுமாம்"

"மிட்டாய்க்கார சுப்பன்னாவா ?"

"ம்ம்..அவங்க அப்பா முன்னாடி மிட்டாய் கடை வச்சிருந்தாராம் .ஆனால் அந்த தொழிலில் அவருக்கு பயங்கர நஷ்டமாம்.அப்றோம் வேறு ஏதேதோ கூலித்தொழில் எல்லாம் பார்த்து ,அவளை கஷ்டப்பட்டு படிக்க வைத்தாராம்.அந்த 'மிட்டாய் ' என்ற வார்த்தை மட்டும் அவர் பெயரோடு ஒட்டிக்கொண்டதாம்."என்று ராதா சொன்னதை கேட்டு சிரித்தவாறு

"ம்ம் ..மிட்டாய்க்கார சுப்..பண்..ணா" என்று இழுத்து சொல்லி பார்த்த படி ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடந்தாள் நந்தினி.

அங்கிருந்த ஆட்டோக்காரரிடம்.
"அண்ணே !!வடக்கம்பட்டுக்கு இப்போ பஸ் இருக்கா?" என்றாள்.

பின்புறமாய் திரும்பி நின்ற ஆட்டோக்காரர் ,தன்னிடம் ஒரு பெண் பேசும் குரலைக் கேட்டு சட்டென்று திரும்பினார்.அவரது ஒரு கண் முழுவதும் பூ படர்ந்திருந்தது.முகமோ குண்டும் குழியுமாய் விகாரமாய் இருந்தது.

நந்தினி சற்று பயந்து பின் நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தாள்.

"வடக்கம்பட்டா ?அங்கே யாரை பார்க்கணும் ?"என்றார் ஆட்டோக்காரர்.

"அது வந்து.."என்று தொடங்கிய நந்தினியை பேச விடாமல் குறுக்கிட்டு..

"அது உங்களுக்கு தேவை இல்லை .வடக்கம்பட்டுக்கு இப்போ பஸ் இருக்கானு மட்டும் சொல்லுங்க !"என்றாள் ராதா.

அங்கிருந்த மற்றொரு ஆட்டோக்காரர்,

"ம்ம்..இருக்கும்மா ...ஆனா அரை மணி நேரம் ஆகும்.'APN  travels னு ஒரு மினி பஸ் வரும் "என்றார்.


சுமார் ஒரு மணி நேர காத்திருப்பிற்கு பின் பேருந்து வந்தது..
 இருவரும் ஏறிக்கொண்டனர்.

ஓடும் பேருந்தின் ஜன்னல் வழியே தரிசிக்கும் உலகம் மிகவும் அபரிமிதமானது.அதை ஒரு வித வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி..

தார்சாலைகளும் சாலையோர மரங்களும் பின் நோக்கி ஓட பேருந்தின் வேகம் அதிகமானது.ஒட்டு வீடுகளும் ,குடிசை வீடுகளும் நிறைந்த பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தது.அங்கே வேறு எதையோ பார்த்துவிட்டு,

"ராத!!..நம்ம ஊருல ஆடு,மாடு, கோழி,நாய் இதையெல்லாம் தானே வீட்டில் வளர்ப்போம் ..இங்கே எல்லா வீடுகளிலும் என்னென்ன வளர்க்கிறார்கள் பாரேன் !" என்று அருகில் இருந்த ராதாவின் தோளை பிடித்து உலுக்கினாள் நந்தினி..
இவள் என்ன உளருகிறாள் என்று உள்ளூர எண்ணிய படி ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தாள் ராதா.அங்கே சில பன்றிகள் மேய்ந்து கொண்டிருந்தன..ஆங்காங்கே சில வீடுகளின் வாசலில், நாய்க்குட்டியை கட்டி வைப்பது போல் ,பன்றிகளை கட்டி வைத்திருந்தனர்..

"ம்ம்..நாய்க்கு பதிலா பன்றி வளர்க்கிறாங்க "என்றாள் ராதா ,சற்று சிரித்தபடி..

பேருந்து ,வீடுகள் இருந்த பகுதிகளை கடந்து இப்போது எதோ காட்டு வழியில் போய்க்கொண்டிருந்தது .சுற்றிலும் பொட்டல் வெளிகளும்,முட் காடுகளுமே தென்பட்டன..அங்கிருந்த முட்புதர்களை சிலர் கழிப்பறையாக பயன் படுத்திக்கொண்டிருந்தனர்.அந்த பொட்டல் வெளிகளையும் ரியல் எஸ்டேட் காரர்கள் விட்டு வைக்க வில்லை ..ஆங்காங்கே பிளாட்டுகள் பிரிக்கப்பட்டு ரியல் எஸ்டேட் போர்டுகள் நட்டு வைக்கப்பட்டிருந்தன..

"நாம சரியான ரூட்ல தானே வந்துட்டிருக்கோம் ..எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு ..ஏதோ காட்டுக்குள் நுழைவது போல் ஒரு உணர்வு..சசிக்கு போன் பண்ணி பார்த்தேன் .அவள் கைபேசி அனைத்து வைக்கப்பட்டிருக்காம்..."என்றாள் நந்தினி..

ராதவோ பதில் ஏதும் சொல்லாமல் சிந்தனையில் ஆழ்ந்தாள்.

ஒரு மணி நேர பேருந்து பயணத்தின் முடிவில்.

"இந்தாம்மா..வடக்கம்பட்டு ...நீ தானே கேட்டா ..அடுத்து வர்றது தான் வடக்கம்பட்டு.."என்றார் நடத்துனர்..

வடக்கம்பட்டில் இறங்கியதும்,

"ரொம்ப பசிக்குது ராதா .பக்கத்துல எதாச்சு ஹோட்டல் இருந்தா சாப்டுட்டு போகலாம்..மணி இப்போவே பத்தாச்சு .."என்றாள் நந்தினி..

ராதா தன் தலையை திருப்பி சுட்டறு முற்றும் ஒரு முறை பார்த்து விட்டு,"இந்த காட்டுல ஹோட்டலுக்கு எங்கே போறது..அதோ பாரு அங்க ஒரு டீக்கடை இருக்கு..ரொம்ப பசிக்குதுன்னா பிரெட்டொ பிஸ்கட்டோ வாங்கிக்கலாம் வா" என்றாள்..
இருவரும் தங்கள் பைகளை தூக்கிக்கொண்டு டீக்கடையை நோக்கி நடந்தனர்..
டீக்கடையில்,

ஒரு பாக்கெட் ப்ரெட்டை வாங்கி, அதில் ஆளுக்கு இரண்டு துண்டுகளை மட்டும் சாப்பிட்டு விட்டு, அந்த இடத்தை விட்டு நகரும் முன்,

"அண்ணே !!தலைவெட்டான்பட்டிக்கு இப்போ பஸ் இருக்கா ?"என்று கடைக்கார பெரியவரிடம்    விசாரித்தால்   ராதா.

அவரோ சிரிக்க தொடங்கி விட்டார்..தன் கைகளை மட்டும் இலை என்பது போல் அசைத்தார்.அனால் கெக்க பெக்க என்று தன் வெற்றிலை கரை படிந்த பற்கள் தெரியும் வண்ணம் சிரித்துக்கொண்டே இருந்தார்..

