Sunday 1 March 2015

என் காதல் சொல்ல தேவையில்லை .-5


Episode -5
----------------



"ஏண்டி பைத்தியமா உனக்கு??வயசு பொண்ணு யாராச்சு மொட்டை அடிச்சுக்குவாளா ??" விஜி அக்கா ராதிகாவை அடிக்க தொடங்கினாள்..

ஆம்..பைத்தியம் தான்..அவனுக்கு பிடிக்காத உருவத்தின் நிழல் என்று, தன் நிழலை தானே கல் எறிந்த பைத்தியக்காரி ..என்று உள்ளூர எண்ணிய ராதிகா ,

"இப்போ என்ன ஆயிடுச்சுன்னு அடிக்குற??மொட்டை அடிச்சா முடி வளரும்னு நீ தானே சொன்ன??" என்றாள்..

பின்னர்,அவளை அடிப்பதை நிறுத்தி விட்டு, தன் தலையில் தானே அடித்துக் கொண்டாள் விஜி..

..........................
"ஓ...அப்றோம் என்னாச்சு???" ஆர்வத்தோடு டாக்டர் கேட்க,

"ஐயோ அதுக்கப்புறம் தான் பெரிய சிக்கலே ஆரம்பிச்சுது டாக்டர்.."என்று மீண்டும் தொடர்ந்தாள் ராதிகா..

.............................
ஒரு பெரிய பங்களாவிற்கு ராதிகாவை அழைத்து சென்றாள் விஜி...அங்கே தாடியுடன் ஒரு முதியவர் வரவேற்றார்..ஒரு இஸ்லாமியர் என்பது புரிந்தது..

"தம்பி சொன்ன பொண்ணு இது தானா??"

"ஆமா பாய்"

"பயப்படாதீங்க சரி பண்ணிடலாம்.."

"என்க்கு ஒன்னும் இல்லக்கா ...எதுக்கு என்ன இங்க கூட்டிட்டு வந்திருக்க ??" என்று ராதிகா கேட்பதை  பொருட்படுத்தாமல்,


"நல்ல பொண்ணு பாய் ..இப்போ தான் கொஞ்ச நாளா இப்டி இருக்கா.." என்றாள் விஜி ,அந்த முதியவரிடம்..

அந்த அறையில் சாம்பிராணி புகை காட்டப்பட்டது..பின்னர் அந்த முதியவர் ,ராதிகாவை ஒரு  நாற்காலியில் அமர வைத்து, தன் கட்டைவிரலை அவளது நெற்றியில்  வைத்து அழுத்தி ஏதோ மந்திரங்களை முணுமுணுத்தார்..பின்னர் விஜியை பார்த்து,

நான் சந்தேகப்பட்டது சரியா போச்சு.உங்க பொண்ணு,.ராத்திரி வேளையில தனியா வரும்போது ஏதோ பிடிக்ககூடாதது பிடிச்சிடுச்சு..இத சரி செய்ய முடியும் என்ற படி கொஞ்சம் எலுமிச்சம் பழங்களை கொடுத்தார்..ஒரு காகிதத்தில் ஏதேதோ மந்திரங்கள் எழுதி அதையும் கொடுத்தார்..

"விடியற்காலை நாலு மணிக்கு பச்ச தண்ணில இந்த காகிதத்தில் ஒண்ணை போட்டு, அதில் இருக்கும் எழுத்துக்கள் நீரில் கரைந்ததும் உங்க பொண்ண அதுல குளிக்க வைக்கணும்..தலையில எலுமிச்சம் பழத்த தேய்க்கணும்..குளிச்சு முடிச்சதும் சாம்பிராணி புகை காட்டணும்..இப்டியே தொடர்ந்து 11 நாள் செய்யணும்..பிடிச்சிருக்குற பேய் இறைவன் அருளால் தானாவே விலகிடும்.." என்றதோடு நிறுத்தாமல்...அதற்கு கட்டணமாக ஆறாயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டார் அந்த முதியவர்..

