Sunday 21 December 2014

என் காதல் சொல்ல தேவையில்லை-4





யாரோ கேட்டை திறப்பது போல் இருந்தது..நிச்சயம் தேவியா தான் இருக்கும் ..மனதுக்குள் நினைத்துக் கொண்டான் கார்த்திக்..

"ஆம் அவள் தான்..ஆனால் இப்படி பரீட்சையில் தோற்று விட்டு ,ஒரு தோத்தான்கொல்லியா அவள் முகத்தில் விழிக்க வேண்டுமா.பரிகசிக்க மாட்டாள் ..ஆனாலும்..."
ஏதேதோ நினைத்து குழம்பி, மொட்டை மாடி மதில் சுவரில் சாய்ந்தபடி அமர்ந்து கொண்டான்..

"கழுத..என் கனவு எல்லாத்தையும் கலச்சிடுச்சு..அப்பன் குடிகாரன்..ஓடி போயிட்டான்..இவனாச்சு படிச்சு பெரிய மனுஷன் ஆவான்னு நம்பினேன்.ஆனா கண்ட கண்ட அனாத கழுதைகள் கூட சேர்ந்து சுத்தி இப்போ பிளஸ் டூ பரீட்சையில் கோட்டை விட்டுட்டு  நிக்குது...எல்லாம் போச்சு..."சாந்தி புலம்பி தள்ளினாள் ..அந்த புலம்பல் அதிகமானது என்னவோ தேவியின் வருகையால் தான்..

தேவி எதையும் கண்டு கொள்ள வில்லை ..கார்த்தி இப்போது மாடியில் தான் இருப்பான் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்..பேசாமல் படி ஏறினாள்..

அங்கே தனிமையில் இருந்தவனிடம் ,
"கார்த்தி.." என்பதற்குள் அவனோ கண்ணீர் சிந்த தொடங்கி விட்டான்..

அவளிடம் "நீ போ..என் கிட்ட வராதே போ .." என்று முகத்தை திருப்பிக் கொண்டான்..
அவளாவது செல்வதாவது..அங்கேயே நின்றாள்..



ஆறாவது படிக்கும் போது அம்மாவும் அப்பாவும் ஒரே விபத்தில் இறந்து போனார்கள்..."எனக்கு இனி  யாருமே இல்ல .நான் அநாதை ஆயிட்டேன்..என்னை ஏன் மா தனியா விட்டுட்டு போன ??."என்று கதறி கதறி அழுத போது அருகில் வந்து,

"அப்டி சொல்லாத தேவி..உனக்கு நான் இருக்கேன் " என்று அழுதபடியே ஆறுதல் சொன்னான் கார்த்திக்..

"எனக்கு நீ ஒன்னும் தேவையில்லை ..எனக்கு என் அம்மா அப்பா தான் வேணும் " என்று அருகில் நின்றவனை தள்ளியதில் அவன் கீழே விழுந்தான்.அப்போது அவனும் சிறுவன் தான்..ஆனால் அவளது வலியை புரிந்து கொண்டதால் மீண்டும் அவள் அருகே வந்து, அவள் தோளில் கை வைத்து ஆறுதலாய் நின்றான்.. 

அந்த கார்த்திக்கை ,இப்படி ஒரு வலி நிறைந்த தருணத்தில் தனியே விட்டு விடுவாளா தேவி..

அவன் போ என்று சொல்லியும் ,அதை பொருட்படுத்தாமல் அவன் அருகே சென்றாள்..

"என் கிட்ட வராத..எல்லாம் போச்சு ..நான் சாக போறேன்..

"லூசா டா நீ??எக்சாம்ல பெயில் ஆனா வாழ்க்கையில பெயில் ஆனதா அர்த்தம் கிடையாது..ஒரு சப்ஜெக்ட் தானே ..எழுதி எடுத்துடலாம்..அதுக்கு போயி கன்னா பின்னான்னு உளறாத..உனக்கு தெரியுமா சச்சின் டெண்டுல்கர், பில் கேட்ஸ் மாதிரி வாழ்க்கையில சாதிச்ச நெறைய பேர் பத்தாவது பெயில் ஆனவங்க தான்...ஆனா நீ தான் பத்தாவதுல ஸ்கூல் பர்ஸ்ட் ஆச்சே...அப்றோம் ஏன் கவலை படுற??நீ அவங்கள விட பெரிய ஆள் ஆவ..ஒரு பெரிய பங்களா..பெரிய கார்.....உன் கார்ல எனக்கும் இடம் கொடுப்ப இல்ல??"
அவனை பார்த்து குழந்தை போல் கேட்டாள் தேவி..

உடை பட்ட அணை விட்டு பாயும் வெள்ளம் போல் அவன் கண்களில்  இருந்து கண்ணீர் தாரை தாரையாய் வழிய, மெல்ல அவள் புறம் திரும்பி லேசாக புன்னகைத்தான்..

"ஐயோ..ஆம்பள பசங்க அழக் கூடாது டா.." என்ற படி அவன் கண்களில் வழிந்த கண்ணீர் துடைத்தாள் தேவி..

சரி இனிமே அழல..ஆனா தயவு செய்து என் அம்மா மாதிரி லெக்சர் குடுக்காத. தாங்க முடில ..."என்று சிரித்தான்..

"எரும ..பெயில் ஆனாலும் உன் நக்கல் மட்டும் குறையல பாரு..நான் கெளம்புறேன் " என்று கோபமாக  கிளம்பினாள் தேவி..

"ஹே தேவி..கோச்சுகிட்டியா??சரி சரி கோச்சுக்கோ" என்ற படி  அவள் போகும் திசையில் பார்வையை வீசினான்..அம்மா பின்னால் ஓடும் குழந்தை போல் அவள் பின்னால்  அவன் மனம் ஓடுவதை, முதல் முறையாய் உணர்ந்தான்..

தொடரும்...

No comments:

Post a Comment