ராதாவுக்கோ கோபம் வந்தது..

"அப்டி நான் என்ன தப்பா கேட்டுட்டேன்னு சிரிக்குறீங்க?"என்றாள் அவள்.

அதற்கு அந்த பெரியவர், தன்னுள்ளிருந்து பொங்கி வரும் சிரிப்பை கொஞ்சம் அடக்கியவாறு,

"தலைவெட்டான்பட்டிக்கு மனுஷன் போவானா? அந்த ஊருக்கு பஸ் இருக்கான்னு கேட்டியே !அத நெனச்சு சிரிச்சேன்.."என்றார்..

"ஏன் அங்க வாழுறவங்க எல்லாம் மனுஷங்க இல்லையா ?" என்று சீற்றத்துடன் பேசிய ராதாவின் தோளில் கை வைத்து அவளை அமைதியாக்க முயற்சித்தவளாய்,

"பஸ் இல்லீங்களா ?அப்போ அந்த ஊருக்கு எப்டி போறது? என்று கடைக்காரரிடம் கேட்டாள் நந்தினி..

"இந்த மண்சாலையை கடந்து நேரா போனா ஒரு வற்றிய குளம் வரும் .அதிலிருந்து இடது  பக்கமா திரும்பினா அங்க காத்தமுத்துன்னு ஒரு வண்டிக்காரர் நிற்பார்..அவரு கிட்ட சொன்னா கொண்டு போய் விடுவாரு.."

"வண்டிக்காரரா ? என்ன வண்டி ?"

"இந்த கிராமத்துல வேறென்ன வண்டி இருக்கும் கண்ணு..மாட்டு வண்டி தான்" என்றார் பெரியவர்..

"மாட்டு வண்டியா  ?" என்று வாயை பிளந்த ராதாவை சோகமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு, கடைக்காரரை நோக்கி
" ஆட்டோ எதுவும் இல்லீங்களா?"என்றாள் நந்தினி..

"ராசையான்னு ஒரு புள்ள ஆட்டோ ஓட்டும் ..அது இன்னைக்கு அரக்கோணம் போயிருக்கு .."என்றார் பெரியவர்.

வேறு வழியில்லாமல் ."வா!வண்டியை பிடிக்கலாம் என்றபடி நடக்க தொடங்கினால் நந்தினி..

ராதாவோ ,"ஏதோ காட்டுக்குள் வந்து மாட்டிகிட்டோமே !!" என்று புலம்பியபடியே நடந்தாள்...

கொஞ்சம் தூரம் நடந்த பிறகு,

"நந்தினி!!இந்த சசி பொண்ணு வண்டில வரணும்னு சொன்னா ..ஆனா மாட்டு வண்டின்னு சொல்லவே இல்லியே டி.."என்றாள் ராதா..

நந்தினி தன் பின்னால் தான் வருவதாக எண்ணி பேசிக்கொண்டே வந்தவள், " ஏண்டி !பேசாமல் வர்ற ?" என்றபடி லேசாக திரும்பி பார்த்தாள்..அங்கே நந்தினி இல்லை..

"நந்தினி!!நந்தினி!!"என்ற ராதாவின் சத்தத்தை கேட்டு..

"இதோ..வர்றேன் ராதா "என்று சில அடி தூரம் பின்னால் இருக்கும் ஒரு முட்செடியின் மறைவில் இருந்து குரல் கொடுத்தாள் நந்தினி..அவள் முகத்தில் ஏதோ ஏமாற்றம் தென்பட்டது..
"ஹே !நந்து..அங்க என்னடி பண்ற ?நீ என் பின்னாடி தான் வர்றன்னு நெனச்சு நான் தனியா பேசிகிட்டே நடக்குறேன்..வா!!"என்று சத்தமாய்ச் சொன்னாள் ராதா..
"வர்..ரே..ரே..ன் " என்றபடி தன் கையில் இருந்த பையோடு ஓட்டமும் நடையுமாய் ஓடி வந்தாள் நந்தினி..
"இந்த ஆளரவம் இல்ல ஊரில் தனியா நடக்க எவ்ளோ பயமா இருக்கு தெரியுமா? நீ அங்க என்ன பண்ணிட்டிருந்த ?" என்று கோபமாய் கேட்டாள் ராதா..

"அது வந்து...சாலையோரமா வளந்திருந்த அந்த செடி தொட்டச்சினுங்கின்னு நெனச்சு தொட்டு தொட்டு பார்த்தேன்...ஆனா அது சிணுங்கவே இல்ல ...அதான் யோசிச்சிட்டிருந்தேன்.." என்று குழந்தை போல் பதில் சொன்னால் நந்தினி..

நந்தினி எப்போதும் இப்படித்தான்..இவளது குழந்தை தனம் ராதாவிற்கு எரிச்சலையே கொடுத்தது..

"அந்த மனுஷன் எப்டி தான் உன்ன வச்சு காலம் தள்ளுராரோ.." என்று லேசாக முணுமுணுத்துக் கொண்டாள்.

ஒரு வழியாக வண்டி நிற்கும் இடத்தை அடைந்தனர்..வைக்கோல் ஏற்றிச் செல்ல பயன் படும் மாட்டு வண்டி அது..

"ஏண்டி !!இதுலயா நாம போகணும் " என்றாள் ராதா..

"வேற எப்டி போறதாம்? நடந்து போ ன்னு சொல்லாம ஏதோ ஒரு வண்டி கொடுத்தார்களே !!இதுவே போதும் ..பேசாமல் வா!!" என்றபடி வண்டியில் ஏறிக்கொண்டாள் நந்தினி..

சற்று கடுகடுத்தபடி ராதாவும் ஏறிக்கொண்டாள்..

பல முறை முயற்சி செய்தும் சசியை தொடர்பு கொள்ள முடியாதது ராதாவிற்கு மேலும் எரிச்சலையே கொடுத்தது...

கொஞ்சம் நேரம் இருவரும் ஒன்றும் பேசாமல் அமைதியாகவே இருந்தனர்..ஆனால் நந்தினியால் பேசாமல் இருக்க முடியவில்லை..

"ராதா !!சசி நம்மை விட ரெண்டு வயசு பெரியவள் தானே !!அவளுக்கு அவ வீட்ல வரன் தேடுறாங்களா இல்லையா " என்றாள் நந்தினி...

ம்ம்..பார்க்குறாங்களாம்..ஆனா ஜாதக பொருத்தம் இல்லையாம் "
என்றாள் ராதா.

"ஜாதகமா ? அதெல்லாம் பார்ப்பது வீண் வேலை.."

"ஏன்? உனக்கு நம்பிக்கை இல்லையா ?"

"நம்பிக்கை இருக்கு..அதனால தான் சொல்றேன்..!!விதிப்படி ஒரு விஷயம் நடக்கனும்னு இருந்தா அதை யாராலும் மாற்ற முடியாது ராதா.."

"விதியை மதியால் வெல்லலாம்.."

