Friday 12 September 2014

அன்பே சிவம் !!!


As Parents, we must teach our children to pray...
அவளுக்கு இருபது வயது இருக்கும்.. நிறம் கருப்பு தான்....ஆனால் ரொம்பவே அழகு...அட..மருத்துவமனையில் என்ன செய்கிறாள் என்ற மனதின் கேள்வியோடு அருகில் சென்றேன்.."என்ன பிரச்சன??" என்றேன்..

"ஒன்னும் இல்ல..இதயத்துல அறுவை சிகிச்சை ஆச்சு.." என்று அவள் முடிப்பதற்குள் "இதயத்துல அறுவை சிகிச்சையா??அதுக்கு ஏன் காலில் கட்டு போட்டிருக்காங்க??" என்றேன்.."அத ஏன்மா கேக்குற??ஒரு வருஷம் முன்னாடி இதயத்துல அறுவை சிகிச்சை ஆச்சு..தன்னோட உடம்பு சரி ஆச்சுன்னா பொன்னியம்மாவுக்கு தீ மிதிப்பதா வேண்டிகிச்சாம்...இப்போ தீ மிதிச்சு கால் வெந்து போச்சு...."என்றாள் அவள் அம்மா... 

"சுத்த பத்தமா இருந்தா தானே .." என்று கடிந்து கொண்டாள் அவளது பாட்டி.."இந்த முறை கால் புண் ஆறிடுச்சுன்னா தலையால தீ மிதிப்பேன்னு  வேண்டிக்கோடி" என்று கேலி செய்தாள் அங்கிருந்த பெண் ஒருத்தி.நானோ அந்த பெண்ணின் முட்டாள் தனத்தை நினைத்து உள்ளூர நொந்து கொண்டேன்..என் வேண்டுதல்கள் நினைவுக்கு வந்தன..

நானும் பக்தை தான்..ஆஞ்சநேய பக்தை...கல்லூரியில் ஒவ்வொரு செமஸ்டரின் போதும் ஏதாவது வேண்டிக் கொள்வேன்..முதல் செமஸ்டர் நல்ல எழுதினா.."ஸ்ரீ ராம ஜெயம் " 108 முறை எழுதி அதை மாலையாக கட்டி போடுவதாக நங்கநல்லூர் ஆஞ்சனேயரிடம் வேண்டிக் கொண்டேன்..நிறைவேற்றவும் செய்தேன்..இரண்டாவது செமஸ்டரில் 1008 முறை " ஸ்ரீ ராம ஜெயம்" எழுதி போடுவதாக வேண்டிக் கொண்டேன்..

இப்படியே ஒவ்வொரு செமஸ்டருக்கும் வேண்டுதல் அதிகம் ஆகிக் கொண்டே போனது...ஒரு கட்டத்தில் " ஆஞ்சநேயா எனக்கு தெரிந்த அத்தனை மொழிகளிலும் 1008 முறை "ஸ்ரீ ராம ஜெயம் " எழுதி போடுகிறேன் " என்று வேண்டிக்கொண்டேன்..எனக்கோ ஏழு மொழிகளில் ஸ்ரீ ராம ஜெயம் எழுத தெரியும்..சத்தியமா முடியல..அப்றோம் கடைசியா ஆஞ்சநேயர் கிட்ட போய் "சாரி டா ஹனுமான் ...என்னால என் வேண்டுதல அப்டியே நிறை வேற்ற முடியல..கை வலிச்சுது ..ப்ளீஸ் ப்ளீஸ் 1008 முறைக்கு பதிலா 108 முறை மட்டும் எழுதுறேன்..என்று சொல்லி..அப்றோம் அதையும் முழுசா செய்யாம.."ஸ்ரீ ராம ஜெயம் " என முழுசா எழுதுவதற்கு பதில் "ராமா " என்று மட்டும் எழுதி.. ஒரு வழியா என் வேண்டுதலை பல கோல் மால்கள் பண்ணி நிறை வேற்றினேன்..கடைசியா ஆஞ்சனேயரிடம்.."இதோ பாரு இனிமே இப்டி கஷ்டமான வேண்டுதல் எல்லாம் கண்டிப்பா வேண்டிக்க மாட்டேன்..என் அன்பு உண்மை..சோ இந்த ஒரு வாட்டி என்ன மன்னிச்சுக்கோ .." என்றேன்..பாவம் ஆஞ்சநேயர்..."போடி நீயும் உன் புண்ணாக்கு வேண்டுதலும்..சும்மா கடுப்பேத்திக்கிட்டு" என்று மனதுக்குள் என்னை கடிந்திருப்பார்...

இப்போ என்ன நித்யா சொல்ல வர்றே அப்டின்னு தானே கேக்குறீங்க..சிம்பிள் ...

கடவுள் உங்களிடம் எதிர்பார்ப்பது உங்கள் அன்பை மட்டும் தான்...எவ்ளோ கஷ்டம் வந்தாலும் தீ மிதிக்கிறேன், அலகு குத்திக்கிறேன், என் தலையில பொல பொலன்னு ரத்தம் வழிய தேங்காய் உடச்சுக்கிறேன்...அப்டி இப்டின்னு கொடுமையான வேண்டுதல்களை தயவு செய்து வேண்டிக் கொள்ளாதீர்கள்...அப்படியே வேண்டனும்னு ஆசை பட்டா .."ஒரு அனாதை குழந்தையை படிக்க வைப்பதாக வேண்டிக் கொள்ளுங்கள் ..இல்லாதவர்களுக்கு தானம் செய்வதாக வேண்டிக் கொள்ளுங்கள்..அன்ன தானமோ, கல்வி தானமோ எதுன்னாலும் சரி..வறுமையில் இருப்போருக்கு ஒரு வேளை சோறு போட்டாலும் போதும்..கடவுள் மகிழ்வார்...மாறாக உங்களை நீங்களே காயப் படுத்திக் கொள்வதால் இறைவனும் கண்ணீர் மட்டுமே உதிர்ப்பான்..உலகை படைத்த தந்தையாம் இறைவனை மகிழ்விப்போம்!!!

Life  is  beautiful ..