Saturday 25 April 2015

என் காதல் சொல்ல தேவையில்லை..-7

Episode -7
--------------



ரயிலில் அமர்ந்து கொண்டாள் ராதிகா..
கருநீல வண்ண டாப்பும் அதில் வெள்ளை பூக்களுமாய் ..அந்த ஆடையை பாதி மறைத்தபடி அவளது வெள்ளை துப்பட்டா அங்கும் இங்குமாய் அசைந்து கொண்டிருந்தது..

ஒரு கருப்பு துப்பட்டாவால் தன் கருவண்டு கண்களை மட்டும் தவிர்த்து மொத்த முகத்தையும் மூடிக் கொண்டிருந்தாள் ..

"அக்கா..ஐ ஆம் சாரி ..நான் ஒருத்தர காதலிக்கிறேன்..அவர் வேறு மதத்தை சேர்ந்தவர்..என்னால் வேறு யாரையும் திருமணம் செய்ய முடியாது ..நான் பைத்தியம் இல்லை..என்னை எந்த பேயும் பிடிக்கவுமில்லை..நான்  விரும்பி தான் அவரோடு போகிறேன் ..என்னை தேடாதீர்கள்..
தேங்க்ஸ் ..எல்லாத்துக்கும்..."

அக்கா என்னோட அந்த லெட்டெர படிச்சிட்டு என்ன நெனச்சிருப்பா??
ஒடுகாலின்னு நினைத்திருப்பாளோ ??அப்றோம் மாமா...கல்யாண செலவு மிச்சம்னு நெனச்சிருப்பார்..எப்டியோ என்ன தேட மாட்டாங்க..

ஒரு வழியா வந்துட்டோம் ஆனா......வாழ்க்கைய பாரு...வாழ்க்கைய பாரு அப்டிங்குறான் கண்ணன்..நான் அவன தானே வாழ்க்கையா நெனச்சேன்..அதனால தானே எத்தன முறை அவன் என்ன அசிங்கப்படுத்தினாலும் நான் பொருட்படுத்தல..இனிமே அவன் கிட்ட போய் என் காதலை சொல்ல தேவையில்லை..ஏன்னா நான் அவன எவ்ளோ லவ் பண்றேன்னு என்ன விட அவனுக்கு நல்லா தெரியும்..ஆனா ஒருவேளை அந்த பொண்ணு சொன்னது உண்மையா இருந்தா ..ஐயோ கடவுளே..."

இப்படி ஏதேதோ நினைத்தபடி திரும்பிய போது, ஒரு இளைஞன் அவளை உற்று பார்ப்பது புரிந்தது..

ஐந்தரை அடி இருக்கலாம்..ஒரு வட்டத்தை வரைந்து லேசாக தாடை பகுதியை மட்டும் தட்டையாக்கி, ஒரு முகம் வரைந்தால் எப்படி இருக்குமோ அப்படித் தான் அவனும் இருந்தான்..கண்ணில் கண்ணாடி ..நீல நிற ஜீன்ஸ் ,செக்டு ரெட் ஷர்ட்..அழகன் தான்..

அவன் பார்வை அவள் மேல் பதிந்திருந்தது..சில ஆண்களுக்கோர் பழக்கம் உண்டு ..ஒரு பெண்ணின் முகத்தை  பார்ப்பதற்கு முன் அவள் பாதங்களை பார்ப்பது..

அவள் என்றோ காலில் வைத்த மருதாணி,நகம் வளர்ந்ததால் இப்போது பிறை வடிவில் இருந்தது..அவன் முதலில் பார்த்ததென்னவோ அவள் பாதங்களை தான்..இப்போது அவள் முகத்தை பார்க்கும் ஆவல் அவனுக்குள் மிகுந்திருந்தது..

"சீ..என்ன மனுஷன் இவன்..பொறுக்கி..பொம்பளைய பார்த்ததில்லையா?..என்ன சமூகம் இது?? பெண்ணை கண்டால் பேயும் இரங்குமாம்..பெண் உருவில் பேயே வந்தால் பேய்க்கும் இங்கே ஆபத்து தான்....பேயை விட கொடியவர்கள் வாழும் பூமி..

ஒரு பெண்ணை ஆறு பேர் சேர்ந்து..ஐயோ கடவுளே ..எனக்கு ஏன் இப்டி எல்லாம் தோணுது???நான் என் கண்ணனுக்கு மட்டும் தான் சொந்தம்..உயிரோடு இருந்தால் தானே கண்ட கண்ட நாயெல்லாம் நம்மை பார்க்கும் ..இல்லாம போயிட்டா..

ம்ம்...அதான் சரி..இப்டியே இல்லாம போயிடுவோம்..
என் கண்ணனுக்கு நான் வேண்டாம்...எனக்கு யாரும் வேண்டாம்..இந்த பூமியில் நான் வாழவும் வேண்டாம்.."

என்று உள்ளூர எண்ணியவள்..வெடுக்கென எழுந்தாள்..அந்த ரயில் பெட்டியின் கதவருகே சென்று நின்று கொண்டாள்..

"அம்மா...நான் உன்கிட்ட வரப்போறேன்.."என்று மனதுக்குள் முணுமுணுத்தபடி, குதிக்க முற்பட்டாள்..


"ஆ......."

(தொடரும்)

No comments:

Post a Comment