"ம்ஹூம் ..நிச்சயமா முடியாது..இதுக்கு ஒரு கதை கூட சொல்வாங்க...முன்னொரு காலத்தில பாச்கராச்சரியார் என்றொரு பெரிய கணித மேதை இருந்தாராம்..அவர் தன் மகள் லீலாவதிக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தாராம்..ஆனால் அவள் ஜாதகப்படி அவளை மணக்கும் மனிதன் இறந்து விடுவான்..இதை கணித்த பாஸ்கராச்சரியார் தன் மகளுக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை மிக துல்லியமாக கணித்தார்..சரியாக அவர் கணித்த நேரத்தில் திருமணம்  நடந்தால் அவர் மாப்பிள்ளை உயிருக்கு ஆபத்து கிடையாது..அப்படி துல்லியமாக நேரத்தை கணிப்பதற்காக ,தன் வீட்டில் இரண்டு பானைகளை ஒன்றின்மேல் ஒன்றாக வைத்தார்..மேலே இருக்கும் பானையில் ஒரு சிறிய துளை இட்டு அதில் தண்ணீரை நிரப்பி வைத்திருந்தார்..அந்த பானையில் உள்ள தண்ணீரின் அளவு குறைவதை வைத்து  நேரத்தை மிக துல்லியமாக கணக்கிட்டு, அவர் குறித்த நேரத்திலேயே தன் மகளின் திருமணத்தை நடத்தி வைத்தார்..பார்த்து பார்த்து எல்லாம் செய்தும், லீலாவதியின் கணவன் திருமணமான கொஞ்சம் நாட்களிலேயே இறந்து போனான்.அந்த கணித மேதைக்கு காரணம் புரியவில்லை .குழப்பத்தோடு தன் இல்லத்தில் நேரம் கணக்கிட தான் வைத்திருந்த பானையை  ஒரு முறை எட்டி பார்த்தார்.உள்ளே முத்து ஓன்று பானையின் துளையை லேசாக அடைத்திருந்தது..தான் கணித்த நேரம் தவறியதற்கான காரணம் அப்போது தான் அவருக்கு புரிந்தது.முத்து எப்படி பானைக்கு சென்றது என்று தன் மகளிடம் வினவினார் .."அப்பா பானையில எதுக்காக தண்ணி வச்சிருந்தீங்க? ஒரு நாள் நீரில் தெரியும் என் முக பிம்பத்தை பார்ப்பதற்காக பானைக்குள் எட்டி பார்த்தேன்..என் கழுத்தில் அணிந்திருந்த முத்து மாலையின் முத்து தவறி உள்ளே விழுந்திருக்கும் என்று நினைக்கிறேன்.." என்றாளாம்..பாஸ்கராச்சரியார் தன் தலையில் அடித்துக்கொண்டார்..விதி முத்து ரூபத்தில் வந்து லீலாவதியின் வாழ்க்கையோடு விளையாடியது..விதி வலியது ராதா ..அதை மதியால் வெல்வது நிச்சயமா முடியாது.."என்று நந்தினி சொல்லி முடித்த போது

"அம்மா..இதுக்கு மேல வண்டி போகாது ..நடந்து தான் போகணும் "என்றார் வண்டிக்காரர்.

"நடந்தா?நடந்து போனா எவ்ளோ நேரம் ஆகும் ?"

"வேகமா நடந்தா அரை மணி நேரத்தில் போயிடலாம்..வழியில தலையெல்லாம் சடை பிடிச்சு ,துணியெல்லாம் கிழிச்சுகிட்டு காத்தயின்னு ஒரு கிழவி இருக்கும்..அது கிட்ட மட்டும் பேச்சு கொடுக்காதீங்க ..அது ஒரு காதல் பைத்தியம் .."என்றார் வண்டிக்காரர்..

இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமுறை பார்த்துக்கொண்டு,
"சரிங்க!ரொம்ப நன்றி !" என்று கொஞ்சம் சில்லறையை அவர் கையில் கொடுத்து விட்டு நடக்க தொடங்கினர்...

நடக்கும் வழியில் ,ஒரு சிறிய கல்லை தன் காலால் எட்டி உதைத்தாள் நந்தினி ..
"என்னடி இது கால் பந்து ஆடிகிட்டே வர்ற ?" என்றாள் ராதா..

சிரித்தபடி," இது ஒரு விளையாட்டு ராதா "என்றாள் நந்தினி..

"விளையாட்டா?"

"ம்ம்,,விளையாட்டு தான்..உனக்கொரு விஷயம் தெரியுமா?கல்யாணத்துக்கு முன்னாடியே அருணை ரொம்ப நேசிச்சேன்.அவரு கிட்ட என் காதலை சொன்ன போது அவரு ஏத்துக்கவே இல்ல...கற்பனையிலேயே இருக்காத..நீ நெனக்கிறது நடக்காது அப்டின்னார்..தன் மனதை துறவு நிலையில் வைத்திருந்தார்..பொதுவாகவே அவருக்கு யார் மீதும் நம்பிக்கை கிடையாது..அதுவும் குறிப்பா பெண்கள் மீது சுத்தமா நம்பிக்கை கிடையாது..அவர் மனதுக்குள் நுழைய ஒரு சிறிய வாய்ப்பாவது கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு பல காலம் தவமாய் தவமிருந்தேன்..

கோயில்களுக்கு போவேன்.."இறைவா என் அருண் மனசுல எனக்காக ஒரு சின்ன இடத்தை மட்டும் வாங்கி கொடேன் " என்று வேண்டலாம்னு நெனைப்பேன்..ஆனா எதுவும் வேண்டாமல் திரும்ப வந்து விடுவேன்.

ஒரு முறை  காளி தேவி கோயில் ஒன்றுக்கு போயிருந்தேன்.பிரார்த்தனை சீட்டில் உங்கள் மனதில் உள்ள ஆசையை  எழுதி அம்பாள் பாதத்தில் வைத்தாள் ,நீங்கள் வேண்டியது நிச்சயம் பலிக்கும் என்றார்கள்.பத்து ரூபாய் செலவு செய்து ஒரு பிரார்த்தனை சீட்டை வாங்கி அதில் என் வேண்டுதலை எழுதலாம் என்று நினைத்தேன்.ஆனால் எழுத மனம் வரவில்லை..'எல்லாம் உனக்கு தெரியும்..நீயே பார்த்துக்கோம்மா.' என்று மட்டும் எழுதி அதை அம்பாள் காலடியில் வைத்தேன்..அப்போதெல்லாம் இப்படித்தான் கல்லை தட்டி விளையாடி என் காதலின் வெற்றியை கணிப்பேன்..

நான் தட்டி விடும் கல் நான் நினைக்கும் கோட்டை தாண்டி விட்டால்,என் அருண் எனக்கு தான்..ஒருவேளை தாண்டாவிட்டால் அந்த கல்லின் மீது எனக்கு பயங்கரமா கோபம் வரும் .வேகமாக நடந்து சென்று அந்த கல்லை அருகில் இருக்கும் ஏதாவது சாக்கடையில் தள்ளி விட்டு விடுவேன்..என் பேச்சை மதிக்காத கல்லுக்கு மரண தண்டனை கொடுத்ததாக நினைத்து உள்ளூர மகிழ்ந்து கொள்வேன்.."என்று நந்தினியை சற்று வியப்போடு பார்த்த படி..,

"அடி பாவி !!கோயிலுக்கு போவாளாம்..வேண்ட மாட்டாளாம்..ஆனால் கல்லை தட்டி காதலை கணிப்பாலாம் ..சரியான பைத்தியம் நீ..!"என்றாள் ராதா..