-----------------------------------
"கடந்த ஒரு வாரமா என்ன இப்டி சித்ரவதை பண்றா எங்க அக்கா..இப்டியே விட்டா நான் நெஜமாவே பைத்தியம் ஆயிடுவேனொன்னு பயமா இருக்கு டாக்டர்.."விவரித்து முடித்தாள் ராதிகா..

ஏம்மா.பொண்ணு பாக்குறது அப்டிங்குறது சாதாரண விஷயம்..அதுக்கு போயி யாராவது மொட்டை அடிச்சுக்குவாங்களா ???இதெல்லாம் பேசியே புரிய வச்சிருக்கலாமே .."

"ம்ம்..புரிய வைக்க முடியாது டாக்டர்..நான் லவ் பண்றேன்..என்னை என் கண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைங்க அப்டின்னு என்னால கேட்க முடியாது..ஏன்னா..கண்ணனுக்கு தான் என்ன பிடிக்கலியே..என்னோடயது ஒரு தலை காதல்  தான்... ஆனா அதுவும்  காதல் தானே..என்னால இன்னொரு ஆணின் பார்வையை கூட ஏற்க முடியாது டாக்டர்..

"வெல்..ஒரு பொண்ணு நடந்து போனா அவளை பசங்க திரும்பி பார்க்குறதும்..ஒரு ஆணை பெண் திரும்பி பார்ப்பதும் இயல்பு..எந்த ஆணும் என்னை பார்க்கவே கூடாதுன்னு சொல்ற அளவுக்கு மனச குழப்பி வச்சிருக்கீங்க ...ரெண்டு கை தட்டினா தான் சத்தம் வரும்..காதலும் அப்டி தான்...ஒரு தலை காதலுக்கெல்லாம் இவ்ளோ feel பண்ணினா ஆபத்து உனக்கு தான்..."இன்னும் என்னென்னவோ அறிவுரை சொன்னார் டாக்டர்..

காதலுக்கு கண் இருக்கோ இல்லையோ ...நிச்சயம் காதுகள் கிடையாது..யாரவது அறிவுரை சொல்ல வந்தால் ,உண்மையான காதல் மட்டும் காதுகளை கழற்றி ஒரு ஓரமாய் வைத்து விட்டு தான் அறிவுரை கேட்கும்....தொட்ட பின் பாம்பென்றும் சுட்ட பின் நெருப்பென்றும் ,பட்ட பின் தெரிந்து கொண்டேன் என்று கண்ணதாசன் சொன்னது காதலுக்கும் பொருந்தும்..சோ, பட்டு திருந்துவது காதலுக்கு அழகு...
காதல் ஒரு வேளை காரண பெயராக கூட இருக்கலாம்..காது+இல் என்பது தமிழ் இலக்கணப்படி ஒரு வேளை 'இ'கரம் 'அ'கரமாகி த்+உ வில் ஈறு கெட்டு...ஐயோ இது என்ன தமிழ் கொலை ...தமிழறிஞர்கள் படித்தால் எனக்கு தூக்கு தண்டனை கிடைக்குமோ???

எது எப்படியோ டாக்டர் சொன்ன அறிவுரை எதுவும் ராதிகாவை அடையவில்லை..

"இங்க பாரும்மா..இப்போதைய சூழ்நிலையில் நீங்க உங்க அக்காவ விட்டு தனியா இருக்குறது தான் நல்லது..ஆபீஸ்ல ட்ரெய்னிங் ஓவர் ..சோ போஸ்டிங் எங்க?"

"ஹைதராபாத் " டாக்டர்..

"ம்ம்ம்..தேட் இஸ் பெட்டெர் ....இந்த விசிடிங் கார்ட வச்சுக்கோங்க ..ஹைதராபாத் குக்கட்பள்ளில என் அண்ணா ஒருத்தர் ஸ்கூல் நடத்துறார்..அங்கே பேயிங் கெஸ்டா நீங்க வேணும்னா தங்கிக்கோங்க..நான் அவரு கிட்ட சொல்லி வக்கிறேன்..எதாச்சு ஹெல்ப் வேணும்னா என்னை காண்டாக்ட் பண்ணுங்க.."

"தேங்க்ஸ் "டாக்டர்..

.........................................................

தொடரும்..

No comments:

Post a Comment