"ம்ம்...பைத்தியம் தான்...வெறும் பைத்தியம் இல்லை ..அருண் பைத்தியம்..!!உன் காதலுக்கு தூதாக நான் வேணும்னா போகட்டுமா என்று அந்த கடவுளே என்னிடம் கேட்டிருந்தால் கூட 'இல்லை வேண்டாம் 'என்று மறுத்திருப்பேன்..ஏன் தெரியுமா?காதல் ரொம்ப அழகான உணர்வு ராதா..அதை கட்டாயப்படுத்தி வாங்கி விட முடியாது..அது தானா வரணும்..நான் ஒன்றும் கல்லை காதலிக்கவில்லையே .ஒரு பெண்ணின் மன உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தியுள்ள ஒரு மனிதனை தானே காதலித்தேன்..அதனால் தான் அவர் மனமும் ஒரு நாள் கனியும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தேன்.

"சரி!சரி! அப்றோம் எப்டி தான் அவர் ஒத்துகிட்டார்?"

அத ஏன் கேக்குற ராதா..கவிதை கவிதையா எழுதி அவருக்கு அனுப்பிகிட்டிருந்தேன்.."என்று நந்தினி முழுமையாய் சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்ட  ராதா..

"உன் கவிதைகளை படித்து மயங்கிட்டாரா?" என்றாள்.

"இல்ல..பயந்துட்டார்"

"என்னடி சொல்ற??"

"ம்ம்...
உன்ன விரும்புது பொண்ணு
ப்ளீஸ் ஒத்துக்கோடா கண்ணு
கடலும் நீளமும் ஒண்ணு
நீ இல்லன்ன நான் மண்ணு

இந்த மாதிரி கன்னா பின்னான்னு கவிதைகள் எழுதி அவருக்கு அனுப்பிகிட்டேயிருந்தேன்..ஒரு நாள் போன் பண்ணினார்..உன்னை நேரில் பார்க்கணும் அப்டின்னார்..அவர் சொன்ன இடத்துக்கு நானும் போனேன்..அங்கே அவர் காத்திருந்தார்...

நான் போய் பத்து நிமிடங்கள் ஆகியும் அவர் ஒரு வார்த்தை கூட பேசல..

"பேசணும்னு வர சொல்லிட்டு இப்டி பேசாமலே இருந்தா என்ன அர்த்தம்?" அப்டின்னேன் ..

"பேச்சு வரலேன்னு அர்த்தம் "என்றார் அவர்..

எனக்கு கோபம் வந்து விட்டது..சுற்று முற்றும் ஒரு முறை பார்த்துக்கொண்டேன்..சட்டென்று இருக்கையை விட்டு எழுந்து

"நான் கெளம்புறேன் " என்றேன்..

அவர் என் கையை பற்றிக்கொண்டார் ..அவரை ஒரு முறை பார்த்தேன்..அவர் தன் பார்வையை இருக்கையின் புறமாய் செலுத்தி 'உட்காரு' என்பதை பார்வையிலேயே சொன்னார்..முதல் முதலாய் அவர் கை பிடிக்குள் இருப்பது ஒரு வித பயத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது..

என்னால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை..பேசாமல் தலை குனிந்தபடி உட்கார்ந்து கொண்டேன்..

"நந்தினி!" என்றார் அவர்..

என் நெஞ்சத்து ஏக்கத்தை எல்லாம் கண்களில் தேக்கியபடி அவரை ஒரே ஒரு பார்வை பார்த்தேன்..

அவரோ தன் கண்களால் என் கண்களை பருகியபடி..

"வில் யு மேரி மீ ?"என்றார்..

"என்ன திடீர் ஞானோதயம் ?"என்றேன்..

"கேட்கனும்னு தோனுச்சு "அப்டின்னார்.

அத்துடன் அவர் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை..அவரோ..

"ஆனா ..ஒரே ஒரு கண்டிஷன் "என்றார்..

என்ன கண்டிஷனா இருக்கும் என்று உள்ளூர நான் யோசித்துக்கொண்டிருக்கும் போதே..

"இனிமே கவிதை எழுதுறேன் அப்டின்குற பேர்ல தமிழை கொலை பண்ண கூடாது சரியா?" என்றார்..
அவர் என் காதலை ஏற்றுக்கொண்டது அளப்பரிய மகிழ்ச்சியை கொடுத்தது.என் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாய் கொட்டியது..கொஞ்சம் சந்தோஷம்ன சிரிக்கலாம் ..அளவுக்க அதிகமான சந்தோஷம்னா அழுகை தானே வரும்..நான் என் உள்ளங்கையில் முகம் புதைத்து தேம்பி தேம்பி அழுதேன்..

அதை அவர் தவறாக புரிந்து கொண்டார்..

"ஏய் !!ப்ளீஸ் !ப்ளீஸ்!அழாத..கவிதை எழுதனும்னா தாராளமா எழுது நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்" என்றார்..

எனக்கோ சிரிப்பு வந்து விட்டது..கன்னம் வழி கண்ணீர் வழிந்தோட..சிரிப்பு ஒரு புறம் தாண்டவமாட...அப்பப்பா அந்த நிமிஷத்தை விவரிக்க வார்த்தையே கிடையாது.."

என்றபடி தன் காலில் தட்டு பட்ட ஒரு சிறிய கல்லை வேகமாக எட்டி உதைத்தாள் நந்தினி..பேச்சு சுவாரஸ்யத்தில்  தன் எதிரில் இருந்த பெரிய கருங்கல்லை அவள் கவனிக்கவில்லை...அவளது வலது கால் அந்த கல்லில் மோதியதில் கட்டை விரலில் பலத்த அடி ஏற்பட்டு இரத்தம் பீறிட்டது..

"ஆ... அம்மாஆஆ  ...." என்று அலறினாள் நந்தினி .

"என்னாச்சு டி " என்ற ராதாவிடம்

"ஒரு சிறு கல்லை தட்டினேன் .என் காலில் பெரிய அடி பட்டு விட்டது " என்றாள் அவள்.

ராதாவோ 'களுக்' என்று சிரித்து விட்டாள்.

" என் வலி உனக்கு சிரிப்பா இருக்கா?"

"இல்ல நந்து !! எங்க வீட்டு பக்கத்துல ஒருத்தர் குடி போதையில் வண்டி ஓட்டி ,சாலையோரமாய் நிறுத்திவைக்க பட்டிருந்த  லாரியின் மீது மோதி இறந்து போனார். காதலும் ஒரு போதை என்பது உன்னை பார்க்கும் போது தான் தெரியுது . சிவனேன்னு ஒரு ஓரமா கிடந்த கல்லின் மீது நீயாய் போய் மோதிகிட்டியே அத நெனச்சு சிரிச்சேன்.."

"இவளுக்கு எப்போ அடி படும் ..எப்போ அறிவுரைகளை அள்ளி வீசலாம்னு காத்துட்டிருந்தியாக்கும்.??ஐயோ!!!ரத்தம் கூட வருதே.!!"

ராதாவோ ," சரி !சரி!சாரி !" என்று தன கையில் இருந்த கைக்குட்டையை எடுத்து, குடிப்பதற்காக பாட்டிலில் வைத்திருந்த தண்ணீரை அதில் ஊற்றி ,அந்த கைக்குட்டையை ஈரப்படுத்தினாள்..பின்னர் அந்த ஈரத்துணியை நந்தினியின் ரத்தம் வழியும் கட்டை விரலில் கட்டி விட முயன்றாள்.

நந்தினி நின்று கொண்டிருந்ததால் அவளால் சரியாக கட்டி விட முடியவில்லை .அதனால் நந்தினியை சற்று தொலைவில் தெரிந்த கல் இருக்கையை நோக்கி மெதுவாக அழைத்து சென்றாள் ராதா.பின்னர் அவளை அந்த கல்லில் அமர செய்து , அவளது காலில் அந்த ஈர கைக்குட்டையை கட்டி விட்டாள்.

இந்நிலையில் இரண்டு கண்கள் இவர்களை தொடர்ந்து வருவதை இருவருமே கவனிக்கவில்லை..

'டப் டப் 'என்று யாரோ கை தட்டும் ஓசை கேட்டு இருவரும் திரும்பினர்..

அங்கே சற்று தொலைவில் கந்தல் ஆடையும், சடை  பிடித்த தலையுமாய் ஒரு கிழவி நின்று கொண்டிருந்தாள். சற்று பயந்த நந்தினி ,"ராதா!!அதோ பாரேன்...அந்த வண்டிக்காரர் சொன்ன காத்தாயி இதுவா தான் இருக்கும்னு நெனக்கிறேன் " என்றாள் .

ஆமோதிப்பது போல் தலை அசைத்தாள் ராதா.

இவர்களை நோக்கி நடந்து வந்த காத்தாயி ,'ஏய் பொண்ணுங்களா !!இந்த உச்சி வெயிலில் கல்லறை மேல் உட்கார்ந்து என்ன பண்ணிட்டிருக்கீங்க ?" என்றாள் சப்தமாக.

"அட இந்த பைத்தியக்கார கிழவி என்ன உளறுகிறாள் " என்று முணுமுணுத்த படி சற்று குனிந்து அந்த கல்லை பார்த்த ராதா அதிர்ச்சியுற்றாள்.

ஆம்!அது கல்லறை தான்.தோற்றம் மறைவு என்று பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்கள் பாதி அழிந்த நிலையில் இருந்தன..

"ஹே! நந்து எழுந்திரு !!கிழவி சொல்றது சரி தான்..இது ஏதோ வில்லங்கம் போல் தெரியுது ..வா !!வேகமா நடந்துடலாம் "என்று அவளை இழுத்தபடி நடக்க தொடங்கினாள் ராதா..

ஓட்டமும் நடையுமாய் போகும் ராதாவின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் , சற்று நொண்டியபடி பின் தொடர்ந்தாள்  நந்தினி..

கொஞ்சம் தூரம் கடந்த பிறகு ,ஒரு முறை திரும்பி பார்த்த நந்தினி,

"ஹே ராதா !!அந்த கிழவி போயிடுச்சு !!இனியாவது கொஞ்சம் மெதுவா நடையேன் !!!" என்றாள்..

"நல்ல வேளை அந்த கிழவி போயிடுச்சு !!அது பைத்தியம்னு வண்டிக்காரர் சொன்னாரே நினைவிருக்கா !"என்றாள் ராதா.

"ம்ம்ம்.." என்று தலையசைத்தவள்
"இன்னும் எவ்ளோ தூரம் நடக்கணுமோ தெரியலியே " என்றாள் .

சற்று தொலைவில் ,
ஒரு புளிய மரத்து நிழலில் ,நடுத்தர வயதுள்ள மனிதன் ஒருவன் தலையில் முண்டாசும் கையில் பீடியுமாய் குத்த வைத்து அமர்ந்திருந்தான்..அவன் கையுள்ள பனியனும்,கட்டம் போட்ட அழுக்கு லுங்கியும் அணிந்திருந்தான்..

இருவரும் அந்த மனிதனை நோக்கி நடந்தனர்.

"அண்ணே !!தலைவெட்டான் பட்டிக்கு எப்டி போகணும் ?" என்றாள் ராதா.

அந்த மனிதன், இருவரையும் மேலும் கீழுமாய் ஒரு முறை பார்த்துக்கொண்டான்.பின்னர், தன் வலது கையில் பீடியை பிடித்து கொண்டு ,
"அங்க யாரை பார்க்கணும்?" என்றான்.
" அது உனக்கு தேவை இல்லை .வழியை கேட்டால் வழியை மட்டும் சொல் ." என்று முகத்தில் அறைவது போல் தான் ராதா பேசுவாள் என்று நந்தினிக்கு நன்றாக தெரியும்,.அதனால் அவள் அப்படி ஏதும் பேசுவதற்கு முன்னால் தானே பதில் சொல்லி விட வேண்டும் என்று முந்தி கொண்டாள்..
"மிட்டாய் கார சுப்பண்ணா வீட்டுக்கு போகணும் " என்ற நந்தினியை கோபமாய் ஒரு முறை பார்த்தாள் ராதா.அவள் பார்வை இவனுக்கெல்லாம் எதுக்கு பதில் சொல்ற என்பது போல் இருந்தது.

ராதா எப்போதும் இப்படி தான் .யாரையும் எளிதில் நம்ப மாட்டாள் .ஆனால் நந்தினியோ குழந்தை போல் எல்லோரையும் நம்பி விடுவாள்.

இந்த விஷயத்தில் அருணுக்கும் நந்தினிக்கும் இடையே கூட சின்ன சின்ன வாக்கு வாதங்கள் நடப்பதுண்டு..

"இப்டி குழந்தைதனமா எல்லாரையும் நம்ப கூடாது நந்து " என்பான் அவன்.

"நல்லவங்கள சந்தேக படுறது கூட தப்பு தாங்க " என்பாள் அவள்..

இப்படி தொடங்கும் வாக்குவாதம் நீண்டு கொண்டே போகும்.

"நந்து!!ஒரு மனிதனின் குணத்தை தெளிவா ஆராய்ந்து தெரிஞ்சுக்காம அவங்க மேல நம்பிக்கை வைப்பது புத்திசாலித்தனம் இல்லை நந்து!" என்பான் அவன் தன்னையுமறியாமல் பேச்சுக்கு இடையில் அவள் பெயரை அடிக்கடி உச்சரித்தபடி..

அவனுக்கு பதில் சொல்லும் விதமாக..

"ஆமாமா !!நீ உன் ஆராய்ச்சியை முடிக்கிறதுக்குள்ள அந்த மனுஷங்க ஆயுசு முடிஞ்சு போகும்.நம்பிக்கை வைப்பது என் கடமை..நான் நம்பிக்கை வைக்கும் மனிதர்கள் என்னை ஏமாற்றி விட்டால், நம்பியவளை ஏமாற்றிய பாவம் அவர்களை தானே சேரும் "என்பாள் அவள்.

"ம்ம்ம்..ஏமாந்த பாவம் உன்னை சேரும்..பாவமாம் புண்ணியமாம் ..இதோ பாரு நந்து, நீ இப்டியே இருந்தா எல்லோரும் உன்னை முட்டாள் ஆக்கி விடுவார்கள்.."

"நான் முட்டாள் ஆகாமல் பார்த்துக்க தான் நீ இருக்குறியே " என்பாள் நந்தினி, தன் பார்வையால் அவனை ஊடுருவியபடி..

தன் மனைவி எதை சொன்னாலும் ,கடைசியில் ஒரு துளி காதலையும் கலந்து விடுகிறாளே என்று உள்ளூர அவளை ரசித்ததனால் ,முகத்தில் பளிச்சிட்ட புன்னகையை மறைக்க முயன்றவாறு,

"சரி சரி !!ஒரு கப் காபி கிடைக்குமா ?" என்று பேச்சை மாற்றுவான் அருண்..

'ஆமா! என் வாயை  அடைக்கணும்னா எதாச்சு வேலை குடுத்து கிச்சனுக்கு அனுப்பிட வேண்டியது." என்று முனுமுனுத்தபடி அடுக்களைக்குள் நுழைவாள் அவள்.

அந்த புளிய மரத்தடி மனிதனிடம்   மிட்டாய் கார சுப்பண்ணா வீட்டுக்கு போகணும் என்று நந்தினி சொன்னதும்,

"ஒ! சுப்பண்ணா வீட்டுக்கா ??இந்த ஒத்தையடி பாதையில நேரா போயி சோத்து கை பக்கமா திரும்பினா தலைவெட்டான்பட்டி ன்னு ஒரு பெரிய போர்டு இருக்கும் .ஊருக்குள்ள போயி சுப்பண்ணா வீடு எதுன்னு கேட்டீங்கன்னா  சொல்வாங்க .." என்றான்.

"நன்றிங்க !! என்றபடி இருவரும் மீண்டும் நடக்க தொடங்கினர்..

கொஞ்சம் தூரம் பேசாமல் நடந்த பின் ,

"நந்து!!பொதுவா காதலில் தோற்ற ஆண்கள் தானே பைத்தியம் ஆவாங்க..பெண்களுக்கு கூடவா பைத்தியம் பிடிக்கும் என்று ராதா சொன்ன போது ,காத்தாயி கிழவியை மனதில் வைத்துக் கொண்டு தான் இவள் இப்படி கேட்கிறாள் என்பதை புரிந்து கொண்டாள் நந்தினி ..

"ம்ம்...அதெல்லாம் காதலின் அளவை பொறுத்தது ராதா !!காதல்னா என்ன??அன்பின் இன்னொரு பரிமாணம் தானே !அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம் தான்.காதலும் அப்படி தான் ..அது மிதமிஞ்சி போனால் மனநிலை பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு..பொதுவாக ஆண்கள்  வலியை மனதுக்குள் மறைத்து வைப்பவர்கள்..அவர்களால் வாய் விட்டு அழ முடியாது..அப்படி அழுவது ஆண்மைக்கு அழகும் கிடையாது..ஆனால் பெண்கள் அப்படி கிடையாது ..ஒரு சின்ன பிரச்சனையை என்றால் கூட  ஐயோ அம்மா என்று ஒப்பாரி வைத்து  வலியை தீர்த்து கொள்வார்கள் ..அவர்கள் இதயத்தில் இருக்கும் பாரமெல்லாம் கண்ணீரால் கரைந்து போய் விடும்..இந்த காத்தாயி மாதிரி சில பெண்கள் மட்டும் விதி விலக்கு."


"நீ சொல்றதும் சரி தான்..ஆனா அது காதலுக்கு பொருந்தாது..ஒரு ஆண் காதலில் தோற்று விட்டால் ,அவள் தாடி வளர்த்துக் கொள்ளலாம் ,தேவதாஸ் ஆகி டாஸ்மாக்கே கதி என்று கிடக்கலாம்,புண் பட்ட மனதை புகை விட்டு ஆற்ற போகிறேன் என்று தன்னை தானே அழித்துக்கொள்ளலாம் , பைத்தியம் போல் தெருவில் சுற்றலாம், 'சீ !!சீ! இந்த பொண்ணுங்களே இப்படி தான் மச்சி..எவளையும் நம்ப கூடாது ' என்ற அழுத்தமான முடிவோடு இருக்கலாம்,வஞ்சம் வைத்து பழி வாங்க துடிக்கலாம், இங்கே எல்லாத்துக்கும் ஆணுக்கு உரிமை உண்டு..ஆனால் பாவம் இந்த பெண்ண ஜென்மம்..காதலில் தோற்று விட்டால், வேறு எதை பற்றியும் யோசிக்காமல் இன்னொருத்தரை கல்யாணம் பண்ணி , அவர் குழந்தைக்கு அம்மா ஆகி விட வேண்டும்..ம்ம்.."

"வேறென்ன பண்ணனும் அப்டின்குற ??காதலில் தோற்ற பெண்கள் எல்லாம் பைத்தியம் ஆகி தெருவில் திரியனும் அப்டிங்குரியா??ஒரு வேளை அப்படி ஒரு நிலை  வந்தால் என்ன ஆகும்னு யோசிச்சு பாத்தியா ??தாய்மை உணர்வோடு அன்னை ஒருத்தி ,தன் குழந்தைக்கு பாலூட்டுவதற்காக முந்தானையை விலக்கினால் கூட எங்கே என்ன தெரிகிறது என்று எட்டி பார்க்கும் ஈனப்பிறவிகள் வாழும் சமூஹம் ஆச்சே இது ..இவர்களுக்கு மத்தியில் மதியிழந்த பெண்கள் மானத்தோடு வாழ முடியுமா??இப்படி பைத்தியக்காரியாய் வேசியாய் தெருவில் திரிவதை விட, ஒருவனை மணந்து அவனுக்கு பத்தினியாய் வாழ்வது ஒன்றும் பாவமான செயல் இல்லை ராதா !!" என்று நந்தினி சொல்லி முடித்த போது ஆமோதிப்பது போல் "ம்ம்" என்றபடி தலையசைத்தாள் ராதா...

இருவரும் பேசி பேசி நடந்ததால் ,கடந்த தூரமும் நடந்த களைப்பும் தெரியவில்லை ..

சற்று தொலைவில் தலைவெட்டான்பட்டி என்ற போர்டு தெரிந்தது..

(தொடரும்..)

நினைவெல்லாம் அருண்

Episode -4
------------
"ஆ... அம்மாஆஆ  ...." என்று அலறினாள் நந்தினி .

"என்னாச்சு டி " என்ற ராதாவிடம்

"ஒரு சிறு கல்லை தட்டினேன் .என் காலில் பெரிய அடி பட்டு விட்டது " என்றாள் அவள்.

ராதாவோ 'களுக்' என்று சிரித்து விட்டாள்.

" என் வலி உனக்கு சிரிப்பா இருக்கா?"

"இல்ல நந்து !! எங்க வீட்டு பக்கத்துல ஒருத்தர் குடி போதையில் வண்டி ஓட்டி ,சாலையோரமாய் நிறுத்திவைக்க பட்டிருந்த  லாரியின் மீது மோதி இறந்து போனார். காதலும் ஒரு போதை என்பது உன்னை பார்க்கும் போது தான் தெரியுது . சிவனேன்னு ஒரு ஓரமா கிடந்த கல்லின் மீது நீயாய் போய் மோதிகிட்டியே அத நெனச்சு சிரிச்சேன்.."

"இவளுக்கு எப்போ அடி படும் ..எப்போ அறிவுரைகளை அள்ளி வீசலாம்னு காத்துட்டிருந்தியாக்கும்.??ஐயோ!!!ரத்தம் கூட வருதே.!!"

ராதாவோ ," சரி !சரி!சாரி !" என்று தன கையில் இருந்த கைக்குட்டையை எடுத்து, குடிப்பதற்காக பாட்டிலில் வைத்திருந்த தண்ணீரை அதில் ஊற்றி ,அந்த கைக்குட்டையை ஈரப்படுத்தினாள்..பின்னர் அந்த ஈரத்துணியை நந்தினியின் ரத்தம் வழியும் கட்டை விரலில் கட்டி விட முயன்றாள்.

நந்தினி நின்று கொண்டிருந்ததால் அவளால் சரியாக கட்டி விட முடியவில்லை .அதனால் நந்தினியை சற்று தொலைவில் தெரிந்த கல் இருக்கையை நோக்கி மெதுவாக அழைத்து சென்றாள் ராதா.பின்னர் அவளை அந்த கல்லில் அமர செய்து , அவளது காலில் அந்த ஈர கைக்குட்டையை கட்டி விட்டாள்.

இந்நிலையில் இரண்டு கண்கள் இவர்களை தொடர்ந்து வருவதை இருவருமே கவனிக்கவில்லை..

'டப் டப் 'என்று யாரோ கை தட்டும் ஓசை கேட்டு இருவரும் திரும்பினர்..

அங்கே சற்று தொலைவில் கந்தல் ஆடையும், சடை  பிடித்த தலையுமாய் ஒரு கிழவி நின்று கொண்டிருந்தாள். சற்று பயந்த நந்தினி ,"ராதா!!அதோ பாரேன்...அந்த வண்டிக்காரர் சொன்ன காத்தாயி இதுவா தான் இருக்கும்னு நெனக்கிறேன் " என்றாள் .

ஆமோதிப்பது போல் தலை அசைத்தாள் ராதா.

இவர்களை நோக்கி நடந்து வந்த காத்தாயி ,'ஏய் பொண்ணுங்களா !!இந்த உச்சி வெயிலில் கல்லறை மேல் உட்கார்ந்து என்ன பண்ணிட்டிருக்கீங்க ?" என்றாள் சப்தமாக.

"அட இந்த பைத்தியக்கார கிழவி என்ன உளறுகிறாள் " என்று முணுமுணுத்த படி சற்று குனிந்து அந்த கல்லை பார்த்த ராதா அதிர்ச்சியுற்றாள்.

ஆம்!அது கல்லறை தான்.தோற்றம் மறைவு என்று பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்கள் பாதி அழிந்த நிலையில் இருந்தன..

"ஹே! நந்து எழுந்திரு !!கிழவி சொல்றது சரி தான்..இது ஏதோ வில்லங்கம் போல் தெரியுது ..வா !!வேகமா நடந்துடலாம் "என்று அவளை இழுத்தபடி நடக்க தொடங்கினாள் ராதா..

ஓட்டமும் நடையுமாய் போகும் ராதாவின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் , சற்று நொண்டியபடி பின் தொடர்ந்தாள்  நந்தினி..

கொஞ்சம் தூரம் கடந்த பிறகு ,ஒரு முறை திரும்பி பார்த்த நந்தினி,

"ஹே ராதா !!அந்த கிழவி போயிடுச்சு !!இனியாவது கொஞ்சம் மெதுவா நடையேன் !!!" என்றாள்..

"நல்ல வேளை அந்த கிழவி போயிடுச்சு !!அது பைத்தியம்னு வண்டிக்காரர் சொன்னாரே நினைவிருக்கா !"என்றாள் ராதா.

"ம்ம்ம்.." என்று தலையசைத்தவள்
"இன்னும் எவ்ளோ தூரம் நடக்கணுமோ தெரியலியே " என்றாள் .

சற்று தொலைவில் ,
ஒரு புளிய மரத்து நிழலில் ,நடுத்தர வயதுள்ள மனிதன் ஒருவன் தலையில் முண்டாசும் கையில் பீடியுமாய் குத்த வைத்து அமர்ந்திருந்தான்..அவன் கையுள்ள பனியனும்,கட்டம் போட்ட அழுக்கு லுங்கியும் அணிந்திருந்தான்..

இருவரும் அந்த மனிதனை நோக்கி நடந்தனர்.

"அண்ணே !!தலைவெட்டான் பட்டிக்கு எப்டி போகணும் ?" என்றாள் ராதா.

அந்த மனிதன், இருவரையும் மேலும் கீழுமாய் ஒரு முறை பார்த்துக்கொண்டான்.பின்னர், தன் வலது கையில் பீடியை பிடித்து கொண்டு ,
"அங்க யாரை பார்க்கணும்?" என்றான்.
" அது உனக்கு தேவை இல்லை .வழியை கேட்டால் வழியை மட்டும் சொல் ." என்று முகத்தில் அறைவது போல் தான் ராதா பேசுவாள் என்று நந்தினிக்கு நன்றாக தெரியும்,.அதனால் அவள் அப்படி ஏதும் பேசுவதற்கு முன்னால் தானே பதில் சொல்லி விட வேண்டும் என்று முந்தி கொண்டாள்..
"மிட்டாய் கார சுப்பண்ணா வீட்டுக்கு போகணும் " என்ற நந்தினியை கோபமாய் ஒரு முறை பார்த்தாள் ராதா.அவள் பார்வை இவனுக்கெல்லாம் எதுக்கு பதில் சொல்ற என்பது போல் இருந்தது.

ராதா எப்போதும் இப்படி தான் .யாரையும் எளிதில் நம்ப மாட்டாள் .ஆனால் நந்தினியோ குழந்தை போல் எல்லோரையும் நம்பி விடுவாள்.

இந்த விஷயத்தில் அருணுக்கும் நந்தினிக்கும் இடையே கூட சின்ன சின்ன வாக்கு வாதங்கள் நடப்பதுண்டு..

"இப்டி குழந்தைதனமா எல்லாரையும் நம்ப கூடாது நந்து " என்பான் அவன்.

"நல்லவங்கள சந்தேக படுறது கூட தப்பு தாங்க " என்பாள் அவள்..

இப்படி தொடங்கும் வாக்குவாதம் நீண்டு கொண்டே போகும்.

"நந்து!!ஒரு மனிதனின் குணத்தை தெளிவா ஆராய்ந்து தெரிஞ்சுக்காம அவங்க மேல நம்பிக்கை வைப்பது புத்திசாலித்தனம் இல்லை நந்து!" என்பான் அவன் தன்னையுமறியாமல் பேச்சுக்கு இடையில் அவள் பெயரை அடிக்கடி உச்சரித்தபடி..

அவனுக்கு பதில் சொல்லும் விதமாக..

"ஆமாமா !!நீ உன் ஆராய்ச்சியை முடிக்கிறதுக்குள்ள அந்த மனுஷங்க ஆயுசு முடிஞ்சு போகும்.நம்பிக்கை வைப்பது என் கடமை..நான் நம்பிக்கை வைக்கும் மனிதர்கள் என்னை ஏமாற்றி விட்டால், நம்பியவளை ஏமாற்றிய பாவம் அவர்களை தானே சேரும் "என்பாள் அவள்.

"ம்ம்ம்..ஏமாந்த பாவம் உன்னை சேரும்..பாவமாம் புண்ணியமாம் ..இதோ பாரு நந்து, நீ இப்டியே இருந்தா எல்லோரும் உன்னை முட்டாள் ஆக்கி விடுவார்கள்.."

"நான் முட்டாள் ஆகாமல் பார்த்துக்க தான் நீ இருக்குறியே " என்பாள் நந்தினி, தன் பார்வையால் அவனை ஊடுருவியபடி..

தன் மனைவி எதை சொன்னாலும் ,கடைசியில் ஒரு துளி காதலையும் கலந்து விடுகிறாளே என்று உள்ளூர அவளை ரசித்ததனால் ,முகத்தில் பளிச்சிட்ட புன்னகையை மறைக்க முயன்றவாறு,

"சரி சரி !!ஒரு கப் காபி கிடைக்குமா ?" என்று பேச்சை மாற்றுவான் அருண்..

'ஆமா! என் வாயை  அடைக்கணும்னா எதாச்சு வேலை குடுத்து கிச்சனுக்கு அனுப்பிட வேண்டியது." என்று முனுமுனுத்தபடி அடுக்களைக்குள் நுழைவாள் அவள்.

அந்த புளிய மரத்தடி மனிதனிடம்   மிட்டாய் கார சுப்பண்ணா வீட்டுக்கு போகணும் என்று நந்தினி சொன்னதும்,

"ஒ! சுப்பண்ணா வீட்டுக்கா ??இந்த ஒத்தையடி பாதையில நேரா போயி சோத்து கை பக்கமா திரும்பினா தலைவெட்டான்பட்டி ன்னு ஒரு பெரிய போர்டு இருக்கும் .ஊருக்குள்ள போயி சுப்பண்ணா வீடு எதுன்னு கேட்டீங்கன்னா  சொல்வாங்க .." என்றான்.

"நன்றிங்க !! என்றபடி இருவரும் மீண்டும் நடக்க தொடங்கினர்..

கொஞ்சம் தூரம் பேசாமல் நடந்த பின் ,

"நந்து!!பொதுவா காதலில் தோற்ற ஆண்கள் தானே பைத்தியம் ஆவாங்க..பெண்களுக்கு கூடவா பைத்தியம் பிடிக்கும் என்று ராதா சொன்ன போது ,காத்தாயி கிழவியை மனதில் வைத்துக் கொண்டு தான் இவள் இப்படி கேட்கிறாள் என்பதை புரிந்து கொண்டாள் நந்தினி ..

"ம்ம்...அதெல்லாம் காதலின் அளவை பொறுத்தது ராதா !!காதல்னா என்ன??அன்பின் இன்னொரு பரிமாணம் தானே !அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம் தான்.காதலும் அப்படி தான் ..அது மிதமிஞ்சி போனால் மனநிலை பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு..பொதுவாக ஆண்கள்  வலியை மனதுக்குள் மறைத்து வைப்பவர்கள்..அவர்களால் வாய் விட்டு அழ முடியாது..அப்படி அழுவது ஆண்மைக்கு அழகும் கிடையாது..ஆனால் பெண்கள் அப்படி கிடையாது ..ஒரு சின்ன பிரச்சனையை என்றால் கூட  ஐயோ அம்மா என்று ஒப்பாரி வைத்து  வலியை தீர்த்து கொள்வார்கள் ..அவர்கள் இதயத்தில் இருக்கும் பாரமெல்லாம் கண்ணீரால் கரைந்து போய் விடும்..இந்த காத்தாயி மாதிரி சில பெண்கள் மட்டும் விதி விலக்கு."


"நீ சொல்றதும் சரி தான்..ஆனா அது காதலுக்கு பொருந்தாது..ஒரு ஆண் காதலில் தோற்று விட்டால் ,அவள் தாடி வளர்த்துக் கொள்ளலாம் ,தேவதாஸ் ஆகி டாஸ்மாக்கே கதி என்று கிடக்கலாம்,புண் பட்ட மனதை புகை விட்டு ஆற்ற போகிறேன் என்று தன்னை தானே அழித்துக்கொள்ளலாம் , பைத்தியம் போல் தெருவில் சுற்றலாம், 'சீ !!சீ! இந்த பொண்ணுங்களே இப்படி தான் மச்சி..எவளையும் நம்ப கூடாது ' என்ற அழுத்தமான முடிவோடு இருக்கலாம்,வஞ்சம் வைத்து பழி வாங்க துடிக்கலாம், இங்கே எல்லாத்துக்கும் ஆணுக்கு உரிமை உண்டு..ஆனால் பாவம் இந்த பெண்ண ஜென்மம்..காதலில் தோற்று விட்டால், வேறு எதை பற்றியும் யோசிக்காமல் இன்னொருத்தரை கல்யாணம் பண்ணி , அவர் குழந்தைக்கு அம்மா ஆகி விட வேண்டும்..ம்ம்.."

"வேறென்ன பண்ணனும் அப்டின்குற ??காதலில் தோற்ற பெண்கள் எல்லாம் பைத்தியம் ஆகி தெருவில் திரியனும் அப்டிங்குரியா??ஒரு வேளை அப்படி ஒரு நிலை  வந்தால் என்ன ஆகும்னு யோசிச்சு பாத்தியா ??தாய்மை உணர்வோடு அன்னை ஒருத்தி ,தன் குழந்தைக்கு பாலூட்டுவதற்காக முந்தானையை விலக்கினால் கூட எங்கே என்ன தெரிகிறது என்று எட்டி பார்க்கும் ஈனப்பிறவிகள் வாழும் சமூஹம் ஆச்சே இது ..இவர்களுக்கு மத்தியில் மதியிழந்த பெண்கள் மானத்தோடு வாழ முடியுமா??இப்படி பைத்தியக்காரியாய் வேசியாய் தெருவில் திரிவதை விட, ஒருவனை மணந்து அவனுக்கு பத்தினியாய் வாழ்வது ஒன்றும் பாவமான செயல் இல்லை ராதா !!" என்று நந்தினி சொல்லி முடித்த போது ஆமோதிப்பது போல் "ம்ம்" என்றபடி தலையசைத்தாள் ராதா...

இருவரும் பேசி பேசி நடந்ததால் ,கடந்த தூரமும் நடந்த களைப்பும் தெரியவில்லை ..

சற்று தொலைவில் தலைவெட்டான்பட்டி என்ற போர்டு தெரிந்தது..

(தொடரும்..)